லஷ்மி குறும்படம் – விமர்சனம்

ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம்.ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால்அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத்தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டைஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக்கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச்சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப்பயன்படும்.

தவறை நியாயப்படுத்துவது சமூகம் மேலும் சீரழிவிற்கே கொண்டு செல்லும்.இந்தச் சமூகத்தில் ஒருவன் மற்றொரு பெண்ணுடன் தொடர்புவைத்திருப்பதற்குச்சொல்லும் காரணத்தை, ஒரு பெண்ணைச் சொல்ல வைத்து அந்த ஆணின்தவறை நியாப்படுத்துவதுடன், தவறு செய்ய நினைக்கும்பெண்களுக்குத்தூண்டுதலையும் இந்தப் படம் தருகிறது. இந்தப் படத்தின் மீதான கடும் விமர்சனம்இங்கே தான் அடங்கி இருக்கிறது.

“தினமும் காலைல எந்திருச்சி ஆபிஸூக்கு போய்ட்டு வேலைய முடிச்சுட்டுவீட்டுக்கு வந்து.. ஆயிரம் முறை சுத்தற மாதிரி சுத்துற கிரைண்டர்மாதிரிஅலுப்பான வாழ்க்கை வாழ்ந்தால் யாருக்குத்தான் தப்பு பண்ண தோணாது.எனக்கும் தோணுச்சு”

இந்த வசனம் தப்பை தூண்டும் வகையில் தான் எழுதப்பட்டிருக்கிறது. இந்தத்தவறுக்கு பாரதியார் கவிதைகள் பயன்படுத்தியது வேதனைக்குஉரியவிஷயமாகும். இன்றைய சமூகத்திற்கு எது நீதியோ அதுவே நீதியாகும்,நேற்றைய சமூகத்தின் நீதிகள் இன்றைய சமூகத்திற்கு ஒத்துவராது, அதேபோல்நாளை சமூகத்தை யூகித்து இன்று அதனைக் கடைப்பிடிப்பதும் தவறாகும்.ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் செய்யும் தவறு,அந்தக்குடும்பத்தை மிகவும் பாதிக்கும். குடும்ப உறவை கொண்டுள்ள இன்றையசமூகத்தில் இது ஆபத்தான விளைவையே ஏற்படுத்தும்.

குடும்ப உறவை முன்வைத்து, செய்யப்படுகிற எந்தக் கொடுமையையும்எதிர்க்கக்கூடாது என்பதற்காக இவைகளைச் சொல்லவில்லை. அது வேறுஇதுவேறு. அதே போல் பாலியல் சுதந்திரத்தைப் பற்றியும் இங்கேவிவாதிக்கப்படவில்லை.

ஆனால், இந்தப் படம் பாலியல் சுதந்திரத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டதாஎன்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. அது தனியொரு விவாதம்.இங்கேஒன்றை மட்டும் குறிப்பிடலாம். பாலின சுதந்திரம் என்றால் ஒருவன் அல்லதுஒருத்தி மற்றொரு ஒருத்தி அல்லது ஒருத்தனுடம் ஒன்றுபட்டுமுடிவெடுக்கும்சுதந்திரமாகக் குறுக்கிடக் கூடாது. சமுகக் கட்டுபபாடற்ற முறையில்தனித்தனியாக முடிவெடுப்பதை இந்தச் சுதந்திரம் குறிக்காது. ஒருஆண் தன்மனைவி இறந்துவிட்டால், மற்றொரு பெண்ணை மணந்து கொள்வதற்கு உள்ளபாலின உரிமை பெண்ணிற்கும் இருக்க வேண்டும் என்றுகூறுவதாக அமையவேண்டும். அதுவே பாலின சுதந்திரமாகக் கொள்ள முடியும். அதே போல்குடும்பத்திற்குள் ஒரு பெண்ணையோ, ஆணையோகட்டாயப்படுத்திப்பிணைத்துவைக்கக்கூடாது, அவ்விருவர்களுக்குச் சமமான சுதந்திரமும்உரிமையும் இருக்க வேண்டும். சிலர் எனது விமசர்சனத்தைப்பத்தாம்பசலிதனம்என்று கூறக்கூடும். ஆனால் குடுப்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பிணக்குஇருந்தாலும், அதனைப் பொருத்துக கொண்டு, இணைந்துவாழ வேண்டும் எனறுகூறுவதே பத்தாம்பசலிதனம் என்று கூறுவேன்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்

அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதயக் கன்ன உரைப்பது கேட்டிரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,

ஓது பற்பல நூல்வகைக் கற்கவும்,

இலகு சீருடை நாற்றிசை நாடுகள்

யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே

திலக வாணுத லார்நங்கள் பாரத

தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.

இவ்வாறு தான் பாரதியார் கூறியிருக்கிறார். வீட்டில் ஓர் பொந்தில் வளர்வதைப்பெண்கள் ஒழித்து, வெளியில் சென்று உழைத்திடும் வழிவகையையே பாரதிகூறியுள்ளார். இதற்கு மாறாக வெளியில் சென்று உழைக்கும் பெண்கள், தமதுஇயந்திர வாழ்க்கையின் அலுப்பைப் போக்கிக் கொள்ளத் தப்புச்செய்யப் பாரதியார்வழிவகைக் கூறிடவில்லை. இதற்குப் பாரதியாரைப் பயன்படுத்துவது அவர்கவிதைக்குச் செய்யும் துரோகமாகும்.