24 சந்தேகநபர்கள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர், தம்புள்ளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலை தொடர வேண்டுமா?

(Janaki Karthigesan Balakrishnan)
இலங்கையில் இனத்தால், மொழியால் மனிதர் பலியாகி, மதங்களால் மனிதர் பலியாகும் படலம் ஆரம்பித்துள்ளது. அவற்றை செய்திகளாகவும், வதந்திகளாகவும், ஊகங்களாகவும் பரப்பி, பின் அவற்றின் தாக்கங்களை கவிதைகளில் வடித்தெடுத்தும், இலக்கியங்களில் படைத்தும், வரலாற்றுக் காவியங்களுமாக்கிச் செல்கின்றோமே தவிர, இவற்றை எப்படித் தவிர்ப்பது, அறவே ஒழிப்பது என்பதற்கான செயற்பாடுகள் ஏதுமின்றி, தொடர்ந்தும் அல்லலுறுகின்றோம், தவிக்கின்றோம்.

இலங்கையில் அமைதி நிசப்த்தம் நிலவுகின்றது

இலங்கையில் நடைபெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் கைதுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதுவரை இச்சம்பவம் யாரால் நடாதப்பட்டது என்ற உத்தியோக பூர்வ அறிவிப்பு வரவில்லை. நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு அமைதியான சூழலில் உள்ளது. அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயற்படுவதாக அறிய முடிகின்றது. வெளிநாடுகள் தமது ஆதரவை இலங்கை அரசிற்கு தெரிவித்தும் வருகின்றனர். ஊடகங்கள் நிதானமாக தமது செய்திகளை இதுவரை சமூகப் பொறுப்புடன் வெளியிட்டு வருகின்னர். இன மத சமூக வேறுபாடுகள் இன்றி ஒருவருக்கு ஒருவர் உதவியாக அனுசரணையாக இலங்கை மக்கள் இருக்கின்றனர். வாழ்க சகோதரத்துவம்

இலங்கை குண்டு வெடிப்பும் அதன் தொடர்ச்சியும்

(சாகரன்)

யேசு உதிர் எழுந்தார் என்று நம்பப்படும் ஈஸ்ரர் ஞாயிறு அன்று இலங்கையில் 9 இடங்களில் கத்தோலிக்க தேவாலயம் உல்லாசப் பயணிகள் தங்கும் இடம் உல்லாசப்பயணிகள் அதிகம் பார்வையிடும் இடங்களில் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நீர்கொழும்பு மட்டக்களப்பு என மக்கள் அதிகம் கூடுவார்கள் என்று எதிர்பார்கப்பட்ட இடங்களில் நேரங்களில் இந்த பலமிக்க குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுவரை இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்ததாகவும் ஐநூறிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அறிய முடிகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவர். சந்தேகத்தின் பெயரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதான செய்திகளும் வருகின்றன.

Sri Lanka imposes curfew after at least 207 killed in attacks Blasts target churches and hotels in Sri Lanka on Easter Sunday

Live updates: Sri Lanka church and hotel explosions
At a glance: what we know so far
Jason Burke and Benjamin Parkin in Delhi

Devastating aftermath of Sri Lanka’s Easter Sunday church blasts – video
Authorities in Sri Lanka have launched a massive security operation and imposed a curfew after a wave of bombs in churches and hotels in Sri Lanka killed at least 207 people and injured 450.

இலங்கையில் குண்டு வெடிப்பு

உயிர்த்த ஞாயிறில் மூன்று தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலயம், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம்,நீர்கொழும்பு புனித செபஸ்ரியர் தேவாலயம் ஆகிய இடங்களில் இக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் சில விடுதிகளிலும் இடம்பெற்றிருப்பதாக அறிய முடிகிறது. நண்பர்கள் இயன்றவரை அவதானமாகவும், முடிந்தவரை உதவியாகவும் இருங்கள்.
Explosion at Zion Church in Batticaloa. Many killed including Children…

6 இடங்களில் வெ​டிப்புச் சம்பவம்

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், கட்டுவான ​தேவாலயம், கிங்க்ஸ்பரி ஹோட்டல், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட் ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ​ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 50 பேருக்கு ​அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவகின்றனர். 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்ல?


வடக்கு மாகாண சபையை ஊடாக எதையும் செய்யாது கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லர் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.
யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

வேண்டாம் சாதி மத இன பேதங்கள்

காதலுக்காக திருகோணமலையில் ஒரு கொலை.இவை நமது சமூகத்தில் புதியவை அல்ல.சில வருடங்கள் முன்பாக காதல் விவகாரத்தால் கனடாவிலும் ஒரு இளைஞன் கொல்லப்பட்டான்.

பாரிஸ் Notre Dame எரிகிற செய்தி கேள்விப்பட்டபோது நினைவுக்கு வந்தது


வந்தது 2010ல் வெளிவந்த #சிவத்தம்பியும் #நாற்பது #கோமாளிகளும் படத்தில் வந்த பின்வரும் காட்சிதான். George குருச்சேவ் ஆங்கிலத்தில் எழுதிய Nutty Professor and Forty Evil Clowns என்ற புத்தகத்தின் தழுவல்.