மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் கைது

மெரினாவில் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகே உள்ள பாரதி சாலையில் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாகச் சென்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

(“மெரினா அருகே நினைவேந்தலுக்காக குவிந்த மக்கள்; வைகோ, திருமுருகன் காந்தி பங்கேற்பு; கடற்கரை நோக்கி பேரணியாகச் சென்றவர்கள் கைது” தொடர்ந்து வாசிக்க…)

பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு

 

பிஹாரில் தொடங்கி கர்நாடகத் தேர்தல் வரை அரசியல் மரபுகளையும், ஒழுக்கத்தையும் மீறி செயல்பட்டதால் தலைக்குனிவு சம்பவங்களை பாஜக தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்ற எண்ணுகையில், கர்நாடகாவிலும் தப்புக் கணக்கு போட்டு ஆட்சியைக் கபளீகரம் செய்ய நினைத்து பாஜக தோல்வி அடைந்துள்ளது.

(“பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு” தொடர்ந்து வாசிக்க…)

மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக..….. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று மாலை 14.30 இலிருந்து 17.30 வரை நடைபெற்றது.தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்வினை திருமதி சசிப்பிரியா ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

(“மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம்

அரசும் புலிகளும் செய்துகொண்ட சமாதன உடன்படிக்கை காலத்தில், ஆயிரக்கான தமிழர்கள் மட்டும் புலிகளால் துரோகி என முத்திரை குத்தி கொல்லப்பட்டார்கள்.

இதை விட ,முஸ்லீம்கள், சிங்களவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கொன்று குவித்த புலிகளின் வீர வரலாறு தனியானவை.

(“முள்ளிவாய்க்காலில், உயிரை தக்கவைக்க முனைந்த அனைத்து தமிழ் மக்ளுக்கும் எதிராகவே அவர்கள் துப்பாக்கிப்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)

இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது

இன அழிப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று துடியாய் துடிப்பவர்கள் நிச்சயமாக இந்த முயற்சியைக் கைவிடக் கூடாது. ஏனெனில் இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது என்பதை நவநீதம்பிள்ளையின் அறிக்கை நிரூபிக்கும். இப்படியான விசாரணை ஒன்று நடைபெற்றால் தான், தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் போவதாகப் போராடியதாகச் சொன்ன புலிகள் தங்கள் சொந்த மக்களைப் படுகொலை செய்தார்கள் என்ற உண்மைகள் எல்லாம் வெளியே வரும். தூக்கிச் சென்று ஹாக் நகரில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கு தலைவர் இல்லாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு புலிகளால் இழைக்கப்பட்ட இந்த அநீதிகள் வெளிக் கொணரப் பட வேண்டும்.

(“இன அழிப்புக் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மேல் மட்டுமல்ல, புலிகளின் மேலும் இருந்தது” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் 

ஊருக்கு நூறு பேர்.இது ஜெயகாந்தனின் நாவல்.

ஒருவன் நக்கல்பாரி இயக்கத்தில் பயிற்சி பெற செல்கிறார்.அவரை ஆயுதங்கள் சகிதம் சிலர் வந்து வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள்.பயிற்சிக்காக செல்பவர் கொஞ்சம் யோசித்துவிட்டு நீங்கள் என்னை கடத்திச் செல்வது போல உணர்கிறேன் என்றார்.அதைக் கேட்ட மற்ற தோழர்கள் சிரித்துவிட்டு ஒருவர் தனது துப்பாக்கியை பயிற்சிக்கு வந்தவரிடம் கொடுத்தார்.அவரும் வாங்கிப் பார்த்தார்.அவரையே வைத்திருக்கும்படி கூறுகிறார்கள்.அவரும் புன்னகையோடு வைத்திருக்கிறார்.வாகனம் தொடர்ந்து பயணிக்கிறது.இப்போது தோழர்கள் கேட்டார்கள்.இப்போது எப்படி உணருகிறீர்கள்.என் தோழர்களோடு தோழர்களோடு தோழர்களாக பயணிக்கிறேன் என்றார்.

(“புலிகளுக்கு எதிரான விமர்சனங்கள் ” தொடர்ந்து வாசிக்க…)

நந்திக் கடல் அருகே

இழந்து இழந்து

பின்வாங்கிப் பின்வாங்கி
இழுத்துவந்தீர்கள் இங்கு 
நந்திக் கடலருகே
நான்கு லட்சம் பேர் நாங்கள்

(“நந்திக் கடல் அருகே” தொடர்ந்து வாசிக்க…)

கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்

 

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை தனது பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் நாளை எப்படி சட்டப்பேரவை நடக்கும் எப்படி வாக்கெடுப்பு நடக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

(“கர்நாடக வாக்கெடுப்பு எப்படி நடக்கும்? சாதக பாதகங்கள் என்ன?- ஓர் அலசல்” தொடர்ந்து வாசிக்க…)

தொடங்கியது குதிரை பேரம்: எம்எல்ஏக்களுக்கு ரூ.150 கோடி வலைவிரித்த ஜனார்த்தன ரெட்டி: ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் புகார்

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம், பதவி சலுகைகளைக் கூறும் பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியின் ஆடியோ டேப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

(“தொடங்கியது குதிரை பேரம்: எம்எல்ஏக்களுக்கு ரூ.150 கோடி வலைவிரித்த ஜனார்த்தன ரெட்டி: ஆடியோ வெளியிட்டு காங்கிரஸ் புகார்” தொடர்ந்து வாசிக்க…)

அறமற்ற முறையில் அதிகாரத்தைப் பறிக்கிறது பாஜக; பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர்: சிவசேனா விளாசல்

பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா. மோடிக்கு விசுவாசமாகச் செயல்படுவதால்தான், பாஜகவைப் பதவி ஏற்க அழைத்துள்ளார். அறமற்ற வழியில் அதிகாரத்தைப் பறிப்பதுதான் பாஜகவின் புதிய கொள்கையா என்று சிவசேனா கட்சி கேள்விகளால் விளாசியுள்ளது.

(“அறமற்ற முறையில் அதிகாரத்தைப் பறிக்கிறது பாஜக; பாஜகவின் பணிவான ஊழியர் கர்நாடக ஆளுநர்: சிவசேனா விளாசல்” தொடர்ந்து வாசிக்க…)