“வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”

பலராலும் நேசிக்கப்பட்ட, மிகவும் நேர்மையான, இனவாதமற்ற மானிட ஆராதிப்பு மிக்க, என் மதிப்புக்குரிய நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன், சென்னையிலிருந்து செப்டெம்பர் 1986ல் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வந்து அக்டோபர் 15, 1986 திரும்பிச் செல்லும் வழியில் அநியாயமாகக் கொலையுண்டு, முப்பதுவருட காலங்கள் உருண்டோடிச் சென்றுவிட்டன. தமது அதிகாரத்துக்கும், பதவிக்கும், பிரசித்திக்கும், அரசியலை பயன்படுத்தி, மக்களை உரமாக்கியவர்கள் வாழ்ந்த காலத்தில், மக்களின் அரசியல் விடிவுக்காக நீதிக்கும், நியாயத்துக்குமாகப் போராடி, தன்னையே உரமாக்கியவர்தான் நண்பர் விஸ்வலிங்கம் விஸ்வானந்தன்.

(““வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டிய விஸ்வானந்தன்”” தொடர்ந்து வாசிக்க…)

வெனிசுவேலா: கலையும் கனவு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கனவுகள் அழகானவை; பல சமயம் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி நினைத்ததிலும் அதிகமாகலாம். கனவு தரக்கூடிய மகிழ்ச்சியை நனவு மறுக்கிறது. ஆனால், கண்ட கனவை நனவாக்கிச் சாதித்தவர்களும் இப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் இன்னமும் வாழ்கிறார்கள். சாத்தியமற்றதாய்த் தெரிவதைச் சாத்தியமாக்குவதற்கான வித்து கனவிலேயே விதைபட்டு நனவில் அறுவடையாகிறது. கண்ட கனவு கண்முன்னே கரைந்து மெல்ல மெல்லக் கலைவதைக் காண்பது வேதனையானது.

(“வெனிசுவேலா: கலையும் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்

(விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பற்றி கருணாகரன் சுகன் சாகரன் என்ன கூறுகின்றார்கள்)

கருணாகரன்:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் பலர் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளைப்பற்றியும் சவால்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதிக் கவனப்படுத்தி வருகிறேன். இவர்களுடைய நிலைமையைப்பற்றி வேறு சிலரும் தொடர்ச்சியாக உரையாடல்களைச் செய்து வருகின்றனர். இருந்தாலும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

(“விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“உரிமை உள்ள இனமாக (முஸ்லிம்கள்) வாழவேண்டும் . இதனை யாராலும் தடுக்க முடியாது.; தமிழரும் முஸ்லிம்களும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும் . ஒரு இனத்தை வீழ்த்தி மற்ற இனம் வாழ்ந்துவிட முடியாது.”

( மறைந்த கல்முனை முன்னாள் மஜீத் எம்.பீ ஆற்றிய உரையிலிருந்து. -25 மாசி மாதம் 1987 )

(“விமல் குழந்தைவேலின் “கசகறனம் ” நாவல் பற்றிய ஒரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

எமது நாடும் நவதாராளமய முதலாளித்துவம்


இன்றைய நவதாராளமய முதலாளித்துவமும், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு அழிக்கின்றது என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும் நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.

(“எமது நாடும் நவதாராளமய முதலாளித்துவம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 71 )

பற்குணம் சில காலம் புத்தளத்தில் பணியாற்றினார் .ஜே.ஆர். அதிகாரத்துக்கு வந்தபின் இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.ஒன்று காலி.இன்னொன்று ஆனைமடுவ.ஆனைமடுவ தேரத்தலின்போது புத்தளத்தில் பணியாற்றினார் .அங்கு பணியாற்றிய வேளையில் அங்குள்ள வாக்காளர் பெயர்களை ஆராய்ந்தபோது அவர்களின் மூன்று தலைமுறைக்கு முந்திய பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருந்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 71 )” தொடர்ந்து வாசிக்க…)

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்……

கடந்த 21ம் திகதி மூன்று ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள வடக்கு மக்களின் பிரதிநிதிகள் சபை, அந்த மூன்றாண்டு காலத்தினை பயனுள்ள விதத்தில் கடந்துள்ளதா என்ற கேள்வி தமிழ் மக்கள் அனைவரினதும் மனங்களில் எழுந்து நிற்கிறது. யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, இன்றும் வறுமைநிலையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்கள் மாகாண சபையின் செயற்பாடுகளை பயனுள்ள விதத்தில் உணர்ந்துகொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர்.

(“யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில்……” தொடர்ந்து வாசிக்க…)

சற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …!!

(Subakaran Mayilvaganam)

 

“எழுக தமிழ்” யாழில்(24-09.2016) நடைபெற்றது, அது தமிழர்களுக்கு மாபெரும் வெற்றி என்று புலம்புகின்றனர். ஆனால், இதை பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும் …!! இந்த எழுக தமிழை ஏற்பாடு செய்தவர்கள் TPC அமைப்பு. அந்த அமைப்பில் பொறுப்பில் இருப்பவர்களோ, இலங்கை அரசிடம் இருந்து வாழ்க்கை முழுவது வருமானம் பெறும் திடத்தில் இருப்பவர்கள். மிகவும் பணக்காரர். நாளைய உணவிற்கு சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இல்லை.

(“சற்று எ(உ)ங்கள் சிந்தனைக்கு …!!” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!

மிகுந்த தயாரிப்புகள், அறிவிப்புகள், கோரிக்கைகள், பத்திரிகை ஆசிரியதலையங்கம் என ஆர்ப்பரித்து நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி பற்றி, சங்கூதும் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், எழுக தமிழ் பேரணி சிங்கள தலைவர்களை மேலும் கலங்க வைக்கப்போவது திண்ணம். யாழில் 3000 ஆயிரம் பேர் கூடிய எழுக தமிழ் நிகழ்ச்சியால் சிங்கள அரசு ஆட்டம் கண்டுள்ளது, என தற்பெருமை பேசிய வேளை தென்னிலங்கை பத்திரிகை செய்தி அதை மறுதலித்தது.

(“எழுக தமிழ் பேரணி எதிர்வலைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை

(கருணாகரன்)

விடுதலைப்புலிகளும் ஹிரு குழுவினரும் இணைந்து 2004ஆம் ஆண்டில் ‘தமிழ் – சிங்களக் கலைக்கூடல்’ என்ற நிகழ்வொன்றைக் கொழும்பில் நடத்தியிருந்தனர். அது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலம். சமாதான முன்னெடுப்புகளுக்கு அனுசரணையாக தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களுக்கிடையே பரஸ்பரப் புரிந்துணர்வை எட்டுவதற்கு கலைஞர்களும் படைப்பாளிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைக்கூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

(“கல்வி மையங்கள் கலவர மையங்களாக மாறிய விந்தை” தொடர்ந்து வாசிக்க…)