(ம.செந்தமிழன்)
நண்பர்களே வணக்கம்.
நெகிழிப் பயன்பாடு அபாயக் கட்டத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த நொடியிலிருந்து நெகிழிப் பயன்பாட்டினை மனிதர்கள் நிறுத்திவிட்டாலும், இதுவரை சேர்ந்த நெகிழிக் குப்பைகளால் நேரப்போகும் அழிவுகளைத் தடுப்பது இயலாது. ஆனால், மனிதகுலம் நெகிழிப் பயன்பாட்டினை நாளுக்கு நாள் உயர்த்திக்கொண்டுள்ளதே தவிர, குறைக்கும் சிந்தனை கூட இல்லாதிருக்கிறது.