இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய சுற்றுலா பயணிகள்

இம்மாதம் மாஸ்கோவிலிருந்து கொழும்பு செல்லும் அனைத்து இலங்கை விமானங்களையும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி ரஷ்யா மற்றும் இலங்கை இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கியது.

அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது ஒவ்வொரு வாரமும் ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கொழும்புக்கு நேரடி விமானத்தை இயக்குகிறது. 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யுஎல் 534 விமானம், மாஸ்கோவிலிருந்து அக்டோபர் 9, அக்டோபர் 16, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 30 ஆகிய திகதிகளில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.