தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம்.

(“தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?” தொடர்ந்து வாசிக்க…)

பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது

தலித் அர்ச்சகர்களிடமிருந்து பிரசாதம் வாங்க ஆணவ ஜாதியினரில் ஒரு சாரர் மறுப்பதாக கேரளாவிலிருந்து செய்தி வருகிறது.

“பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகரானால், கோவிலில் இருப்பது சாமியே அல்ல, வெறும் கல்தான் என்று பார்ப்பனர் பிரச்சாரம் செய்யத்தொடங்கிவிடுவார்கள்” – என்று பெரியார் சொன்னது எத்துனை உண்மை என இன்று புலப்படத்தொடங்கிவிட்டது.

(“பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு

யாழில் தொடரும் கனமழையால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளாதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, இதுவரையில் 2,518 குடும்பங்களை சேர்ந்த 9,141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 04 வீடுகள் முழுமையாகவும் , 159 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன.

(“யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

லஷ்மி குறும்படம் – விமர்சனம்

ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம்.ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால்அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத்தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டைஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக்கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச்சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப்பயன்படும்.

(“லஷ்மி குறும்படம் – விமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்தாதே! அமைச்சர் றிசாத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்

தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்துகின்ற நடவடிக்கைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக முடிவுறுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பிரதேசமான ஆலையடிவேம்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் கிளை அலுவலகம் ஒன்று கட்சி சார்ந்த அரசியல் செயற்பாட்டுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.

(“தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்தாதே! அமைச்சர் றிசாத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), நாடாளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை 3:02க்குச் சமர்ப்பிக்கப்படும்.

(“மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வட கிழக்கில் புதிய அரசியல் தலமைகள்

அண்மைக்காலமாக TNA யின் சரணாகதி அரசியல், வட, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் பல உடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. எதிரணியினர். பல புதியவர்கள். புதிய கட்சிகள் உருவாகி/உருவாக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பலமான சக்திகளாக வளரும் வாய்ப்பு இருக்குமோ தெரியவில்லை. ஏற்கனவே வடக்கில் டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் எனச் சிலர் உள்ளனர். அவர்களின் அண்மைக்காலப் பலவீனங்கள்/பிரச்சினைகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை. கிழக்கில் இப்போது புதிய குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இதனிடையில் சுரேஷ் பிரமேச்சந்திரன். அவதானிப்போம். மக்கள் எண்ணப்போக்கை அறிய முயல்வோம். – விஜய்

(“வட கிழக்கில் புதிய அரசியல் தலமைகள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!!

இன்றுகாலை வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மகாநாட்டில்..

(“தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!!” தொடர்ந்து வாசிக்க…)

எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?

இங்கு நாங்கள் வேலை செய்யும் இடங்களில் வரும்
வாடிக்கையாளர்களுடன் பேசிப்பழகி நட்பு
கொள்வதுண்டு அவர்கள் பெருமையாகச் சொல்வார்கள்,
இலங்கைத்தமிழர்கள் புலிகள் , புலிகளின் தலைவன்
பிரபாகரன் என்று, தமிழ் மொழி என்று ஒன்றிருப்பதை
அறியாதவர்களுக் கூட பிரபாகரன் யார் என்பது தெரியும்,
அப்படியிருக்க தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும்
பிரபாகரனின் பெயரை சேர்த்தவர் என்று ஒருவரை
பாராட்டி கொண்டாடுகிறார்கள், , வெட்கமே இல்லாமல்
இப்படிஎப்படிச் சொல்ல முடிகின்றது,
வெளிச்சம்அடித்து இதுதான் சூரியன்
என்று காட்டுவது போல் உள்ளது! (“எங்களுக்குச் சொந்தமான கச்சதீவை தமிழகத்துடன சேர்ப்பதற்கு சீமான் யார்?” தொடர்ந்து வாசிக்க…)