மேலும் 354 பேருக்கு தொற்று உறுதியானது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் இன்று(30) இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 38,697ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 42 417 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7599 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 34 623 பேர் குணமடைந்துள்ளனர்.