இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….

அண்மைக் நாட்களில் திருகோணமலை இந்துக்கல்லூரி ‘ஆடை மரபு’ சார்ந்து முஸ்லிம் ஆசிரியர்கள் அபயா அணிய தடை விடுக்கப்பட்டு பின் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து முகப்புத்தகத்தில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நானும் முன்னெப்பொழுதுமில்லாதவாறு பங்கு பற்றியுள்ளேன். எனது கப்பியூட்டரும் ‘அழகி’யும் மக்கர் பண்ணியதால் ஆங்கிலத்தில் எனது விவாதங்களைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன். அதனால், “நீ என்ன தமிழில் பேச முடியாதா,” எனக்கூறி நான் சொன்ன முக்கியவரலாற்று குறிப்புக்களை ஒருவர் தனது போஸ்ட்டிலிருந்து வெட்டியுமுள்ளார். இவ்விவாதங்களில் இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு சில தமிழரும் தீவிரமாக பங்களிக்கின்றனர்.

(“இந்தியாவிலியங்கும் இந்து பாஸிஸ இயக்கமான ஆர். எஸ் எஸ் இன் பிடியில்….” தொடர்ந்து வாசிக்க…)

மேதினம் அறை கூவும் அறம்

இதன் குறிக்கோள் மானிட விடுதலை.
இதுவரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்ட வரலாறுகளே என்று பிரகடனம் செய்த கார்ல் மாக்சின் பிறந்த தினம் மே 6.
இரத்தம் தோய்ந்த கொடிகளை உயர்த்தி தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக நடத்திய போராட்டத்தின் நினைவுகளையும் மனித குலத்தின் இடையறாத போராட்டத்தையும் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் வலியுறுத்துவது மேதினம்.

(“மேதினம் அறை கூவும் அறம்” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் ஆட்சித் தலைவர்

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ’ என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்.

(“மக்கள் ஆட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது

(Karunakaran, Saakaran)

தேவையைப் பெறுவதற்காக எவ்வளவு தூரத்துக்கும் கீழிறங்குவது. காரியம் முடிந்ததும் உதவியவரைக் கை விடுவது மட்டுமல்ல பழித்துரைக்க முற்படுவதெல்லாம் நாகரீகக் கேடாகும். இதனுடைய நேரடி அர்த்தம், இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக இரகசியமாக ஒருத்தியுடன் கூடி விட்டு, பிறகு பொதுவெளியில் அந்தப் பெண்ணை “தாசி” என்று அம்பலப்படுத்துவதேயாகும்.

(“தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலினை இலங்கையில் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக Swiss, Germany, France போன்ற நாடுகளில் அவருடைய புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது.அதுபற்றிய விபரங்கள் பின்பு விபரமாக வெளியிடப்படும் .அவர் தற்சமயம் Germany தங்கியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் 004917675054051 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

தோழர்கள்.