கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 4)

(தோழர் ஜேம்ஸ்)
 
தோழர் ஸ்ராலின் அண்ணரால் எமக்கு நெருக்கமான உறவுக்குள் வந்த சிலரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். சேஷாஸ்திரி என்ற எமது அரசியல் வித்தகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் சுஜாதாவின் முன்னை நாள் வாழ்கைத் துணைவர். இவர்கள் இருவரும் மாக்சிய லெனிசிய செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்தவர்கள். இவ்விருவரும் எமது விடுதலை அமைப்பிற்கும் ஈழவிடுதலைக்கும் செய்த செயற்பாடுகள், அர்பணிப்புக்கள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். இன்றவரை சுஜாதா தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிகள் மத்தியில் உறவுகளைப் பேணிய வண்ணம் அடிமட்ட மக்களுடன் வேலை செய்பவர். நான் தமிழ் நாடு செல்லும் போதெல்லாம் அறிவிக்காமலே அவரின் வீடு சென்ற அழவழாவி விருந்துண்டு வருவது வழக்கம்.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தினம் 19.06.2016 மட்டக்களப்பு

 

பத்மநாபா மக்கள் முன்னணி

தமிழர் சமூக ஜன நாயகக் கட்சி (SDPT)

இடம் : போக்கஸ் மண்டபம்

(சென்றல் றோட், மட்டக்களப்பு)
காலம்: 19.06.2016 ஞயிற்றுக்கிழமை
மணி : காலை 9.30
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் சமூகத்தின் ஜனநாயகத்துக்காகவும்உழைக்கும் மக்களின் விடிவுக்காகவும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சகோதர இயக்கப் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூருவதற்காக “தியாகிகள் தினம்” 2016 இம்முறை மட்டக்களப்பில் நினைவு கூறுவதோடு.
இதுவரை பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக செயற்பட்டுவந்த நாம் ” தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” எனும் புதிய கட்சிப்பெயரில் ” “பத்மநாபா மக்கள் முன்னணி” எனும் அமைப்பாகவும். அரசியல் ஆர்வமுள்ள சகலதரப்பினரையும் இணைத்துக்கொண்டு மக்கள் இயக்கமாக புதிய கட்சிப்பெயரில் செயற்படவுள்ளோம்.
இந் நிகழ்வில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி மற்றும் எமது வருங்கால செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கமும், கலந்துரையாடலும் முன்னாள் வட/கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” இன் முக்கியஸ்தரும் அ.வரதராஜப்பெருமாள் உற்பட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நடைபெறவுள்ளது. போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பங்கள், சகோதர இயக்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு
பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” சார்பில் அழைக்கின்றோம்.

கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.

நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கடவுச்சீட்டு தரவுகளை சேகரிக்கும் முயற்சியை கனடா ஆரம்பிக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் றலவ் குட்டேல் அறிவித்துள்ளார். கடவுச் சீட்டின் இரண்டாம் பக்கத்தில் இடமபெறும் முழுப்பெயர், தேசிய இனம், வழங்கும் அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பால் போன்றன இவற்றில் அடங்கும். கனடாவிற்குள் நுழைபவர்களின் தரவுகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுவிட்டன. சேகரிக்கப்படும் இத்தகவல்கள் அம்பர் எச்சரிக்கைக்கு-காணாமல் போகும் குழந்தைகளின் விடயத்தில் சிறந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. மனித கடத்தல்களை சமாளிக்க உதவும் என அமைச்சர் குட்டேல் தெரிவித்தார்.

(“கனடாநாட்டை விட்டு வெளியேறுபவர்களின் கடவுச்சீட்டு தரவுகள் சேகரிக்கப்படும்.” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை: ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது.

