கல்வி அமைச்சின் புதிய, செயலாளர் யார் தெரியுமா..?

தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்!
மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த. தமிழ்மொழி பரீட்சையாகும். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி வந்தது தந்தை-மகன் இருவருமாகும். அவர்கள் இருவரில் ஒருவர் நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரியினால் நிறுத்தப்படுகின்றார்.

பிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள் கட்டுரை- கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!

கொரில்லா போர் முறையால், கியூபாவின் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், இறுதிநாள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக எரியவைத்து, கியூபாவை தன்னாட்சி, தன்னிறைவு பெற்ற நாடாக உயர்த்திக் காட்டிய ஃபிடல் என்ற போராளியின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 13, 1926) இன்று.

மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்?

மாகாணசபை தேர்தல் நடைபெறும்வரை ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏமாற்றப்பட்டார் மைத்திரி…?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எவ்வித அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவில்லை.

யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான். தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர். அதில்தான் பலருக்குச் சந்தேகம் இருந்தது.

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும்

(என்.கே. அஷோக்பரன்)

தேர்தல் முடிந்துவிட்டது; ராஜபக்‌ஷக்கள் பெரும்பான்மைப் பலத்தோடு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். புதிய கட்சி தொடங்கி, நான்கு வருடங்களில், இலங்கையின் பாரம்பரிய தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இருக்குமிடம் தெரியாமல் செய்து, ‘மொட்டுக் கட்சி’ என்று விளிக்கப்படும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை​க் கைப்பற்றி இருக்கிறது.

வெற்றிக்கு உதவாத திலகருக்கு தேசிய பட்டியல் வழங்குவது எப்படி?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு முன்னாள் எம்.பி திலகர் எந்தவகையில் உதவவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், எனவே அவருக்கு எப்படி தேசிய பட்டியலை வழங்குவது எனவும் கேள்வி எழுப்பினார்.

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை இன்று (12) முற்பகல் கண்டி மகுல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது. பதவியேற்புக்கான ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டு நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகியிருந்தன. இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துள்ள 26 அமைச்சர்கள் மற்றும் 39 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அத்துடன், மாவட்ட இணைப்புக்குழு தலைவர்களுக்கான நியமனமும் வழங்கப்பட்டது.

கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக ரஷ்யா அறிவிப்பு

ரஷ்யா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.