இலங்கையில் தேர்தல் முடிந்தது

(Kanniappan Elangovan)

தமிழர் தரப்பில் அரசியல் என்ன என்பதை அறியத் தேடினால் கதிரையைக் களவாடிவிட்டனர் என்கிற கதைதான் கேட்குது. அரசியல், உரிமை, கோரிக்கை, தீர்வு என எதையும் கேட்க இயலாமல் உள்ளது..

திருவிழா முடிந்தது… சோற்றுக்கு என்ன வழி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

தேர்தல் திருவிழா முடிந்தது. தேர்தல் வாக்குறுதிகளும் இத்தோடு முடிந்துபோம். இனிக் கொஞ்சம் நிதானமாகச் சிந்திப்போம். கொவிட்-19 தொற்றுக் காலத்தில், இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த ஒருமாத கால தேர்தல் பிரசாரங்கள், நெருக்கடிகளை உருமறைப்புச் செய்து, மக்களின் கவனத்தைக் கச்சிதமாகத் திசைதிருப்பி இருக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றாக, இலங்கையர்களைப் பாதிக்கும். அந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு, நாம் தயாராக இருக்கிறோமா?

28 ஆவது பிரதமராக பதவியேற்றார் மஹிந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு களனி ரஜமஹா விகாரையில் இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மக்களின் ’கூட்டமைப்புக்கான செய்தி’

வடக்கு, கிழக்கு மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ​செய்தியைக் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம், த.தே.கூ தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதே இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெயசீலன் இராஜினாமா

திருகோணமலை, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் புத்திசிகாமணி ஜெயசீலன், தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை, திருகோணமலை பிரதித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்துக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

’த.தே.கூவின் பின்னடைவை பொறுப்பேற்கிறோம்’

நடந்து முடிந்துள்ள தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்பதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு: கலையரசனுக்கு தேசியப்பட்டியலில் இடம்

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

தேர்தல் வெற்றி வாய்ப்பை தீர்மானிப்பது: மக்களின் விருப்பு வாக்கா…? வேறு சிலரின் விருப்பங்களா…?

(சாகரன்)

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் முடிந்து இது பற்றிய ஆய்வுகள், ஆராய்ச்சிகள், ஆனந்தங்கள், கோவங்கள் என்று நாலு திசைகளிலும் பொறி பறந்து கொண்டு இருக்கின்றது. ஏதோ ஒரு தேர்தல் முடிந்து கடந்து போனது போன்ற அதிர்வுகளை இத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திவிட்டுப் போகவில்லை.

பொதுத் தேர்தலில் மொட்டு அமோக வெற்றி

இலங்கையின் 09ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்றுள்ளது. நாடு முழுவதும் 19 தேர்தல் மாவட்டங்களைக் கைப்பற்றியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 128 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கைப்பற்றியுள்ளது.

2.30 மணிக்கு முதலாவது பெறுபேறு

பொதுத் தேர்தலில் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.