வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

(“வடக்கு கிழக்கு இணைப்பை இந்தியா தான் செய்யவேண்டும்!?” தொடர்ந்து வாசிக்க…)

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

(“எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம்.” தொடர்ந்து வாசிக்க…)

கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்!

(மீன்பாடும் தேனாடான்)

2004 ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்ததது. இந்த தேர்தலை எதிர் கொள்ள புலிகளின் சிபார்சின் பெயரில் புலிகளது அறிவுறுத் தலுக்கமையவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தியிருந்தது.
ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே மார்ச் மாதம் 4ம் திகதி புலிகளுக்குள் கருணாம்மானின் தலைமையில் கிழக்கு பிளவு உருவானது. பிளவுக்கு முன்பு வரை மட்டகளப்பு -அம்பாறை மாவட்டங்களின் விசேட தளபதியாக இருந்த கருணாம்மானே புலிகளின் சார்பில் இந்த வேட்பாளர்களை தேர்வு செய்திருந்த படியால் வன்னி புலிகள் மட்டகளப்பு வேட்பாளர்கள் பிளவின் பின்னர் கருணாம்மானுக்கு சார்பு நிலை எடுப்பார் என அஞ்சி வெற்றி வாய்ப்பை பெறக் கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டனர்.
இராஜன் சத்திய மூர்த்தி தேர்தலுக்கு முன்பே கொல்லப்பட்டார். அவரது புதைக்கப்பட்ட உடலைக்கூட தோண்டியெடுத்து வன்னி புலிகள் சின்னா பின்னப்படுத்தினர். கனகசபை என்னும் வேட்பாளரை கொலை செய்ய தயாரான புலிகளை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றியடைந்த கிங்ஸ்லி இராசநாயகம் வன்னி புலிகளால் கொல்லப்பட்டார். அவரை இராஜினாமா செய்ய வைத்த பின்னர் அவரை கொன்றனர். அந்த இடத்துக்கே அரியநேந்திரனை புலிகள் நியமித்தனர். அதற்கு பின்னர் அத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டார்.

(“கிங்ஸ்லி இராசநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றோரின் கொலைகளும் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்

(மாதவன் சஞ்சயன்)

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என ஒருவன் கூறியது போல் பதில் கூறுகிறார் வட முதல்வர் என, எதிர்க்கட்சி தலைவர் குறை கூறும் நிலையில் இருக்கிறது முதல்வர் செயல். அண்மையில் ஆங்கில இணையத்தில் வடக்கு மாகாண சபையின் செயல்திறன் இன்மை பற்றி அறிக்கை வெளியிட்ட திரு தவராசா தான் முன்வைத்த மேலே உள்ள கேள்விகளை முதல்வரிடம் கேட்ட போது, முதல்வர் ஐநா வின் வதிவிட பிரதிநிதியை சாடினாரே தவிர, கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலை அவர் தரவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் பற்றி அறிய ஏற்கனவே உள்ளே நடந்தவை என்ன என விசாரித்தபோது முதல்வரின் செயலாமை பற்றி தெரிய வந்தது. ஆமை புகுந்தவீடு உருப்பாடாது என்பர். வட மாகாண சபையில் இயலாமை, முயலாமை, செயலாமை என பல ஆமைகள் புகுந்து விட்டன.

(“வட மாகாண சபை முதல்வர்! எதிர்க்கட்சி தலைவர்! மோதல்+காதல்” தொடர்ந்து வாசிக்க…)

அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?

 

உரும்பிராய் இந்துக் கல்லூரி பின்னால் மேற்கே சட்டத்தரணி தியாகலிங்கத்தின் வீடு உள்ளது. தியாகலிங்கம் குடும்பத்தினர் இங்கிலாந்தில் வசிக்கின்றனர். ஆனால் அவர்களின் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் நீண்ட காலமாக வசித்து வந்தார். அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அந்த வளவிற்குள்தான் குடியிருந்தனர்.

