சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோஸ்இயக்கத்தை கலைத்து விட்டு புலிகளிடம் இணைந்த பாலகுமார் தொடர்பான பார்வை.

Eksath Newspaper
( முரளிமுன்னாள் புலி உறுப்பினர்))
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

இதுவரை சொல்லவோ எழுதவோ படாத ஈழ வரலாற்று நிழ்வுகளில் ஒன்று!

(பஷீர்)

(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.

மரண தண்டனை ..!

எனது அண்மைய பதிவு ஒன்றுக்கு எதிர் கருத்தாக அநேகமாக எல்லோரும் ஒரே விதமான கருத்துக்களையே முன் வைத்திருக்கிறார்கள். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் EPRLF நடந்து கொண்ட நடத்தைகள் தொடர்பாக.

மாகாண ஆட்சிக் கூடாரத்தில் குடியேறும் கிராம ராஜ்யம்

(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

பாராளுமன்ற ஆசனங்களில் ஐம்பதுக்கு ஐம்பது தராவிட்டால் வேறெதனையும் ஏற்கவும் மாட்டோம் – கேட்கவும் மாட்டோம் என 1948 வரை இலங்கைத் தமிழர் மத்தியில் மேலாதிக்கம் செலுத்திய தலைப்பா கட்டிய மேட்டுக்குடி அரசியல் திரு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில் பயணித்தது.

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

அ. வரதராஜா பெருமாள்)

(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. 

சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

கரிநாள் போராட்டத்தின் பயன்?

948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.

தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்

நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன்.
அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன்
சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன்
நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன்.

ஆலங்குளம்: இடர்கள் தாண்டி வாழும் பூர்வீக கிராமம்

(விஜயரெட்ண)

​மட்டக்களப்பு – பொலன்னறுவ வீதியில், ஓட்டமாவடியைத் தாண்டி, நாவலடிச் சந்தியைக் கடந்தால் தென்படும் கிராமம் ஆலங்குளம். பிரதான வீதியில் இருந்து வடக்கே இரண்டரைக் கிலோ மீற்றருக்கு வீடுகள் கொண்ட கிராமம். இந்தப் பூர்வீகக் கிராமத்திற்கு, திருக்கொண்டியாமடு என்ற இன்னொரு பெயருமுண்டு.