மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது. அது ஜனநாயக செயற்பாடுகளில்  அடிப்படையை மீறுவதாகும் என  முன்னாள் மத்திய மாகாண சபைத் தலைவர், துரை மதியுக ராஜா தெரிவித்தார். இன்று (19)  கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துறைமுக நகருக்கு மக்கள் செல்லலாம்

கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் பொதுமக்களுக்காக திறக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரந்த கடல் பகுதியை நிரப்ப கட்டப்பட்டது கொழும்பு துறைமுக நகரம் 269 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. சீன துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், முதல் கட்ட கட்டுமானத்தின் 99 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் துறைமுக நகர இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கடுமையாக குறைந்த கொரோனா மரணங்கள்…. நாட்டில் மேலும் 560 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 526,223 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 468 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  480,097 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் வலுக்கும் போராட்டம்

அனைத்து பணியிடங்களிலும் சுகாதார அனுமதி அட்டை கட்டாயம் என்பதை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, இத்தாலியின் ரோம் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், சில இடங்களில் பொலிஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் இலக்குவைத்துப் படுகொலை

பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை இலக்குவைத்து படுகொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சமீபத்திய நிகழ்வில் அவர்கள் ஒரு பள்ளியில் இரண்டு சிறுபான்மை வகுப்பு ஆசிரியர்களை படுகொலை செய்துள்ளனர்.

மனைவிக்காக பெற்றோர்களை ஒதுக்காதீர்கள்!!! உண்மைச் சம்பவம்?

தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்…

புதுடெல்லியுடன் நெருக்கும் ராஜபக்‌ஷர்கள்: கூட்டமைப்பின் நிலை என்ன?

(புருஜோத்தமன் தங்கமயில்)

சீர்கெட்டிருந்த இந்தியாவுடனான உறவைப் புதுப்பிக்கும் முடிவுகளுக்கு, ராஜபக்‌ஷர்கள் வந்திருக்கிறார்கள். சீனாவை மட்டும் நம்பியிருந்த ராஜபக்‌ஷர்கள், இந்தியாவை வேண்டாத பங்காளியாகவே இதுவரை காலமும் கையாண்டு வந்திருக்கிறார்கள். 

இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய சுற்றுலா பயணிகள்

சுமார் 1,000 ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வருவதற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்த மாதம் இலங்கை வருவார்கள் என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

சடுதியாக சரிந்தது தொற்றாளர் தொகை. நாட்டில் மேலும் 542 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 525,479 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், இன்றையதினம் 447 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை  479,629 ஆக அதிகரித்துள்ளது.

முறைகேடுகளின் மையமா கிளிநொச்சி?

(கருணாகரன்)

முறைகேடுகளின் மைய மாவட்டமாக கிளிநொச்சி மாறிவிட்டது. “அப்படியென்றால் அங்கே நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதா?” என்ற கேள்வி உடனடியாக உங்களுக்கு எழலாம். ஆனால் இது உண்மையே.