இலவசக் கல்வியின் தந்தை (Father of free education)

C.W.W.கன்னங்கராவின் 136வது பிறந்த தினம் இன்று 13ந் திகதி ஆகும்.
மனிதனின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலான மனிதர்களின் வாழ்வு பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றபடி அமைந்துள்ளது. இவ்வாறு கோடானுகோடி மனிதர்கள் அன்று முதல் இவ்வுலகிற்கு வந்து சென்று விட்டார்கள். அவர்களது தடயமே இவ்வுலகில் இல்லை. அதேநேரம் சில மனிதர்களின் வாழ்வு மனித வரலாற்றில் அழியாத்தடம் பதித்தவையாக அமைந்திருக்கின்றது.

கொரோனா நெருக்கடியால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமை காரணமாக, மாத்தளை மற்றும் அதனை அண்மித்த நகரங்களில், வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன.

அரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

இன விடுதலை, தேச விடுதலை, அரசியல் உரிமை என்று மேடைகளில் முழங்கினாலும், தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் வெற்றிக்காகவும் பதவிக்காகவும், எவ்வளவு மட்டகரமான வேலைகளையும் செய்வதற்கு அரசியல்வாதிகள் தயங்குவதில்லை.

வடிவேலுவுக்கு நன்றி சொல்வோம்………….. !

வடிவேலுவின் பிறந்தநாள் அன்று அவருக்கு வாழ்த்துகளும், நன்றிகளும் சமூகவலைத்தலங்களில் குவியும். ஆனால் அன்று மட்டுமல்ல; இன்றும் (10/10/2020) அவருக்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லி நாம் மகிழ்வோம் என்கிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்.அதற்காக அவர் சொல்லும் காரணங்கள்…………. 10/10 என்பது மன நலத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமான எண். அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலக மன நல நாள். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் மன நலம் தொடர்பான விழிப்புணர்வை உலக சுகாதார நிறுவனம் பரவலாக எடுத்துரைத்து வருகிறது.

பழங்கள்ளின் போதைதர ‘பாட்டனார்’ இருக்கின்றார்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையில் சமாதானத் தூதுவராகப் பணியாற்றிய எரிக் சொல்ஹெய்ம் பங்குபற்றிய, நிகர்நிலை கலந்துரையாடல் ஒன்று, சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. ‘தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற அமைப்பு நடத்திய இந்தக் கலந்துரையாடல், ‘இன்றைய பூகோள அரசியல் இயங்குநிலையில் ஈழத்தமிழரின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் எரிக் சொல்ஹெய்ம், வி. உருத்திரகுமாரன், ஊடகவியலாளர் ஐயநாதன், பேராசிரியர் கிருஷ்ணா, நெறியாளராக பூகோள அரசியல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் பங்குகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை ‘யூடியூப்’பில் பார்வையிட முடியும்.

“திரைக்கு பின்னால்”முதல் மரியாதை”

“எப்படியும் இந்தப் படம் ஓடாது.அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…”என்று பாரதிராஜாவிடம் பணம்வாங்க மறுத்தாா் இளையராஜா !முதல் மரியாதை 1985 ஆம்ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும் .இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.!

கடலை கண்டதில்லையா மலையக இளைஞர்கள்?

(மஹேஸ்வரி விஜயனந்தன்)

அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று மனித உயிர்க​ளின் பெறுமதியை உணர்ந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

கிழக்கில் அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்குத் தடை

உடன் அமுலுக்கு வரும் வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வகையான பிரத்தியேக வகுப்புகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹாம்பத் பணிப்புரை வழங்கியுள்ளார்.

‘பொருள்களைக் கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தாதீர்கள்’

“யாழ்ப்பாணத்தில் போதியளவு அத்தியாவசியப் பொருள்கள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தேவையற்ற வகையில் பொருள்களைக் கொள்வனவு செய்து, செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்” என்று யாழ்ப்பாணம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.