வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது.

(“வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(7)

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(7)” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்

(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)

மட்டக்களப்பையே – ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையே – அதிர்வடையச் செய்திருக்கிறது, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இப்படுகொலைகளின் விவரங்கள், இன்னமும் வந்துகொண்டிருக்கும் நிலையில், இவற்றுக்குப் பின்னாலுள்ள சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆராய்தல் அவசியமானது.

(“மட்டக்களப்பு முக்கொலை: குடும்பக் கட்டமைப்பும் பெண்களும் சவால்களும்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் a.f.c (பகுதி 52 )

பற்குணம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றார்.அன்னறைய நாட்டின் சூழ்நிலையில் அரச அதிபர் பதவிக்கு அடுத்ததாக மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாக இருந்தது.அது உணவுத் தட்டுப்பாடுகள் நிறைந்த காலம்.மேலும் திருகோணமலை துறைமுக நகரம் என்பதால் பல வெளிநாட்டு உணவுக் கப்பல்கள் அங்கே வரும்.இவைகளைப் பொறுப்பேற்பது ,இங்கிருந்து உணவுகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது எல்லாம் அங்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியே.

(“பற்குணம் a.f.c (பகுதி 52 )” தொடர்ந்து வாசிக்க…)

மேற்கு சகாரா: பாலைவனத் துயரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு நாட்டின் உருவாக்கம் காலச்சுழலால் மட்டுமன்றி அதன் வரலாற்றின் வரைபினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் அல்லாத அனைத்தும் முக்கியம் பெற்ற காலத்தில் நாடுகள் கொலனிகளாகின. தசாப்தங்கள் கடந்த பின்னும் கொலனியாதிக்கம் விட்டுச்சென்ற வலித்தடங்கள் இன்னும் துயருடன் தொடர்கின்றன. குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைக் கொலனியாதிக்க சக்திகள் கூறுபோட்டதன் துர்விளைவுகளை ஆபிரிக்க மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள்.

(“மேற்கு சகாரா: பாலைவனத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனை வா , வந்து எங்களுக்காக போராடு என்று எந்த தமிழரும் வெத்திலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை…

1970 களில் வடமராட்சி பிரதேசம் கடல்க் கள்ள கடத்தலில் கொடிகட்டி பறந்த காரணத்தினால் அப்பகுதியில் இலங்கை இராணுவம், போலீசின் கெடு பிடிகள் அதிகமாக காணப்பட்டது. இதனால் சினமடைந்த கள்ள கடத்தல் குழுக்கள் துப்பாக்கி கொண்டு இலங்கை போலீசை எதிர்க்க ஆரம்பித்தனர், இதற்க்கு அனைத்து தமிழர் தரப்பையும் கவரக்கூடிய ஒரு எதிர்ப்பு சுலோகம் தேவைப்பட்டது. அந்த எதிர்ப்பு சுலோகம் தான் “ஈழம்” அதே கள்ள கடத்தல் கும்பல்களில் இருந்து வந்தவர் தான் பிரபாகரன் பின்னர் ஏனைய கள்ள கடத்தல் குழுக்கள் , யாழ்ப்பாணத்தில் படித்த தலைவர்கள் , அரசியல் தலைவர்கள் என அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு, தனக்கு தானே “மேதகு ” என பட்டம் சூட்டினார்.

தமிழ் மக்களுக்கு ‘போக்கிமொன்’ சொல்லும் செய்தி என்ன?

(ப. தெய்வீகன்)

உலகம், கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாதத்தின் கொடும்பிடியில் சிக்கி பல உயிர்களை இழந்திருக்கிறது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அரசியலிலும் பல அதிரடி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், கடந்த ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகையில் பல இலட்சக்கணக்கானவர்களை தன் பக்கம் திரும்ப வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. ‘போக்கிமொன்’ எனப்படும் ஒரு விளையாட்டின் அறிமுகம்தான்.

