கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்

காவிரி நதி ஊற்றெடுக்கும் குடகு மலைப் பகுதி, துளு மொழி பேசும் குடகு இனத்தவரின் பாரம்பரிய பூமி. காவேரி அவர்களது குல தெய்வம்! குடகு மக்கள், இன்று அழிந்து வரும் திராவிட மொழியொன்றை (துளு?) பேசுகின்றனர். அது தமிழ், மலையாளம், கன்னடம் மூன்றுக்கும் மூல மொழியாக இருக்கலாம். பெங்களூர் நகரம் ஒரு தமிழ் மன்னனால் ஸ்தாபிக்கப் பட்டது. சோழர்கள் காலத்தில் இருந்து பெங்களூரில் தமிழர்களின் வரலாறு தொடங்குகின்றது. (அனேகமாக அந்தத் தமிழர்கள் பிற்காலத்தில் கன்னடர்களாக மாறி இருக்கலாம்.)

(“கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்.

புலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால் இந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் நாட்டின் தண்ணீர் (கண்ணீர்) அபத்தம்!

எனக்கு புரியாத விடயத்தில் ஒன்று, யார் தீர்க்கதரசி என்பதே. காரணம் தான் வாழ்ந்த காலத்து யதார்த்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு கவிபாடிய எட்டயபுரத்து ஏந்தல், மகா கவி பாரதி பாடிய கவிதை. அவரின் ‘’சிந்து நதி இன்மிகை’’ பாடலில் மொத்த இந்தியாவையும் நதிநீரால், பண்டமாற்றால் மட்டுமல்ல சிங்கள் தீவையும் சேது பாலம் கொண்டு இணைக்க விரும்பியவர். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஏந்தல் செய்யாதவர் இன்று செய்யும் சிறுமதி செயல் கண்டு சித்தம் கலங்குகிறது.

(“தமிழ் நாட்டின் தண்ணீர் (கண்ணீர்) அபத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

வவுனிக்குளம் குடியேற்றம்

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் பல இடங்களில் குடியேற்ற திட்டங்கள் உருவாகின.இவை டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் திட்டமிட்ட இன விரிவாக்க நோக்கமாகவே உருவாகின.இதன் அடிப்படையில் வட பகுதிகளிலும் குடியேற்ற திட்டங்கள் உருவாகின.இதில் முதன்மையானது இரணைமடுஅவை ஆதாரமாக கொண்ட கிளிநொச்சி குடியேற்ற திட்டம்.இதை முன்னின்று செயற்படுத்தியவர் முன்னாள் சாவகச்சேரி பா.உ வே.குமாரசாமி அவர்களாவார்.

(“வவுனிக்குளம் குடியேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேயந்த வேலிகள்..(32)

(குறிதப்பியதால் உருக்குலைந்த குடும்பம்)

ஆகஸ்ட் 14, 2006ம் நாள் வள்ளிபுனம் பெண்கள் பயிற்சிமுகாம் மீதானதாகுதலை தொடர்ந்து , மாணவர்களை மாணவர்களாகவே வைத்து போர் பயிற்சி கொடுக்கும் திட்டத்தை புலிகள் கைவிட்டனர். ஆனால் பாடசாலைகளில் மாணவர்களை தங்களுடன் இணைந்து கொள்ள செய்வதற்கான சகல வழிகளையும் இப்போது அவர்கள் கையாள தொடங்கியிருந்தனர். தமது ஆதரவு மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், அரசியல்வாதிகள், உயர்நிலை பொறுப்பாளர்கள் என அனைவரையும் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.

(“பயிரை மேயந்த வேலிகள்..(32)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 70 )

1978 ம் ஆண்டு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கி ,விகிதாசார பிரதிநிதித்துவத்துடன் சர்வ அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி ஆட்சி முறை உருவானது.இதில் பேசிய ஜே.ஆர் இந்த ஜனாதிபதி ஆட்சி முறையில் ஆணை பெண்ணாகவோ அல்லது பெண்ணை ஆணாகவோ மட்டும் மாற்றமுடியாது.மற்ற சகல விசயங்களையும் செய்ய முடியும் என்றார்.பிரதமர் பதவியைக்கூட கேவலமாக விமரச்சித்தார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 70 )” தொடர்ந்து வாசிக்க…)

‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கிடைத்துள்ளது. எனினும், ஆட்சி மாறாமல் இருந்திருந்தால், தன்னுடைய தந்தையின் படுகொலை தொடர்பில் நேற்று (08) வழங்கப்பட்ட தீர்ப்பு, அறிவிக்காமலே விடப்பட்டிருக்கலாம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

(“‘அப்பாவின் குரல் கேட்கிறது’ – ஹிருணிகா பிரேமச்சந்திர” தொடர்ந்து வாசிக்க…)

சம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது

சம்பூரில் நிர்மாணிப்பதற்கான முன்மொழியப்பட்டிருந்த அனல் மின் நிலையம், சம்பூரில் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை (13) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு

கிளிநொச்சி விநாயகபுரத்தில் வசித்து வரும் வடபோர்முனையின் கட்டளைத்தளபதியாக இருந்து மரணமடைந்த லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவிக்கு, கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பானை விடுத்துள்ளனர். வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப்டினன்ட் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழகன் பயன்படுத்திய கைத்துபாக்கியை தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து அதிகளவான உதவியை பெற்றுக்கொள்வதாகவும் கூறி பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர்.

(“விடுதலைப்புலி: கலையழகனின் மனைவிக்கு அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)