(“அகிம்சாவதியும் ஈழத்துக் காந்தியும் என்றழைக்கப்படும் திலீபன்……?” தொடர்ந்து வாசிக்க…)

புலி திலீபனின் உண்மை முகம்

 

மாற்று இயக்கங்களை தடை செய்து அழித்தொழித்ததில் முக்கியமானவர் திலீபன்… தலைமறைவாக இருக்கும் புலி உறுப்பினர்கள் திடீரென்று ஊருக்குள் வருவார்கள். இன்றைக்கு இந்த இடத்தில் கூட்டம் ஒன்று வைக்க வேணும் என்பார்கள். திலீபனின் ஊர் ஊரெழு. ஆவரங்காலைச் சேர்ந்த முரளி (கிங்கோ) முன்னர் ஐரோப்பாவில் இருந்தவர். பின்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். முரளி உரும்பிராய்க்கு வரும்போது திலீபனையும் அழைத்துக்கொண்டு பிரச்சாரக்கூட்டங்களுக்கு வருவார். முரளி எனது வீட்டுக்கும் வருவதுண்டு. காரணம் எனது ஊருக்குள் இளைஞர்களை இயக்கத்தில் இணைக்கும் முயற்சியில் முரளி ஈடுபட்டிருந்தார். என்னையும் இயக்கத்தில் இணையும்படி கேட்டுக்கொள்வார்.

(“புலி திலீபனின் உண்மை முகம்” தொடர்ந்து வாசிக்க…)

எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?

(மாதவன் சஞ்சயன் )

நல்லாட்சியில் கூட மாறாது தொடரும் மோசமான நிலை இதனை எழுதத் தூண்டுகிறது. சிறைகளில் வாடும் எம் உறவுகள் தம் விடுதலை வேண்டி தொடங்கிய உண்ணா விரதம் சிலருக்கு அரசியல், பலருக்கு வேதனை. இவர்கள் ஒன்றும் கொலையாளிகளோ, பாலியல் வன்புணர்வில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களோ அல்ல. இனத்துக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் அல்லது, போராளிகள் என்று அவர்கள் நம்பியவர்ளுக்கு உதவி செய்தவர்கள். அவர்களை பிடித்த படையினர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிடித்தோம் என்ற சாட்சியங்களை அன்றே கொடுத்திருந்தால் நீதி மன்றில் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது எப்போதோ வெளிவந்திருக்கும். மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரண அடிப்படையில், கொட்டியா (புலி) என்று சந்தேகித்து, விசாரணை கூண்டில் அடைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன.

(“எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை

(சுகு-ஸ்ரீதரன்)

எவ்வாறானதோ இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் சர்வதேச தலையீட்டுடன் அரசியல் சமூக பொருளாதார செயற்பாடுகள் நிகழவேண்டியிருக்கின்றன. அவ்வாறு இல்லாது இலங்கையினுள் மாத்திரம் நிகழவேண்டும் என என கருதுவதெல்லாம் சற்று பாமரத்தனமான சிநதனைப்போக்காகும். நீண்டகால யுத்தம் சமூக ஜனநாயக செயற்பாடுகளுக்கான இடைவெளிகளைக் குறைத்து அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை என்பனவெல்லாம் சிதைவடைந்ததும்- அகங்காரமானதும் -ஊழல் நிறைந்ததும் -அதிகார துஸ்பிரயோகம் சமூகத்தின் மீது பலாத்கார பிரயோகம் இவற்றைக் கொண்ட அதிகார வர்க்கத்தை உருவாக்கியுள்ளது.

(“சர்வதேச அனுசரணையுடன் உள்நாட்டு விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளையான் பழிவாங்கப்படுகிறாரா?

(மீன்பாடும் தேனாடான்)

கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.அதில் பல தமிழ் தலைவர்களை புலி பயங்கரவாதிகளே கொன்றனர். 2004ன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இரண்டாக பிளவு பட்டு நின்றபோது இதுபோன்ற பல கொலைகள் இடம் பெற்றது. அப்போது தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டனர். குறிப்பாக 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்ட இராஜன் சத்தியமூர்த்தி 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராச சிங்கம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மட்டகளப்பு தொழில் நுட்பகல்லூரி அதிபர் கைலைநாதன் என இப்பட்டியல் நீளும்.

(“பிள்ளையான் பழிவாங்கப்படுகிறாரா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது

 

வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது.  இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(“அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது” தொடர்ந்து வாசிக்க…)