(“தமிழ் மக்களுக்கு ‘போக்கிமொன்’ சொல்லும் செய்தி என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

புரட்சியின் தோல்விக்குப் பின்னே…

(ரோஜர் கோஹன்)

துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சிக்கான முயற்சியைப் பார்க்கும்போது, அதில் பங்கேற்றவர்களின் இயலாமை தெரியவருகிறது. அரசியல் தலைவர்களைக் கைப்பற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தலைமை ஏற்க யாரும் தயாராக இல்லை. தகவல் தொடர்பில் எந்த வியூகமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை. மேலும், ராணுவத்திலும் சமூகத்திலும் அரசுக்கு எதிரானவர்களைத் திரட்டுவதற்கான திறனும் இல்லை. மாறாக, துரதிர்ஷ்டம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட படைப்பிரிவு, இஸ்தான்புல்லின் ஒரு பாலத்தில் நின்றுகொண்டும், ஒருங்கிணைப்போ திட்டமோ இல்லாமல் தலைநகர் அங்காராவில் உள்ள சில அரசுக் கட்டிடங்களைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருந்தது.

(“புரட்சியின் தோல்விக்குப் பின்னே…” தொடர்ந்து வாசிக்க…)

தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!

எழுபதுகளின் கால் பகுதியில் கொழும்பில் கல்லூரி படிப்பை தொடர்ந்த எனக்கு கிடைத்த சுதந்திரம் [ உறவினர் தொல்லையற்ற சுதந்திர வாழ்க்கை ] பல நண்பர்களின் உறவை பலப்படுத்திய போது, அறிமுகம் ஆனார் என்னுடன் கல்லூரி நாடக விழாக்களில் கலந்து எனது ‘’பைத்தியங்கள் பலவிதம்’’ எனும் நாடகத்தில் சைவ பைத்தியமாக நடித்த நவநீதன் நேமிநாதன். ஆம் அவர்தான் அன்றைய திருமலை பாராளுமன்ற உறுப்பினர் நேமினாதனின் ஒரே தவப்புதல்வன். என்னைவிட பல வயது இளையவன். அவன் என் வகுப்பு தோழன் அல்ல. உருவத்தில் மிக பருமனானவன். அன்று இளைஞர் பேரவை, ஈழவிடுதலை இயக்கம், ஈரோஸ், ஈ பி ஆர் எல் எப் என தன் பங்களிப்பை செய்த, இன்று அனைவராலும் மறக்கடிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும், ஒரு காலத்தில் கிளிவெட்டி தங்கத்துரை அண்ணனின் [ 1997ல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட திருமலை பாராளுமன்ற உறுப்பினர் ] வலதுகரமாக செயல்ப்பட்ட தங்கமகேந்திரன் அவர்களை, மட்டக்களப்பில் அடித்து ஒய்ந்த சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் சந்தித்த போது, நான் கேட்ட கேள்விக்கு அவர் நகைச்சுவையாக ஒரு பதில் கூறினார்.

(“தன் நவரச நடிப்பால் எம் மனதில் நிறைந்த மரிக்கார் ராமதாஸ்!” தொடர்ந்து வாசிக்க…)

விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..

ரூ. 570 கோடி விவகாரத்தில் சிபிஐ புதிய தகவலை வெளியிட்டுள்ளது தமிழக அரசியலை மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்குத்தான் பெரும் சிக்கல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இவர்தான் ஸ்டேட் வங்கியின் பணம் இது என்று அடித்துக் கூறியுள்ளார். நாட்டின் முதன்மையான வங்கி இவ்வளவு பெரிய பணத்தை போலி பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற செயல் மிகப் பெரிய சந்தேகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கூறியுள்ள புதிய தகவல்களைப் பார்த்தால் மேலும் மேலும் சந்தேகங்கள் கூடியபடியே உள்ளன.
பதிவெண்ணை பரிசோதிக்காதது ஏன்?

(“விஸ்வரூபம் எடுக்கும் “ரூ.570 கோடி”..” தொடர்ந்து வாசிக்க…)