தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம்.

(அ.விஜயன்)
இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையினரும் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி மக்களை பார்வையிட்;டு வருகின்றனர். Ministry of home affairs இல் இருந்து 8 உயர் அதிகாரிகள் முகாம்களைப்பார்க்க விஜயம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து தமிழக அகதிகள் மறுவாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கத்தினருடன் இணைந்து முகாம்களை தை 5ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை பார்த்து வருகின்றனர்.


முதலாவது குழு திருவள்ளுர், வேலூர். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், கடலூhர், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள முகாம்களையும்
இரண்டாவது குழு கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு,கரூர்.நாமக்கல்,திண்டுக்கல்,திருச்சி,புதுக்கோட்டை,பெரம்பூர்;. ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள முகாம்களையும்
மூன்றாவது குழு மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி,ராமநாதபுரம்,சிவகங்கை,கன்னியாகுமரி,திருநெல்வெலி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள முகாம்களையும் பார்வையிட திட்டமிட்டு பார்த்த்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து அதிகாரிகள் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளமை அகதி மக்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
முகாம்களில் இதுவரை தீர்க்கப்டாமல் இருந்த பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பும்,தாயகம் திரும்ப கப்பலுக்காக காத்திருக்கும் ஒரு தொகுதி மக்கள் கப்பல் விடுவது தொடர்பாகத்தான் அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்துள்ளார்கள் என்ற பேச்சுகளும் முகாம்களில் ஒலித்த வண்ணமே உள்ளன.
இதுவரை அதிகாரிகள் பார்வையிட்ட சில முகாம்களில் உள்ள மக்கள், தங்கள் முகாம்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதுடன,; தாயகம் திரும்புதலுக்கு கப்பல் விடுவது தொடர்பாகவும் கேட்டுள்ளனர்.கப்பல் விடும் பட்சத்தில் பெருவாரியான மக்கள் நாடு திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாக கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டூர் முகாம் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாயகம் திரும்பும் பட்சத்தில் தாயகத்தில் தங்களது வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப தங்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்றும்,எங்களது சொந்த இடத்தில் காணி வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
தாயகம் திரும்பவிரும்புகிறவர்கள்,தமிழகத்திலே இருக்க விரும்புகிறவர்கள் என இருவகைப்பட்ட எண்ணங்களை உடையோர் முகாம்களில் வாழ்கிறார்கள்.தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தின் மூலமாகவும்.தங்களது சொந்தச் செலவிலும் முகாம்களில் உள்ள மக்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பியவண்ணம் உள்ளார்கள்.
விமானம் மூலம் தாயகம் திரும்புவது என்பது கப்பலுக்கு ஏற்ற எண்ணிக்கை இல்லாத காரணத்தால்தான் அவ்வழியை தாயகம் திரும்புகிறவர்கள் தேர்வு செய்கிறார்கள்.கப்பல் விடுவது தொடர்பான தீர்க்கமான முடிவுகளை இந்திய,இலங்கை அரசுகள் எடுத்;து, தாயகம் திரும்பும் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் தாயகம் திரும்புகிறவர்கள் எண்ணிக்;கை அதிகாரிப்புதுடன் தாயகம் திரும்பும் மக்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்கும்.
நம்மக்கள் தாயகம் திரும்புதலில் நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.அண்மையில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் என்ற இடத்தில் ஒரு நாள் மதியம் நடந்து செல்கையில் ஓர் வயது முதிர்ந்த அம்மா ஒரு மரத்தடியே உட்காந்து இருந்தார் அவர் அருகே கையினால் தள்ளும் குப்பை வண்டி ஒன்று நின்றது.
ஆழ்ந்த யோசனையில் இருந்த அந்த அம்மா அருகே சென்றேன்.என்னை இலங்கையர் என அறிந்த அந்த அம்மா தான் கண்டியில் இருந்ததாகவும்,சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் தாயகம்(இந்தியா) திரும்பியதாகவும் தங்களது பூர்வீகவே இதே ஒக்கூர்தான் என்றார்.
ஏன் அம்மா குப்பை அள்கிறீர்கள் எனக்கேட்டேன். தொழில் இல்லை சொந்த பந்தம் பார்ப்பதில்லை நாங்கள் வெள்ளக்காரன் காலத்தில் இலங்கைக்கு பொளைக்க போனோம்.நீண்ட நாட்கள் இலங்கையில் இருந்ததால் எனது இடத்தை என் சொந்தங்களே அபகரித்து விட்டார்கள் என்றார்.
முகாம்களில் உள்ள மக்களுக்கும் இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் என்;னுள் தொற்றியது.
தாயகம்(இலங்கை) திரும்பினால் முகாம்களில் உள்ள மக்கள் சொந்த நாட்டில் வாழ்கிறோhம் என்ற உணர்வு ஏற்படும் நம் நாட்டின் ஒரு குடிமகனுக்கு உள்ள சகல உரிமைககளும் எமக்கும் கிடைக்கும்.
அந்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமையுமாகும்
தமிழக அகதிகள் முகாம்களில்; இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள்
திடீர் விஜயம்.
அ.விஜயன்
இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையினரும் இணைந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி மக்களை பார்வையிட்;டு வருகின்றனர்.
