எல்லை தகர்க்கும் மனிதநேயம்!

 

தன் மனைவியின் உடலை 12 கி.மீ தூரம் சுமந்து சென்ற ஒடிசா மனிதருக்கு உதவி செய்ய பஹ்ரைனின் பிரதமர் முன்வந்துள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் தாம் மிகவும் மன வருத்தமடைந்ததாகவும் அந்த ஏழை மனிதர் தனா மஞ்ச்சியை தன் நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்காக அவரின் முகவரி மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கும்படி கேட்டு பஹ்ரைனின் பிரதமர் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பஹ்ரைனின் பிரதமரும் அந்நாட்டின் இளவரசருமான மாண்புமிகு கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா இந்திய தூதரகத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார். பதில் கிடைத்தவுடன் அந்த ஏழை மனிதருக்கு கடல் கடந்து மனிதநேய உதவி கிடைக்கும்.

(“எல்லை தகர்க்கும் மனிதநேயம்!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 67)

எமது ஊரவர்கள் பலர் குடியேற்ற திட்ட உருவான பின்னர் வன்னி பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர் .இவ்வாறான பலரை எனக்குத் தெரியாது.பற்குணத்தை எல்லோருக்கும் தெரியும். பற்குணம் வவுனியாவில் வேலை செய்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரிந்தது. நமது ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது தேவை காரணமாக வவுனியா கச்சேரிக்கு பார்க்க சென்றார். அங்கே பணிபுரியும் ஒருவரிடம் தான் பற்குணத்தை காண வந்ததாக கூறினார். அவரும் அவர் பற்றிய தகவலை பற்குணத்திடம் கூறினார்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 67)” தொடர்ந்து வாசிக்க…)

என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.

 

என்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.

அவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.

மார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.

அப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)

வாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.

வாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.

தீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.

அதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும் நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.

நான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.

எனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட சமூகம்.

இலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.

Academics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.

தமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்

பயிரை மேய்ந்த வேலிகள்..(16)

(தலைவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப்பட்ட பூஜைகள்)

மனைவி பிள்ளைகளுடனான சுகபோகவாழ்வை காப்பாற்றிக்கொள்ளவும், தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவும் வன்னி பெரு நிலப்பரப்பின் ( கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை) ஆள் புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில் புலிகள் இருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(16)” தொடர்ந்து வாசிக்க…)

கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்

கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்
காலங்காலமாக ஒரு கட்டுக்கதை மக்களின் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. “கம்யூனிஸ்ட் நாட்டில் மதச் சுதந்திரம் கிடையாது”, என்று இறை நம்பிக்கையுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவது வழமை. இவ்வருடமும் “கியூபாவில் மனிதஉரிமைகள்” பற்றிய அமெரிக்க அறிக்கையில், அங்கே மதச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த அறிக்கை கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

(“கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்” தொடர்ந்து வாசிக்க…)

மலையக அரசியல்

பாலம் திறந்து வைக்கப் போனவர் ஆறுமுகன் ராமன்தான். அங்கு உடன் சென்ற முத்து சிவலிங்கம் “யாரோ” சில பேர் ஏதோ சொன்னார்கள் என்பதில் ஆரம்பித்து 75 வருடங்கள் தம்மை மனிதனாக்கிக் கொண்டதை சொல்லி அழுதார். மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உங்களுக்குச் செய்து கொண்டதை சொல்லுவது ஏன்?

(“மலையக அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 66 )

பற்குணம் வவனியாவுக்கு வருவதை உணவுத்திணைக்களம் உறுதி செய்தது.பற்குணத்தின் இக்கட்டான நிலை தெரிந்தும் பல தமிழர்கள் பற்குணத்தின் வரவை விரும்பவில்லை .அதனால் அவர்கள் சாதி என்ற வகையில் அக்கியப்பட்டு அவரின் வரவை எதிர்த்தனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 66 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(15)

(இறந்த பிள்ளையை பர்க்க தடைவிதிக்கப்பட்ட தாய்)

தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ள , புலிகள் மக்களின் பிள்ளைகளை பிடித்துச் சென்று பலி கொடுத்து வருவதை உணர்ந்துகொண்ட பெற்றோருக்கு மேலும் ஒரு கொடுமையை புலிகள் அரங்கேற்ற துணிந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(15)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 65 )

பற்குணம் இருந்த வீட்டில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதன் காரணமாக பற்குணம் நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும்.அதற்கு முதலில் பொலிஸில் சரண்டைய வேண்டும் .இது மிக ஆபத்தான ஒன்றாக இருந்தது.

(“பற்குணம் A.F.C (பகுதி 65 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்…(14)


இந்த சம்பவத்தை எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் பிடிபட்ட ஒரு இளைஞனின் நிலையில் இருந்து நான் எழுதவேண்டியதை கற்பனை செய்து பார்தேன் கண்ணீர் வழிந்து ஓடியது. என்னால் தொடர்ந்து எழுதவே முடியவில்லை. இந்த நிமிடம் வரை மனசுக்குள் வலிக்கின்றது. பொதுவாக இலகுவில் உணர்சிவசமாகத நான் இதை எழுத தொடங்கியபோது பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து யோசித்ததில் இருந்து மனச் சோர்வுடன் இதுவரை இருக்கின்றேன்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்…(14)” தொடர்ந்து வாசிக்க…)