தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 03)

(Thiruchchelvam Kathiravelippillai)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தம்பலகமம் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த குரு மற்றும் அவருடன் உடன் களப்பணியாற்றிக் கொண்டிருந்த உதயன் ஆகியோர் கிண்ணியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அப்துள் மஜீத் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட புகாரியில் கலந்துகொள்வதற்காக தம்பலகமத்திலிருந்து புறப்பட்டார்கள். தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த அரச புலனாய்வாளர்களுக்கு குறிப்பாக மொசாட் வழிகாட்டலில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சந்தர்ப்த்தை தவறாது பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அதற்கான காய்நகர்த்தல்களை எதுவித பிசிகுமின்றி செய்வதற்கு தம்மால் பயிற்றப்பட்டவர்களை ஏற்கனவே பொதுமக்களுடன் வாழ்வதற்கு அனுப்பியிருந்தது அரச இயந்திர புலனாய்வு.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 03)” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு

சம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பெருந்தோட்டத் தொழிற்துறையையும் பாதுகாப்பது தொடர்பான பொவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடலுக்கு சகல தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தனி நபர்களுக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது.

(“கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தூண்டில் இரைகள்

(கே.எல்.ரி.யுதாஜித்)

இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது.

(“தூண்டில் இரைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!

கலைஞர் தொடர்பாக ராம் எழுதி நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் நான் வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் எங்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் கடைசி நேரத்தில்த்தான் அவரை நாடியது போன்று அர்த்தம் தொனிக்கும் வகையில் எழுதப் பட்டிருக்கின்றது. அது மிகத் தவறானது. அதனைத் திருத்தும் வகையில் நான் கீழே குறிப்பிட்டுள்ளதை பதிப்பிப்பதுடன், அதனை எழுதிய ராமுக்கும் இந்தத் தகவலை அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(“அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!” தொடர்ந்து வாசிக்க…)

500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதென, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது என்றும், திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு” தொடர்ந்து வாசிக்க…)

வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு

(எம். காசிநாதன்)
அடல் பிஹாரி வாஜ்பாய், 1957இல் இருந்து, பத்துமுறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்; இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தெரிவானார். வெளியுறவுத்துறை அமைச்சராகவும் மூன்று முறை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தவர். இவரின் மறைவால், ‘சிறந்த நாடாளுமன்ற வாதி’ ஒருவரை, இந்திய ஜனநாயகம் பறிகொடுத்திருக்கிறது.

(“வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு” தொடர்ந்து வாசிக்க…)

காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத பேய் மழை பெய்து வருகிறது, மழை இன்னமும் கூட ஒய்ந்தபாடில்லை எனும் நிலையில் ஞாயிறு முதல் மழைக் குறையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டு முதற்கட்டமாக ரூ.500 கோடி நிவாரணம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

(“காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

‘படையினர், முகாம்கள் குறைப்பு விவகாரம் சூடுபிடித்தது ’

சிறிசேன, விக்கிரமசிங்க அரசாங்கம், ஜெனீவாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய இராணுவத்தினரைப் பழிவாங்கி வருவதாக குற்றஞ்சாட்டிய ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை அபகரிப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது என்றார்.

இராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் குறைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது தொடர்பில், நாடாளுமன்றத்தில், நேற்று (18) கேள்வியெழுப்பி, கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘படையினர், முகாம்கள் குறைப்பு விவகாரம் சூடுபிடித்தது ’” தொடர்ந்து வாசிக்க…)

மலையகம்: பெரு மழை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்

பதுளை – கொழும்பு பிரதான ரயில் போக்குவரத்து பாதையின், அட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை சுரங்கப் பகுதிக்கு அருகாமையில், 109ஆவது மைல் கட்டைப்பகுதியில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, மலையக ரயில் சேவைகள் தாமதமாகி சென்றன. அதன் பின்னர் பாதிப்பு ஏற்பட்ட தண்டவாளங்களை சீர்செய்யும் பணிகளில், ரயில்  நிலைய ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டன. தற்பொழுது தண்டவாளங்கள் சீர்செய்துள்ளதோடு, மலையகத்துக்கான ரயில் சேவை வழமைக்கு மாறியுள்ளதாக, அட்டன் ரயில் நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

(“மலையகம்: பெரு மழை காரணமாக ரயில் சேவைகள் தாமதம்” தொடர்ந்து வாசிக்க…)

‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன…?’

அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை, இரகசியமான முறையில், தொலைபேசி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான்  பெர்ணான்டோ பொது மக்களைக் கேட்டுக்கொண்டார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் – தலைமைப் பொலிஸ் நிலையத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

(“‘யாழில் வன்முறைகள் குறைந்துள்ளன…?’” தொடர்ந்து வாசிக்க…)