போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ? சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின் இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, பிரேமதாசா உட்பட,  பத்மநாபா, அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்  புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே  செத்துவிட்டார்கள்.

(“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!

(இரா.வினோத்)

காங்கிரஸ் தேசிய‌த் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தலில் சமூக நீதி, சாஃப்ட் இந்துத்துவா இரண்டையும் கூட்டி ‘வெற்றி’க் கணக்கு போட்டார். குஜராத் தேர்தலின்போது பின்பற்றிய அதே ‘ஆலய தரிசனம்’ பாணியை கொஞ்சம் மாற்றி, கர்நாடகாவில் இந்து கோயில்கள் மட்டுமல்லாமல் மற்ற மத வழிபாட்டுத் தளங்களும் படையெடுத்தார். கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்து, ஒல்லிகர், பிராமணர் உள்ளிட்ட சாதிகளின் மடங்களுக்கும் சென்று ஆசிபெற்றார். ஆனால் ராகுல் போட்ட கணக்கு தேர்தலில் பலிக்காமல் போய்விட்டது.

(“ராகுலுக்கு கைகொடுத்த சமூக நீதியும், கைகொடுக்காத‌ சாஃப்ட் இந்துத்துவாவும்!” தொடர்ந்து வாசிக்க…)

ஈரான்: சூழும் போர்மேகங்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன.

(“ஈரான்: சூழும் போர்மேகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி

இராக் அரசியல் சூழல் பற்றிய குப்பைவாத புரிதல்களைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இராக் தேர்தலில் அதன் புனித நகரில் 2 பெண்கள், அதுவும் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இராக்கில் நடந்த பொதுத்தேர்தலில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள வரலாறு காணாத வெற்றி அக்கட்சியின் சார்பில் 2 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

(“இராக்கின் புனித நகரில் முதல் முறையாக ‘சமூக நீதி’ கோரும் 2 பெண் கம்யூனிஸ்ட்கள் வெற்றி” தொடர்ந்து வாசிக்க…)

ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9.30 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

(“ஆளுநர் அழைப்பு விடுத்தார்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்கிறது; பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம்” தொடர்ந்து வாசிக்க…)

இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பின்னர் இலங்கை படையினரின் தடுப்புக்காவலில் இருந்த 280 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணமற்போனவர்களில் குறைந்தது 25 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், இவர்கள் 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாட்களில் இவர்களின் குடும்பங்களுடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பில் இறுதியாக காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பெயர் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

(“இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்ட 280 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி அமைக்கப்படும் காவிரி நிதிநீர் மேலாண்மை வாரியத்துக்கே அனைத்து அதிகாரங்களும் உண்டு, மத்திய அரசை அணுகத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கையும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே என்பதையும் ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

(“அனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு: மத்திய அரசுக்கு ‘குட்டு’: கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது.

(“முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்” தொடர்ந்து வாசிக்க…)

‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை

 

கர்நாடக சட்டசபையை விரைவாகக் கூட்டுங்கள், இல்லாவிட்டால், அரசியல் கட்சிகளின் குதிரைபேரத்துக்கு வழிவகுக்கும் என்று கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலாவுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரித்துள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில்,. 104 இடங்கள் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று நோக்கில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது 78 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி.

(“‘விரைவாக முடிவெடுங்கள்; குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்’: கர்நாடக ஆளுநருக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று (15) அஞ்சலி செலுத்தப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

(“குமுதினிப் படகு படுகொலை 33 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு” தொடர்ந்து வாசிக்க…)