மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!

(அ. குமரேசன்)

ஊடகத் துறையில் இயங்கிக்கொண்டிருப்பதில் மனநிறைவு, பெருமை என்பதையெல்லாம் தாண்டி ஒரு கர்வம் கொண்டவன் நான். யாரையும் கேள்வி கேட்க முடிகிற வாய்ப்பால் வளர்ந்த கர்வம் அல்ல, சமுதாய மாற்றத்தில் ஒரு மையமான பாத்திரம் வகிக்கிற ஊடகத்தில் ஒரு சிறு புள்ளியாகவேனும் இருக்கிறோம் என்ற உணர்வால் ஏற்பட்ட கர்வம் அது. அந்தக் கர்வம் தகர்ந்து கூசிப்போய் நிற்கிற தருணங்களும் ஏற்படுவதுண்டு. ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் திரைப்படப் பெண்கள் சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அத்தகைய தருணங்களில் ஒன்று. (“மீ டூ: ஊடக கர்வம் உடைகிற தருணம்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை நெருக்கடி ….. எனது பார்வையில்

2015 ம் ஆண்டு இடம்பெற்ற  ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தல் இரண்டிலும் நல்லாட்சி தேசிய அரசாங்கத்துக்காகவே மக்களிடம் வாக்கு கேட்கப்பட்டு மக்களாணை பெறப்பட்டது. மக்களின் ஆணையை மதித்து தேசிய அரசாங்கத்தை நடாத்த முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் போது மீண்டும் மக்களிடம் செல்வதே சரியான ஜனநாயக முறையாக இருக்க முடியும். தேசிய அரசாங்கத்தை தொடர முடியாத நிலைக்கு மைதிரிக்கும் ரணிலுக்கும் சம பொறுப்பு உண்டு. மைத்திரி
ஜனநாயக விரோதி , நான் ஜனநாயகவாதி  என்ற ரணில் தரப்பு வாதம் ஏற்புடையது அல்ல.
(“இலங்கை நெருக்கடி ….. எனது பார்வையில்” தொடர்ந்து வாசிக்க…)

தீர்ப்புக்கு மூன்று வாய்ப்புகள்

(கே. சஞ்சயன்)

ஒக்டோபர் 26ஆம் திகதி – ஒரு வெள்ளிக்கிழமை; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்த ஒரு பெரும் குழப்பத்துக்கு, இன்றைய நாள் – வெள்ளிக்கிழமை, முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு, பரவலாகக் காணப்படுகிறது. அரசமைப்பைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்தடுத்து எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும், சிக்கல்களாகவே மாறின. மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக, நியமித்ததன் மூலம், ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நெருக்கடி, அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை முடக்குவதிலும் பின்னர், அதைக் கலைப்பதிலும் போய் முடிந்தது.

(“தீர்ப்புக்கு மூன்று வாய்ப்புகள்” தொடர்ந்து வாசிக்க…)

சுயநிர்ணய உரிமையை நினைவுகூரும் டிசெம்பர் 06

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறாகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு, வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாள்கள், முக்கியமானவை. சில நாள்கள், ஏனைய நாள்களைவிட முக்கியமானவை. அந்த நாள்கள் வரலாற்றின் திசைவழியை, அரசியல் சித்தாந்தத்தை, சமூக அசைவியக்கத்தை என, எல்லாவற்றையும் புரட்டிப் போடும் தன்மையுடையவை. (“சுயநிர்ணய உரிமையை நினைவுகூரும் டிசெம்பர் 06” தொடர்ந்து வாசிக்க…)

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை

சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் நிறைவடைந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், ஒழுங்குப்பத்திரத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவதற்கு, இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

’பின்புலத்தில் சம்பந்தனும் மேற்குலக நாடுகளும்’

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளுக்குப் பின்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இ​தேவேளை, இந்நெருக்கடி நிலைமையினை சாதகமாக்கிக்கொண்டு சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘26ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானது’

நாட்டுக்காக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (04) மாலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தையும், ஐக்கிய தேசிய கட்சியை​யும் நாசமாக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்

டெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதற்கு, புதிய கட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி முடிவு கட்டியது டெல்லியில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை மட்டும் சேர்க்கவில்லை. (“காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்” தொடர்ந்து வாசிக்க…)

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை

(அ. அகரன்)

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல் என்பது அமைந்திருக்க வேண்டும்.

(“மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.மு இறுதித் தீர்மானம்

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பில், இன்று (03) இரவு, ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லையென, ஐக்கிய தேசியக் கட்சி அடங்கலான ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றார். அவ்வாறாக, இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.