துபாயில் இருக்க இடம் இல்லாமல் பொது பூங்காவில் காலத்தை கழிக்கும் இலங்கை தொழிலாளர்கள் இலங்கை அரசு கண்டுகொள்வதே இல்லை..

குறித்த இலங்கையர்களுக்கு தங்குமிட உட்பட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பூங்காவில் தங்கி உள்ளனர் அவர்களில் பலர் மூன்று மாத விசிட் விசா பெற்று துபாய்க்கு சென்றவர்கல் ஆவார்கள் அங்கு சென்று தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்த போதிலும் தொழில் பெற முடியாமல் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது தொழில் ஏதும் கிடைக்காமல் இருக்கின்ற அவர்கல் இலங்கைக்கு திரும்பி வர முடியாமல் அங்குமிங்கும் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசின் மந்த போக்கின் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் உண்ணுவதற்கு கையில் பணமில்லை நாட்டுக்கு வருவதற்கு விமானம் இல்லை குடும்பத்தை கண்காணிப்பதற்கு ஆள் இல்லை இந்த நிலைமையில் திண்டாடும் இவர்களை அரசு கண்டு கொள்வதே இல்லை.

ஆறு மாத காலமாக பொறுத்திருந்து பார்த்த அவர்கள் பிச்சை எடுத்து உண்ணுவதை விட வேறு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள் அரசு தனக்கு தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் அறிந்தவர்கள் வசதி உள்ளவர்களை அழைத்து கொண்டு வந்த பிறகு விமான நிலையத்தை மூடி வைத்துகொண்டு இருக்கிறது ஏழை மக்கள் வர முடியாமல் திண்டாடுகிறார்கள்.

அவர்களுக்கு உதவுவதற்கு ஆளில்லை அரசம் கண் திறந்து பார்ப்பது இல்லை கட்டார் துபாய் குவைத் ஓமான் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வேலைவாய்ப்பு பெற்று
வேலையிழந்த இலங்கையர்கள் என பலர் உண்ண உணவின்றி, தங்குவதற்கு இடமின்றி டுபாயில் உள்ள சத்வா பூங்காக்களில் பல வாரங்களில் எந்த வித உதவிகளுமின்றி தங்கி வருகின்றார்கள்.

டுபாய் காவலத்துறையினர் இவ்வாறு தங்குவதற்கு இடமின்றி அவதிப்படுபவர்களை தங்காலிக மாற்று இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்ற போதும் அங்கு போதிய இடவசதியின்மையினால் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் பூங்காக்களில் தங்கி வந்த 21 இலங்கையர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தற்காலிக முகாம்களுக்கு டுபாய் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கையில் கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள சூழ்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை மீள் அழைத்து வருவதை இலங்கை அரசும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதனால் இவர்கள் மேலும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திலிருந்து இதுரை 9000 இலங்கையர் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இன்னும் 6000 பேர் வரை இதுவரை தாய்நாடு செல்ல முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

டுபாய் பூங்காக்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் காரியால உதவியாளர் வேலை செய்தவர், கிராபிக்ஸ் டிசைனர், வீட்டுப் பணிப் பெண்கள் என பலரும் அடங்குகின்றனர்.