எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!

மிகுந்த தயாரிப்புகள், அறிவிப்புகள், கோரிக்கைகள், பத்திரிகை ஆசிரியதலையங்கம் என ஆர்ப்பரித்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி பற்றி, சங்கூதும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், எழுக தமிழ் பேரணி சிங்கள தலைவர்களை மேலும் கலங்க வைக்கப்போவது திண்ணம். யாழில் 3000 ஆயிரம் பேர் கூடிய எழுக தமிழ் நிகழ்ச்சியால் சிங்கள அரசு ஆட்டம் கண்டுள்ளது, என தற்பெருமை பேசிய வேளை தென்னிலங்கை பத்திரிகை செய்தி அதை மறுதலித்தது.

(“எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை

(கருணாகரன்)

விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் ‘தமிழ் – சிங்களக் கலைக்கூடல்’ என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாக தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை எட்டுவதற்கு கலைஞர்களும் படைப்பாளிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைக்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

(“கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!

(SM சபீஸ்)

வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற கோசத்துக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

(“முஸ்லிம்களின் பூர்வீகம், தமிழர்களின் வரலாற்றினைவிட பழமை வாய்ந்தது..!” தொடர்ந்து வாசிக்க…)

உலகத் தமிழ் நாடக அரங்கு

உலகத் தமிழ் அரங்க ஆராய்ச்சி மையம்

தமிழ் நாடக அரங்கு இன்று உலகம் தழுவிய ஒன்றாய் பரந்து பட்ட ஒரு தளத்தில் உரையாடலுக்கான காத்திரமான செல்நெறிகளையும், பல்வேறு விதமான சிந்தனைப்பள்ளிகளையும்(school of thorts) கொண்டது மரபு வழி அரங்குகளயும் நவீன நாடக ஆற்றுகைகளையும் , கொண்டதே நம் தமிழ் அரங்கு.

(“உலகத் தமிழ் நாடக அரங்கு” தொடர்ந்து வாசிக்க…)

சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???

எம் மண்ணில் அண்மையில் அரங்கேறிய காட்சிப்பதிவு, சமூக வலை தளத்தில் வந்ததால், சிறுமி மீதான வன்முறை சம்பவம் அம்பலமாகி, நீதிமன்ற வாசலை தட்டியது. இதுவரை காலமும் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பக்கம் திரும்பிய காட்சி படுத்தல், சிறுவர் துன்புறுத்தல் பக்கம் திரும்பியது, வைத்தியர் கையில் உள்ள கத்தியும், கசாப்பு கடைகாரன் கையில் உள்ள கத்தியும் செய்யும் செயல் பற்றிய, வித்தியாச செய்தியை சொல்கிறது.

(“சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?

(அகிலன் கதிர்காமர்)
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது.

(“இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?” தொடர்ந்து வாசிக்க…)

நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?

அண்மையில் வட மாகாண சபை முதல்வர் முஸ்லிம் மக்கள் சம்மந்தமாக தெரிவித்த கருத்து விசனத்தை/விமர்சனத்தை ஏற்படுத்தியதை, இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கிகை மூலம் அறியமுடிகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டபோதும், அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல், தமது அரசியல் காரணங்களுக்காகவே தம்மை முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என, வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் மட்டக்களப்பில் தெரிவித்த கருத்தை, றிசாட் பதியுதீன் தலைமை வகிக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீட் விடுத்த, அறிக்கை மூலம், நீறு பூத்த நெருப்பாக இருந்த, முன்னர் அரங்கேறிய பல அராஜக சம்பவங்கள், வெளிப்பட தொடங்கி மீண்டும் இன நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக மாற்றும் நிலை தோன்றி உள்ளது.

(“நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது.

(“சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் நிகழ்வு நடப்பதற்கு முன்னதாகவும் நடந்துகொண்டிருந்தபோதும் நடந்துமுடிந்த பின்னரும் பலவகையான விளம்பர சுவரொட்டிகளும் பத்திரிககைச் செய்திகளும் முகநூலில் வந்திருந்த பதிவுகளும் எதனைக் காட்டி நிற்கின்றன என்றால் அது சுய விளம்பர அரசியலாகவே காணப்படுகின்றன.

(“எழுக தமிழ் நிகழ்வு ஒவ்வொரு தமிழர் கட்சிகளுக்குமான ஒரு ஒத்திகை நிகழ்வு….” தொடர்ந்து வாசிக்க…)

முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்

 

ஆரம்பத்தில் பேரணிக்கு வந்த பொது மக்கள் உச்சி வெயில் காரணமாக மரநிழல்களில் ஒதுங்கியிருந்தனர்.பேரணி உள்நுழைந்ததும் அரைவாசி மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது மைதானத்திற்கு வந்தனர் மேடையிலும் பந்தல் போடப்படவில்லை.இறுதிவரை மக்கள் பிரதிநிதிகளும் வைத்தியர்களும் வெயிலில் நின்றனர். தண்ணீர்போத்தல்கள் இயன்றவரை வழங்கப்பட்டு தாகம் தணிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அருமை,அனைத்து மக்களை இணைந்து பாடுமாறு கேட்கப்பட்டது மாற்றத்திற்கான அறிகுறி. சிங்களமக்கள் ,ஆட்சியாளர்கள் இப்பிரகடனம் எதிரானது அல்ல,என்னும்போது அமைதியாக இருந்த மக்கள் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரானதல்ல என முதலமைச்சர் பேசும்போது மைதானம் அதிர்ந்து.

(“முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)