ஈழப் போராட்ட இயக்கங்களது ஐந்தொகையைச் சிறு குறிப்பாக…

தமிழ்பேசும் மக்கள் தங்கள்மீதான இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கு -இனப்படுகொலைக்கு எதிராகப் போராடத் தம் புதல்வர்களை அனுப்பியதும் , தாம் சேர்ந்து தோள் கொடுத்ததும் இதுவரையான வரலாறுதாம் .இயக்கங்கங்கள் தமது இயக்க இருப்புக்காகக் கட்டாயப்படுத்தி இளைஞர்களைச் சிறார்களை யுத்தக் களத்துக்கு அனுப்பிப் பல்லாயிரக் கணக்காய்ப் பலியெடுத்ததும் ஈன வரலாறுதாம். (“ஈழப் போராட்ட இயக்கங்களது ஐந்தொகையைச் சிறு குறிப்பாக…” தொடர்ந்து வாசிக்க…)

முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேட்டி

கே. ஒக்ேடாபர் 26ஆம் திகதி முக்கிய தீர்மானத்தை மேற்கொண்ட போது நிலைமை இந்தளவு சிக்கலாகும் என்று எப்போதா வது நினைத்தீர்களா?

ப. இல்லை. ஒருபோதும் இல்லை. அப்படி சிந்திப்பதற்கான எந்தக் காரணமும் இருக்கவில்லை. மக்கள் அதற்கான பொறுப்பினை ஏற்றுச் செயற்படுவார்கள் என்ற நம்பிக்ைகயில்தான் அந்த முடிவை எடுத்தேன். அந்தப் புரிதலின் அடிப்படையிலேயே எனது முடிவு அமைந்திருந்தது.

(“முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு

பயன்பாட்டு எல்லை மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்

இரணைமடுவை அண்டிய கிராமங்கள் தண்ணீரின்றி தவிக்க, நன்நீர் மீனவர்கள் தாம் கவனிக்கப்படுவதில்லை எனக் கருதுகின்றனர். ‘இரணைமடு விவசாயிகள் நெற்செய்கைக்கு அப்பால் பயறு, கௌபி, உளுந்து, சோளம், நிலக்கடலை போன்ற உப உணவு பயிர்ச்செய்கையில் ஆர்வமின்றி காணப்படுகின்றனர். இந் நீர்த்தேக்கத்தால் ஏழு ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவதாக கூறப்பட்டாலும் சில நூறு விவசாயில்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களாக விளங்குகின்றனர்.’

(“இரணைமடு” தொடர்ந்து வாசிக்க…)

மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே

மேற்குலகும் அதன் உள்ளூர் ஆதரவாளர்களும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ‘ஜனநாயகம்’ என்ற சொற்பதத்தை ஒரு சாக்காக பயன்படுத்துகின்றன என்று ஐக்கிய நாடுகளின் அமைப்பில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கடமையாற்றிய தமரா குணநாயகம் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கூறினார்.

(“மேற்குலகுக்கு ‘ஜனநாயகம்’ சொற்பதம் மட்டுமே” தொடர்ந்து வாசிக்க…)