இலங்கைக்கான Salam Air விமான சேவை ஆரம்பம்

ஓமானின் சலாம் விமான நிறுவனமானது, இலங்கைக்கான நேரடி விமானசேவையை ஆரம்பித்துள்ளது. ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான விமானசேவையையே Salam Air நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, திங்கட்கிழமை, புதன், வௌ்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களுக்கு இந்த விமானசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தோழர் பத்மநாபாவின் 68வது (19.11.2019) பிறந்த தினம்.

(Ragu Shanthy)

எமது பாசமிகு தோழனும் நேசமிகு ஆசானுமாகிய தோழர் க.பத்மநாபாவிற்கு இன்று 68 வயது. அவரது அரசியல் பயணமும் தலைமைத்துவமும் மிகவும் சரியானது என்பதை அவர் இல்லாத இன்றைய சூழல் எமக்கு நன்கு உணர்த்துகின்றது.

’அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கவும்’

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சு.கவின் மத்திய கொழும்பின் முன்னாள் அமைப்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுடமான பைஸார் முஸ்தபா, சிறுபான்மை சமூகத்தினரது உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் பிரதமர் மதிப்பளித்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.

’தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்’

தமிழ்மக்கள் கற்றுக்கொண்ட பாடங்களுக்கு அமைய இனியாவது சிந்திக்க வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி: மீண்டும் ஒரு தோல்வி

(இலட்சுமணன்)

இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு சொல்லும் சேதி

(சாகரன்)

7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வெளியாகியுள்ளது ஓரளவு எதிர்பார்த்த முடிவாக அமைந்தாலும் முதன்மை வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ, சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த நிலையில் 13 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் கோட்டாபாய ராஜபக்ஷ இன் வெற்றி என்பது எதிர்பாரத்ததை விட அதிகமானதுதான். கூடவே ஜே.வி.பி அனுர குமார திசநாயக்க குறைந்தது 10 இலட்சம் வாக்குகளையேனும் பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 4 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளை மட்டும் பெற்றிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

நல்லிணக்க அலுவலக பொறுப்புகளிலிருந்து சந்திரிகா விலகினார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தவிசாளர் பதவியிலிருந்து விலகினார். நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தினால் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அதன் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டார்.

நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சர்களின் நியமனமும் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

’அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்’ – த.தே.கூ

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இடைக்கட்டு பகுதியில் வெடிபொருள்கள் மீட்பு

வள்ளிபுனம் – இடைக்கட்டு கிராமத்தில், கடத்தலுக்கு தயாரான நிலையில் இருந்த 52 கிலோ 800 கிராம் வெடிப்பொருள்கள், நேற்று (19) சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இடைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞர் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.