ஆinளைவசல ழக hழஅந யககயசைள இல் இருந்து 8 உயர் அதிகாரிகள் முகாம்களைப்பார்க்க விஜயம் செய்துள்ளனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து தமிழக அகதிகள் மறுவாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கத்தினருடன் இணைந்து முகாம்களை தை 5ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை பார்த்து வருகின்றனர்.
முதலாவது குழு திருவள்ளுர்,வேலூர்.கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம்,விழுப்புரம்,கடலூhர்,திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள முகாம்களையும்
இரண்டாவது குழு கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு,கரூர்.நாமக்கல்,திண்டுக்கல்,திருச்சி,புதுக்கோட்டை,பெரம்பூர்;. ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள முகாம்களையும்
மூன்றாவது குழு மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி,ராமநாதபுரம்,சிவகங்கை,கன்னியாகுமரி,திருநெல்வெலி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள முகாம்களையும் பார்வையிட திட்டமிட்டு பார்த்த்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து அதிகாரிகள் முகாம்களுக்கு விஜயம் செய்துள்ளமை அகதி மக்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
முகாம்களில் இதுவரை தீர்க்கப்டாமல் இருந்த பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பும்,தாயகம் திரும்ப கப்பலுக்காக காத்திருக்கும் ஒரு தொகுதி மக்கள் கப்பல் விடுவது தொடர்பாகத்தான் அதிகாரிகள் டெல்லியில் இருந்து வந்துள்ளார்கள் என்ற பேச்சுகளும் முகாம்களில் ஒலித்த வண்ணமே உள்ளன.
இதுவரை அதிகாரிகள் பார்வையிட்ட சில முகாம்களில் உள்ள மக்கள், தங்கள் முகாம்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதுடன,; தாயகம் திரும்புதலுக்கு கப்பல் விடுவது தொடர்பாகவும் கேட்டுள்ளனர்.கப்பல் விடும் பட்சத்தில் பெருவாரியான மக்கள் நாடு திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாக கோயம்புத்தூர் மாவட்டம் கோட்டூர் முகாம் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாயகம் திரும்பும் பட்சத்தில் தாயகத்தில் தங்களது வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப தங்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்றும்,எங்களது சொந்த இடத்தில் காணி வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
தாயகம் திரும்பவிரும்புகிறவர்கள்,தமிழகத்திலே இருக்க விரும்புகிறவர்கள் என இருவகைப்பட்ட எண்ணங்களை உடையோர் முகாம்களில் வாழ்கிறார்கள்.தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் ஸ்தாபனத்தின் மூலமாகவும்.தங்களது சொந்தச் செலவிலும் முகாம்களில் உள்ள மக்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பியவண்ணம் உள்ளார்கள்.
விமானம் மூலம் தாயகம் திரும்புவது என்பது கப்பலுக்கு ஏற்ற எண்ணிக்கை இல்லாத காரணத்தால்தான் அவ்வழியை தாயகம் திரும்புகிறவர்கள் தேர்வு செய்கிறார்கள்.கப்பல் விடுவது தொடர்பான தீர்க்கமான முடிவுகளை இந்திய,இலங்கை அரசுகள் எடுத்;து, தாயகம் திரும்பும் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் தாயகம் திரும்புகிறவர்கள் எண்ணிக்;கை அதிகாரிப்புதுடன் தாயகம் திரும்பும் மக்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்கும்.
நம்மக்கள் தாயகம் திரும்புதலில் நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும்.அண்மையில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் என்ற இடத்தில் ஒரு நாள் மதியம் நடந்து செல்கையில் ஓர் வயது முதிர்ந்த அம்மா ஒரு மரத்தடியே உட்காந்து இருந்தார் அவர் அருகே கையினால் தள்ளும் குப்பை வண்டி ஒன்று நின்றது.
ஆழ்ந்த யோசனையில் இருந்த அந்த அம்மா அருகே சென்றேன்.என்னை இலங்கையர் என அறிந்த அந்த அம்மா தான் கண்டியில் இருந்ததாகவும்,சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் தாயகம்(இந்தியா) திரும்பியதாகவும் தங்களது பூர்வீகவே இதே ஒக்கூர்தான் என்றார்.
ஏன் அம்மா குப்பை அள்கிறீர்கள் எனக்கேட்டேன். தொழில் இல்லை சொந்த பந்தம் பார்ப்பதில்லை நாங்கள் வெள்ளக்காரன் காலத்தில் இலங்கைக்கு பொளைக்க போனோம்.நீண்ட நாட்கள் இலங்கையில் இருந்ததால் எனது இடத்தை என் சொந்தங்களே அபகரித்து விட்டார்கள் என்றார்.
முகாம்களில் உள்ள மக்களுக்கும் இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சம் என்;னுள் தொற்றியது.
தாயகம்(இலங்கை) திரும்பினால் முகாம்களில் உள்ள மக்கள் சொந்த நாட்டில் வாழ்கிறோhம் என்ற உணர்வு ஏற்படும் நம் நாட்டின் ஒரு குடிமகனுக்கு உள்ள சகல உரிமைககளும் எமக்கும் கிடைக்கும்.
அந்த மக்களை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமையுமாகும்