பலம் அறிவதற்கான தேர்தல் களம்

(மப்றூக்)

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளூர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை நிலைமை தலைகீழ். உள்ளூராட்சி மன்றங்களில் அநேகமானவை ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருக்;கும் நிலையில், மத்திய அரசாங்கத்தினை ஐ.தே.க கைப்பற்றியுள்ளது. இப்போது, உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் யுத்தத்துக்காக, கட்சிகள் அனைத்தும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆளுந்தரப்பாக ஐ.தே.க உள்ளதால், பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றுவதற்குரிய எத்தனங்களை அந்தக் கட்சி எடுக்கும்.

(“பலம் அறிவதற்கான தேர்தல் களம்” தொடர்ந்து வாசிக்க…)

அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !

இரு வேறுபட்டவரின் மரண நிகழ்வுகள் அண்மையில் பிரசித்தம் பெற்றது. ஒருவர் முதியவர் காந்தியம் டேவிட் ஐயா, மற்றவர் நடுவயதினர் போராளி தமிழினி. தமிழினி என்றால் முன்னாள் போராளி எனத்தானே போடவேண்டும்? ஆனால் தமிழினி என்ற சிவகாமி இறுதி வரை மரணத்துடன் போராடினாள் என்பதால் அவள் இறுதிவரை போராளிதான். இருவருமே இரு வேறு பாதையில் பயணித்தவர். அடைய நினைத்த இலக்கு ஒன்றுதான். தம் இனம் தமது சொந்தக்காலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற வேட்கையில் தான் இருவரும் தாம் தேர்ந்தெடுத்த பாதையில் தம் பயணத்தை தொடர்ந்தனர்.

(“அகிம்சாவாதியும் ஆயுததாரியும் இறுதியில் அடைந்தது ஏமாற்றமே !” தொடர்ந்து வாசிக்க…)

இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.

 

புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். பல இளஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்த பின்னால் வருத்தப்பட்டார்கள். சிலர் தாங்கள் இறந்துவிடுவதே நல்லதென நினைத்தார்கள் இறந்தார்கள்… பலர் இணைந்த பிறகுதான் உட்படுகொலைகள், சகோதரப் படுகொலைகள் செய்ய வேண்டியதற்கு ஆளானார்கள். இந்திய அமைதிப்படையுடன் பிரபாகரன் யுத்தம் தொடுத்த பின்னர் பல நூற்றுக்கணக்கான புலிகள் இதுதான் தருணம் என இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து ஐரோப்பாவிற்கும், கனடாவிற்கும் சென்றுவிட்டார்கள். குறிப்பாக கிட்டுவுடன் சேர்ந்து இயங்கிய பல புலிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

(“இது தமிழினியின் மரணத்தைக் கொச்சைப்படுத்த அல்ல.” தொடர்ந்து வாசிக்க…)

நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்…..கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்….!!!!

இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பெண்கள் சிறுவர் பிரிவின் மாதாந்த கூட்டத்துக்கு சென்றிருந்தேன். வழமைபோல கூட்டத்தில் சுவாரசியமான விடயங்கள் (பெண்கள் சிறுவர் சம்பந்தப்படாத) பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது….அடுத்த கூட்டத்தையும் இதே போல பயனுள்ளதாக(?) இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உறுதி பூண்டு கூட்டத்தை நிறைவு செய்தனர்.

(“நாங்கள் உரிமைக்காக மட்டும் போராடுவோம்…..கடமையை செய்ய காலியில இருந்து காமினி வருவான்….!!!!” தொடர்ந்து வாசிக்க…)

டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று.

(பீமன்)

தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்துவிட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளப்புக்கு எரியும் சுக்குவிறகுக்கட்டைபோன்று கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக புகைந்துகொண்டிருந்து இறுதியாக கிளிநொச்சியில் அணைந்திருக்கின்றது. இறுதிக்கிரிகையும் முடிந்தாயிற்று. பலர் டேவிட் ஐயாவின் புகழ் பேசியிருக்கின்றார்கள். பலர் அவரின் தியாகம், திறமை, வாழ்வியல் என்பன பற்றி எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அக்கினி பிழம்பு வெறும் புகையாக மாற காரணம் யாது , 3 தசாப்தங்கள் அவர்இருண்ட யுகத்தில் வாழக் காரணம் யாது என்ற கேள்விக்கு பதில் தேட வேண்டும்.

(“டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினியின் சிறு குடிலில்…

(விஸ்வா)
தமிழினியின் மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு, இதனை எழுதுகின்றேன். பரந்தனிலிருந்து முல்லைத்தீவிற்கு செல்லும் பிரதான வீதியில், சற்று தூரம் சென்று இடப் பக்கமாக திரும்பும் ஒரு ஒழுங்கையில் சிறிது தூரம் செல்ல, ஒரு வயல்வெளியின் நடுவே அமைந்திருக்கும் சிறு குடில்தான் தமிழினியின் வீடு. போரின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் பின்னர், பல மண் வீடுகளும், குடிசைகளும் கல் வீடுகளாகி விட்டன. வீடமைப்புத் திட்டங்கள் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு கணிசமான அளவில் நிறைவு பெற்று, தற்போதும் இந்திய வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழினியின் வீடு இன்னும் குடிசையாகவே இருக்கின்றது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

(“தமிழினியின் சிறு குடிலில்…” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினியின் மரண நிகழ்வு…….!

தமிழினியின் மரண நிகழ்வு ஒப்பற்ற ஒரு நாடகமாக நடந்திருக்கிறது. ஏறக்குறைய டேவிட் ஐயாவின் மரணச் சடங்கும் அப்படித்தான் நடந்தது. மரணச்சடங்கிற்காகவே காத்தும் பார்த்தும் இருக்கிறது ஒரு கூட்டம். செத்தவீட்டு அரசியல். தமிழினி சரணடைந்ததைப்பற்றியும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதைப் பற்றியும் தூற்றியவர்கள் பலர். அவருடைய வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இடையில் கைவிட்டவர்கள் சில தமிழ்த்தேசியவாதிகள். பின்னர் அந்த வழக்கை ஒரு சிங்களப் பெண் சட்டவாளரே முன்வந்து எடுத்து நடத்தி தமிழினியின் விடுதலைக்கான வழிகளைக் காட்டினார்.

(“தமிழினியின் மரண நிகழ்வு…….!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழினிக்காய் அழுகிறார்கள்.

(சாகரன்,ரகு கதிரவேலு)

மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார். மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள். தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள்? செல்வியும்,ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா? பத்மநாபாவும் தோழர்களும் துரத்தி துரத்தி புலிகளால் கொல்லப்பட்டபோது விருந்துண்டு கொண்டாடியவர்கள் தமிழினி உயிருக்காய் அழுது வழிகிறார்கள்.

(“தமிழினிக்காய் அழுகிறார்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

போய் வா போர் மகளே

(ப. தெய்வீகன்)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி.

(“போய் வா போர் மகளே” தொடர்ந்து வாசிக்க…)

என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று

காணாமற்போயிருந்ததாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் விநாயகத்தின் குடும்பம் எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வந்தவர் விநாயகம். புலிகள் பலமுற்றிருந்த காலத்தில் தலைமையின் பணிப்பில் கிளிநொச்சியில் இருந்து இயங்கிய இந்த விநாயகம், அப்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருந்தார். விடுதலைப்புலிகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நகர்வுகளுக்கான ஆளனிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பொறுப்புக்கள் இவருக்கு தலைமையினால் வழங்கப்பட்டிருந்தது.

(“என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று” தொடர்ந்து வாசிக்க…)