புலம்பெயர் தமிழர் சீனாவை நாடுவதாக இந்தியா கவலை

இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து  புலம்பெயர் தமிழர்கள்  சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக ஹிந்து செய்திப்பத்திரிகை செய்தி ​வெளியிட்டுள்ளது.   

கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று, சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கின் புதிய ஆளுநர் பதவியேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் பதவியேற்றார்.

தாய்வான் விரைவில் சீனாவுடன் இணையும்

தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும்  நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சபதம் ஏற்றிருக்கிறார்.

பொருளியலுக்காக 3 பேருக்கு நோபல் பரிசு

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜொஷ்வா டி அங்ரிஸ்ட், கியூட்டோ இம்பென்ஸ் ஆகியோருக்கு பொருளியல் விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசு பகிரிந்து அளிக்கப்பட்டுள்ளதாக நோபல்  பரிசுக்குழு அறிவித்துள்ளது.

தேடப்பட்ட திமுக எம்.பி சரண்

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தேடப்பட்டு வந்த நிலையில்,திராவிட முன்னேற்ற கழக  எம்.பி., ரமேஷ் இன்று 11 ஆம் திகதி  பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டேவிட் ஐயாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் (11.10.2021)

எஸ். ஏ. டேவிட் (S. A. David) அல்லது டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட் ஐயா 1924 ஏப்ரல் 24 ந் திகதி பிறந்தார்.இவர் ஒரு கட்டடக் கலைஞர் ஆவர். இலங்கையில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து 1977 ஆம் ஆண்டில் காந்தியம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். புலம் பெயர்ந்து சென்னையில் வாழ்ந்து வந்தவர்.

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன். நான் இங்கு யாரையும் குறை கூறவில்லை.

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு

புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது.

பட்டுப்பாதை

சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் முதல் வளர்ந்த மேற்கத்திய நாடு இத்தாலி.

கொரோனா மரணங்கள் வவுனியாவில் அதிகரிக்க என்ன காரணம்?

(க. அகரன்)

உலகினை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் உலக வல்லரசுகளே ஆட்டம் கண்டுள்ள நிலையில், இலங்கையில் 2020ஆம் ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவல் நிலையை அடைந்திருந்த போதிலும் அதன் உயிரிழப்பு வீதம் குறைவாகவே காணப்பட்டது.