இலங்கையை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று பலர் கூறிக் கொள்வதுண்டு. அரசியலமைப்புச் சட்டத்திலும் அவற்றிற்கான முன்னுரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் அதி பெரும்பான்மையானவர்கள் அவர்களே. அப்படியென்றால் சிங்கள மக்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டிருக்கவல்லவா வேண்டும் ? சிங்கள மக்கள் பொருளாதார ரீதியில் அதிகப்படியாக உயர்வாகவும், ஏனையோர் தாழ்வாகவுமல்லவா இருக்க வேண்டும் ? உண்மையாக, இவ்விடயத்தினை ஆராய்ந்து பார்த்தால், இங்கு மேலோங்கிக் காணப்படுவது வர்க்க ரீதியான பிரச்சனையே தவிர, இனப் பிரச்சனையல்ல. எனினும், ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது. ஆகவே அது இனப்பிரச்சனையாகச் சித்தரிக்கப் படுகின்றது.

(“இலங்கை: ஆட்சியாளர்களினால் தீர்க்க முடியாத வர்க்கப் பிரச்சனைகள், இனவாத்தினால் மழுங்கடிக்கப் படுகின்றது.” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவே ஜப்பானிலிருந்து வெளியேறு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

‘தன் கையே தனக்குதவி’ என்பது பழமொழி. இதன் நிகழ்நிலை உதாரணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். உதவி என்ற பெயரில் உவத்திரவம் செய்வது உலக அரசியல் அரங்கில் நிறைய உண்டு. உதவிகள் பல்வேறு பெயர்களில் நடந்தேறி முடிவில் புதிய ஆதிக்க வடிவங்களாக நிலைபெறுகின்றன. பாதுகாப்பின் பெயரால் அழைத்தவர்களாலேயே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமற் போன அவலம் இங்கும் நடந்தது. அந்நிய உதவியைக் கூவி அழைப்பவர்கள் மனங்கொள்ள வேண்டிய விடயமிது.

(“அமெரிக்காவே ஜப்பானிலிருந்து வெளியேறு” தொடர்ந்து வாசிக்க…)

தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்விரு கட்சிகளும், நாடாளுமன்றத்தில் எதிரணியின் பக்கமாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றன என்று தெரிவித்த விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, அவ்விருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

(“தொண்டமானும், டக்ளஸூம் நல்லாட்சியில் இணைவது உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்

வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வரும் நீட்சியான துயரங்கள் , புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னரும், சமாதானம் வந்த பின்னரும் , இன சவ்ஜன்யத்தை கட்டி எழுப்ப ஆட்சி மாற்றம் வென்டும் என்று அண்மையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பின்னரும் , வடக்கில் நிகழ்ந்த “வரலாற்று மாற்றம்” என்னவெனில் வட மாகாண சபையில் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் “இனப்படுகொலை” குறித்து தீர்மானம் கொண்டு வந்ததுதான். அதுவும் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு பற்றி அல்லது இனச்சுத்திகரிப்பு பண்ணிய குற்றவாளிகளை பற்றி எவ்வித சிலிர்ப்பும் சிலாகிப்பும் இன்றி தீர்மானம் கொண்டு வந்ததுதான் வரலாற்றுத் தவறாகும்.

(“வடக்கில் இருந்து முழுமையாக இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம் மக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய 3வரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.

‘தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடி மட்டுமல்ல, எமது தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் 1970 முதல் தமது மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்களில் தங்கத்துரை (தங்கவேல்), குட்டிமணி (யோகச்சந்திரன்), தேவன் (சுப்பிரமணியம்)ஆகிய மூவரும் 5.4.81 அன்று பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கடற்படை, இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மூவரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகிறார்கள் என்பது எப்படி கடற்படைக்குத் தெரிய வந்தது? இதற்கான பதில் இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவர்கள் வழக்குகளில் ஈடுபட்டு இவர்களை அடிக்கடி பனாகொடை முகாமுக்கு போய் சந்தித்தவரான சட்டத்தரணி கரிகாலன், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகின்றார்.

(“குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய 3வரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.” தொடர்ந்து வாசிக்க…)