தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கான, அனைத்து முற்சிகளையும் “புளொட்” மேற்கொள்ளும்- பா. உறுப்பினர் திரு.சித்தார்த்தன்..!!

இன்றுகாலை வவுனியாவில் உள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) செயலதிபர் அமரர் உமா மகேஸ்வரனின் நினைவாலயத்தில், “புளொட்” அமைப்பின் அரசியல் பிரிவான “ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்” (டி.பி.எல்.எப்) மத்தியகுழுக் கூட்டம் நடைபெற்றதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மகாநாட்டில்..

புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றிய போது.,

கடந்த சனிக்கிழமை ரெலோ, தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஆகியன இணைந்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தோம்.

அதிலே அடிப்படையில் எல்வோரும் இணைந்தே பயணிக்கவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பு தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள நாங்கள் பலமாக இருக்க வேண்டும் என்பதனையும் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக எதிர்வரும் 12-11-2017 கூடவிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும்.

அதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தேர்தலில் தனியாக போட்டியிடப் போவதாகவும் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாது என்னும் தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.

இருந்த போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையாமல் இருப்பதற்கு சுரேஸ்பிரேமச்ந்திரன் உடன் பேசுமாறு, சம்பந்தன் ஐயாவிடம் கோரிக்கை விட உள்ளேன். அத்துடன் இப்பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்வில் மட்டக்கிளப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் அரசியல் அமைப்பான ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணனியின் பொதுச்செயலாளர் ஆனந்தி, உப தலைவர்களில் ஒருவரான சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.