‘பொருள்களைக் கொள்வனவு செய்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தாதீர்கள்’

இது தொடர்பில் அக்கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்ததாவது, “கொரோனா வைரஸ் சமூகத் தொற்றுக் காரணமாக, நாடு முடக்கப்படும் என்ற சந்தேகத்தால், அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்கள் அதிகளவாகக் கொள்வனவு செய்கின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது.

“இந்த நடவடிக்கை தேவையற்றதொன்று. யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், தற்போதைய சூழலில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருள்கள், அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கையிலிருப்பில் உள்ளன. அது மட்டுமன்றி, கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துவரப்படுகின்றன.

“ஆகையால், அநாவசியமாகப் பொருள்களைக் கொள்வனவு செய்து, செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம்.

“அது மட்டுமன்றி, ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் பொருள்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிக்கும் திட்டத்துக்கும் வர்த்தகர்கள் தயாராகவே உள்ளனர். எனவே, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்”எனவும் கேட்டுக்கொண்டார்.