ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அணியினர், கடந்த வியாழக்கிழமை பேராதனை கெட்டம்பே விஹாரையிலிருந்து கொழும்புக்கு ஐந்து நாள் பாத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தனர். பாத யாத்திரை என்னும் போது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு 1957 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன மேற்கொண்ட பாத யாத்திரையே ஞாபகத்துக்கு வரும்.

(“ஆத்ம திருப்தியை மட்டும் தந்த பாத யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?

இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு ஒரு வகையான பய உணர்வை உருவாக்கி விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் மர்மமான நோய்களினால் மரணமடைவதாக கடந்த சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என்று மற்றொரு சிலர் அறிக்கை வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

(“விடுதலைப் புலிகளின் 103 போராளிகளின் மரணம்: உணமைகளை மறைப்பதற்கான கூட்டுச் சதி?” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.

விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கங்களை இதே போன்றதொரு ஆகஸ்ட் 3ல் 26வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி மண்ணில் அவர்களின் துப்பாக்கிகள் எழுதியிருந்தன .மத வழிபாட்டில் ஈ்டு பட்டிருந்த சக மனிதர்களையும் குழந்தைகளையும் மிக குரூரமாக படு கொலை செய்ததனர் புலிகள் இந்த வக்கிர நிகழ்வு தற்செயலான ஒன்றாக பார்த்துவிட முடியாது விடுதலை புலிகளின் வலிந்து பெற்றுக்கொண்ட ஓர் போர் தந்திரம் என்று தான் சொல்ல வேண்டும் ஓர் கட்டுக்கோப்பான அமைப்பாக இருந்த புலிகள் தலமையின் உத்தரவை பெறாமல் இந்த மிலேச்சதனமான தாக்குதலை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது .பின் நாட்களில் விடுதலை புலிகள் மிக மோசமான அழிவை (பொது மக்கள் அல்ல) சந்தித்தற்க்கு இந்த குரூரமான சம்பவத்திற்க்கு பின்னர் கணவனை இழந்த மனைவியோ ,தகப்பனை இழந்த பிள்ளைகளோ ,பிள்ளைகளை இழந்த பெற்றோர்களோ இட்ட சாபமாகத்தான் இருக்க வேண்டும்.

(“விடுதலை புலிகளின் மிக கொடூரமான வரலாற்றுப்பக்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல

காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கம்பெனியின் ஓய்வு அறைக்குள் நுழைந்துவிட்டது. பதட்டத்துடன் இருந்த அந்த புலி அந்த அறையின் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் சத்தம் போடாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது. நான்காவது நாள்,பசி தாங்க முடியாமல்,ஓய்வு அறைக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.அவர்,அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது,யாருமே கண்டு கொள்ளவில்லை.

(“உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,வசதி வாய்ப்போ அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

யாரோ செய்த தவறுகளுக்காக சிலுவை சுமந்த சுதா……!

இந்திய அமைதிப் படை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறத் தொடங்கிய ஆரம்ப நாள் (1989) அது. ஒரு நாள் பிற்பகலில் கதுருவெல யிலிருந்து காத்தான்குடிக்குப் போவதற்காக மட்டக்களப்பு வரை செல்கின்ற இபோச பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன். செங்கலடி சந்திக்கு சமீபமாக ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் சிலரால் நான் வந்த பஸ் வழிமறிக்கப்பட்டது. மூன்று ஆயுத தாரிகள் பஸ் உள்ளே வந்து “சோனிக் காக்காமார் யாரும் இரிக்கிறீங்களாடா? இரிந்தா இறங்கிடா எல்லாரும்” என்று கூறிக்கொண்டு சந்தேகமானவர்களிடம் அடையாள அட்டையை கேட்டு பெயர்களை பரிசோதித்தார்கள்.

(“யாரோ செய்த தவறுகளுக்காக சிலுவை சுமந்த சுதா……!” தொடர்ந்து வாசிக்க…)

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.

இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து. ஒரு நாட்டின் மொத்த‌ பொருளாதார‌ உற்ப‌த்தி (GDP) மொத்த‌ க‌ட‌ன்க‌ளை விட‌ குறைவாக‌ இருந்தால், பொருளாதார‌ தேக்க‌ம் உண்டாகும். இதுவே கிரேக்க‌ நாட்டிலும் ந‌ட‌ந்த‌து. இல‌ங்கையின் த‌ற்போதைய‌ நில‌வ‌ர‌ப் ப‌டி GDP தொகை: US$ 75 பில்லிய‌ன் டாலர். ஆனால், மொத்த‌ க‌ட‌ன் தொகை $81 பில்லிய‌ன் டால‌ர். அதாவது உற்ப‌த்தியை விட‌ க‌ட‌ன் அதிக‌ம். அத‌னால், அர‌சின் வ‌ருமான‌த்தின் 94% க‌ட‌னைக் க‌ட்டுவ‌த‌ற்கே செல‌விட‌ப் ப‌டுகின்ற‌து.

(“இல‌ங்கையிலும் கிரேக்க‌ பாணியிலான‌ பொருளாதார‌ நெருக்க‌டி ஏற்ப‌ட்டுள்ள‌து.” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் மறு எழுச்சியா?

‘ஜன சட்டன’ என்ற பெயரில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி நேற்றுத் தொடங்கப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் பாதயாத்திரைக்கு ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் பாதயாத்திரையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை இழந்த பின்னர், நடத்துகின்ற மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

(“மஹிந்தவின் மறு எழுச்சியா?” தொடர்ந்து வாசிக்க…)

ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புதமான தீர்ப்பு..

ஆயுதப்படை சிறப்பு அதைகாரச் சட்டம் (AFPSA) அமுலில் உள்ள மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவம் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம். அது சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி. அடுத்த நாள் ஒரு நாயைச் சுடுவதைப்போல அவர்களைச் சுட்டுக் கொண்டுவந்து போட்டுவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

(“ஆயுதப் படையினருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனை விலக்கை (impunity) முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது உச்சநீதிமன்றம்.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது.

(“வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் பங்கு” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(7)

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(7)” தொடர்ந்து வாசிக்க…)