கண்டி யாத்திரையும் இம்புல்கொடே வீரயாவும்

(ஞானகீர்த்தி மீலங்கோ)

பண்டா – செல்வா உடன்படிக்கை என்று அறியப்பட்ட பண்டாரநாயக்கா – செல்வநாயகம் உடன்படிக்கையானது சுதந்திரத்துக்குப் பின்னர் இனமுரண்பாட்டைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முதலாவதும் முதன்மையானதுமான நடவடிக்கையாகும். ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. இங்கு இரண்டு விடயங்களை நோக்குதல் தகும்.

மயிலத்தமடு – மாதவனை மாடுகளும் பஞ்சாப் நாய்களும்

கால்நடை விலங்குகளை வளர்ப்பதற்கு ஆசையில்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி பறவைகளையும், சிலர் பொழுது போக்குக்காகவும், பெரும்பாலானோர் குடும்ப வருமானத்துக்காகவும் வளர்ப்பார்கள், இன்னும் சிலர் தங்களுடைய பாதுகாப்புக்காக குடும்பங்களில் நாய்களை வளர்ப்பர். 

தோழமை தின வாழ்த்துகள் சகாக்களே….!

(சாகரன்)

இவர்கள் அனைவரும் இன்றும் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் மரணம் நிகழ்வது என்பதை நாம் விடுதலைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

நவம்பர் 19

தோழமை என்றொரு சொல்

தோழமை என்பது குறிப்பாக சமூக லட்சியம் சார்ந்த உறவு முறை
மறைந்த தோழர் ஜெயகாந்தன் அவர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்த ஒரு எழுத்தில் நான் தேநீர் எடுத்துச் செல்லும் சிறுவனாக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற போது பொதுவுடைமை இயக்க முன்னோடி தலைவர்கள் எல்லாம் என்னை பக்கத்தில் அமர வைத்து தோழரே என்றார்கள். நெகிழ்ச்சியுடன் இவ்வாறு நினைவுகூருவார்.

கறவை கரிசனையும் கண்டுகொள்ளப்படாத மேய்ச்சல் தரையும்

உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளக்கூடியவற்றில் கவனம் செலுத்திப் பெருக்கிக்கொள்ளாது இறக்குமதியிலேயே தங்கியிருப்பதால், பெருந்தொகையில் அந்நியச் செலாவணியைச் செலவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஒவ்வோர் அரசாங்கங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

நாட்டுக்கு ஆபத்தாக மாறும் புலம்பெயர்வு

இலங்கையின் அதிகமான மூளைசாலிகள் வெளியேறிய காலப்பகுதி 1980களில் ஆகும். அப்போதைய காலங்களில் அநேகமாக வடக்கு, கிழக்கு தமிழர்களே நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்கள். குறிப்பாக துடிப்பாக தொழில் பார்க்கக்கூடிய இளவயதுடையவர்கள்.

அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

கறுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் – 22: அரசை உலுக்கிய மக்கள் எழுச்சியும் எதிர்வினைகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

‘அரகலய’ இன்றைய இளந் தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவம். சுதந்திர இலங்கையின் 75 ஆண்டுகால வரலாற்றில் அரகலயவுக்கு தனியான இடமுண்டு. ஆனால் இது இலங்கையர்கள் எழுச்சி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் அல்ல. இலங்கை சுதந்திரமடைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளேயே மிகப்பெரிய மக்கள் போராட்டம் 1953இல் வெடித்தது. இது இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வு. கடந்தவாரக் கட்டுரையில் சுட்டிக்காட்டியபடி சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

வைத்தியரும் நீதிபதியும் உணர்த்தும் பாடங்கள்

(மொஹமட் பாதுஷா)

காலம் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு கடமையை விதித்திருக்கின்றது. அதனை நிறைவேற்றுதல் மிகப் பெரிய பொறுப்பாகும். பெறுகின்ற சம்பளத்திற்காக மட்டுமன்றி, தர்மத்திற்காகவும் சேவைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் இதனைச் செய்ய வேண்டி இருக்கின்றது. 

சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

றுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் 20  சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் சுதந்திரம் மக்களுக்கானதாகவன்றி அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்பதை சுதந்திரத்திற்கு பின்னதான முதற் தசாப்தகாலம் தெளிவாகக் காட்டி நின்றது. ஆனால் சுதந்திர இலங்கையின் இனவாதப் போக்கை வெளிப்படையாக காட்டுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.

பணவீக்கத்தின் வீழ்ச்சி…

பணவீக்கத்தின் வீழ்ச்சி; போற்றப்பட வேண்டிய மத்திய வங்கியின் தலைமைத்துவம்

இரட்டை இலக்கங்களில் காணப்பட்ட நாட்டின் பணவீக்க வீதத்தை, ஒற்றை இலக்கத்துக்கு கொண்டு வருவதில் இலங்கை மத்திய வங்கியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியனவாக அமைந்துள்ளன.