தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்

(க. அகரன்)

‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை.

(“தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்” தொடர்ந்து வாசிக்க…)

திருகோணமலையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

திருகோணமலையில் இன்று நடைபெற்ற தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக பெண்களின் பிரசன்னம் அதிகமாக இருந்தது. இதில்  கட்சியின் தலைவர் சுகு சிறீதரன் உரையாற்றினார் ஊழல் அற்ற வினைத்திறன் மிக்க உள்ளுராட்சி நிர்வாகத்தை ஏற்படுத்த தாம் செயற்படப் போவதாக இதில் மக்கள் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மக்களுடன் இணைந்து மக்களுக்கான ஆட்சியை அமைகப் போவதாக முன்னாள் வடக்கு கிழக்குமாகாண முதல் அமைச்சர் வரதராஜப் பெருமாள் தனது உரையில் தெரிவித்தார் மேலும் திருகோணமலை நகர சபையின் முதன்மை வேட்பாளர் சத்தியன் சிவகுமார் தான் தொடர்ந்தும் திருகோணமலை மக்களுடன் இணைந்து பல்வேறு மக்களுக்கான பணிகளை செய்துவருவதாகவும் பாடசாலைப் பிள்ளைகளுக்கான உபகரணங்கள் சீருடைகள் பெண்தலைமத்துவக் குடும்பங்களுக்கான செயற்திட்டங்கள் இளைஞர்களை சமூகத்தில் முன்னிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார். கூடவே தன்னுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றிவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்பவர்களையும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்

முன்னணியின் முக்கியமான மாற்றம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன.  இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது.

(“முன்னணியின் முக்கியமான மாற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 4

(ஏற்கனவே பதிவான பகுதிகள் 1 , 2 – பெண்களுக்கான இடஒதுக்கீடு , 3 – பெண்பிரதிநிதிகள் நேர்காணல் விமர்சனம்)

வேட்பாளருக்குத் தேவையான தகுதி தராதரங்கள்

பெண் வேட்பாளரின் 25% நியமன அவசியம் காரணமாக அதிகம் கல்வி கற்காத பெண்களும், கடந்த போர்க்கால அனுபவத்தைத் தவிர்ந்து, தற்போதைய உள்நாட்டுத் தேவைகளை முன்னெடுக்க முடியாதவர்களும் கூட போட்டியிட வருகிறார்கள் என்று தமிழ் பிரதேசத்தில் ஒரு சிலர் முறையிடுவதாக அறிகிறேன். இது நியாயமானதா என்று சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது. நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், மெதடிஸ்ட் மிஷனரிமார் நிர்மாணித்த பாடசாலையில் கற்றவள் ஆதலாலும், இது போன்ற முறையீடுகள் அதிகமாக பிரித்தானிய காலனித்துவத்திலும், அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியாதவர்களிலிருந்து வெளிப்படுவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே சிறீலங்கா அரசியல் வழமை இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களிடமும் இருந்து தான் வரும் என்பதையும், அநேகமாக வடபிரதேசத்தில் யாழ் வளைகுடாவிலிருந்தே வரும் என்பதையும் உணர்கிறேன். இதற்கு அடிப்படைக் காரணம் இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் கல்வி வளத்தில் குன்றியவர் அல்ல, எந்த இக்கட்டான நேரத்திலும் கல்வி மறுக்கப்பட்டவரோ, இடை நிறுத்தப்பட்டவரோ அல்ல.

(“சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 4” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.

(அ.விஜயன்)
இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையினரும் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி மக்களை பார்வையிட்;டு வருகின்றனர். Ministry of home affairs இல் இருந்து 8 உயர் அதிகாரிகள் முகாம்களைப்பார்க்க விஜயம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து தமிழக அகதிகள் மறுவாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கத்தினருடன் இணைந்து முகாம்களை தை 5ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை பார்த்து வருகின்றனர்.

(“தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.” தொடர்ந்து வாசிக்க…)

இன்றைய இலங்கை அரசியல் யதார்த்தம்

பேரினவாத-மக்கள் விரோத-தரகு முதலாளிகளின் அரசுக்கு,

தமிழ்த் தேசியத்தின் எதிர்ப்புக்குரலே ஒரேயொரு எதிர் சக்தியாக தற்போது விளங்குகிறது!

இந்த எதிர்ப்புக் குரலை கைவிடும் போக்கு என்பது, இந்த அரசுடன் கூட்டுச்சேர்ந்து இயங்குவது என்ற பொருளையே தரும்…

(“இன்றைய இலங்கை அரசியல் யதார்த்தம்” தொடர்ந்து வாசிக்க…)

‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’

‘நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள இனப்பிரச்சினை தொடர்பில், தந்தை செல்வா முதல் சம்பந்தன் ஐயா வரை அனைவரும் பேச்சுவார்தைகளில் ஈடுபட்ட போதிலும், இதுவரை இறுதி முடிவு கிடைக்காமைக்கு, பேரினவாத தேசிய கட்சிகளே காரணம்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

(“‘இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டாமைக்கு பேரினவாத தேசியக் கட்சிகளே முட்டுக்கட்டை’” தொடர்ந்து வாசிக்க…)

‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’

“சூழ்நிலையைத் தவறவிடாது, தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்” என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’” தொடர்ந்து வாசிக்க…)

நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி

(கே. சஞ்சயன்)
எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து,  ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நிகழ்த்திய உரையின் போது கூறிய முக்கியமான ஒரு விடயம்.   வயோதிபர்களுக்குத் தலைவர் பதவியை வழங்க முடியாது என்ற சிவசக்தி ஆனந்தனின் இந்த நிலைப்பாடு, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். (“நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி” தொடர்ந்து வாசிக்க…)

சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 1

சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பாளர் மனுதாக்கல் நிறைவேறி, சகல கட்சிகளும் தத்தம் தேர்தல் விஞ்ஞாபனம் சகிதம், தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தமிழ் பெண்ணாக, எனது நோக்கமும் அதுபற்றிய ஆய்வும் விமர்சனமும் தமிழ் பெண்கள் சார்ந்ததாகவே அதிகமாக இருக்கும் என்பதால், தலைப்பை அதற்கேற்ப மட்டுப்படுத்திக் கொண்டேன்.

(“சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 1” தொடர்ந்து வாசிக்க…)