தோழர் தாமஸ் சங்காரா

“உங்கள ஆப்ரிக்காவின் சேகுவேரானு சொல்றாங்களே அத பத்தி என்ன சொல்றீங்க? என்று தாமஸ் சங்காராவிடம் கேட்கப்பட்ட பொழுது ” சே 39 வயது வரை வாழ்ந்தார் நான் அதுவரை வாழ்வேன் என்று நம்பிக்கை இல்லை என்றார்”.

கிரிகட்டர் முத்தையா முரளி..! இந்த நொடியில் என் மனதில்…


“கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார்.

முரளிதரனும், விஜய்சேதுபதியும்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னைநாள் வீரரும், உலகத்தில் பெயர்பெற்ற சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா-முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை 800எனும் திரைக்காவியமாக படைக்கவுள்ள நிலையில் அப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக முரளிதரன் பாத்திரமேற்று நடிக்கிறார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களூடாக விஜய்சேதுபதிக்கான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும்,இழிவுகரமான பதாதைகளையும் வெளியிட்டு பெரும்பாலான தமிழர்கள் இதனை சமகாலத்தில் எதிர்க்கின்றார்கள்.

(Rathan Chandrasekar)

ஜனநாயகம் என்பது –
‘கருத்துச் சுதந்தரம் என்பது –
‘மனித உரிமை’ என்பது –
தமக்கு ஒவ்வாத குரலையும் –
தமக்கு எதிரான கருத்தையும்
அனுமதிப்பதுதான்.

20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான அலையொன்று, ஆளுங்கட்சிக்குள் இருந்து, எழுந்து வரும் காட்சிகளைக் கடந்த சில வாரங்களாகக் காண முடிகின்றது. அதுபோல, அமரபுர, ராமன்யா பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர்கள் பேரவை ஆகியவைகூட, 20ஆவது திருத்தச் சட்டமூலம் கைவிடப்பட்டு, புதிய அரசமைப்பொன்றை நோக்கி, அரசாங்கம் நகர வேண்டும் என்று கோரியிருக்கின்றன.

காவிரி ஆறு பற்றிய நல்ல தகவல்

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் – பிறந்து வளர்ந்தது – MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
“சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?” என்றார்.

மட்டு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அதிரடியாக பதவி நீக்கம்; மேய்ச்சல் தரை விவகாரத்தையடுத்து நடவடிக்கை

மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார். இதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம்

புதிய தாக்குதல்களை ஆரம்பித்ததாக அஸார்பைஜான், ஆர்மேனிய இனப் படைகள் ஒன்றையொன்று மாறி மாறி நேற்று குற்றஞ்சாட்டிய நிலையில், நாகொர்னோ-கரபாஹ் தொடர்பிலான கடும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டு நாள்கள் மனிதாபிமான யுத்தநிறுத்தம் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

ரிஷாட் தலைமறைவு ; இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ​கொன்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள் 2 என்பனவும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனைக் கைதுசெய்யுமாறு, நேற்றைய தினம் பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துபாயில் இருக்க இடம் இல்லாமல் பொது பூங்காவில் காலத்தை கழிக்கும் இலங்கை தொழிலாளர்கள் இலங்கை அரசு கண்டுகொள்வதே இல்லை..

(Siyana Siyana)

தங்கி இருக்க இடமில்லாமல் உணவுக்கு வேறு வழி தெரியாமல் உயிரை பாதுகாத்துக்கொள்ள பொது பூங்காவில் தங்கியிருந்து வாழ்க்கையை கடத்தும் அப்பாவி ஏழைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் துபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.