இடைக்கட்டு பகுதியில் வெடிபொருள்கள் மீட்பு

வள்ளிபுனம் – இடைக்கட்டு கிராமத்தில், கடத்தலுக்கு தயாரான நிலையில் இருந்த 52 கிலோ 800 கிராம் வெடிப்பொருள்கள், நேற்று (19) சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இடைக்கட்டு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இளைஞர் கைப்பற்றப்பட்ட வெடிபொருள்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.