டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.

வறுமையும் அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன?

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

(தோழர் வை. அழகலிங்கம்)

வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை விவாதிக்கின்றனர்பள்ளி ஆசிரியர்களின் ஆன்லைன் கற்பித்தல் வேலைநிறுத்தம் ‘ஊதிய முரண்பாடுகளை’ நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளுடன் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வேலை நிறுத்தம் தொடங்கி 18 நாட்கள் ஆகிவிட்டன.

சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்கான சர்வதேச வருடமும் ஹிஷாலினியும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீட்டில், பணிபுரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி எனும் சிறுமி, தீக்காயங்களுக்கு உள்ளாகி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்தச் சிறுமி, நீண்ட காலமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகவும் மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

இலங்கையின் முதலாவது மருத்துவப் பாடசாலை அல்லது போதனா வைத்தியசாலை

1847 இல் “டாக்டர் கிரீன்” என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் இன்றும் ‘கிறீன் மெமோறியல் வைத்தியசாலை’ எனும் பெயரில் சேவையாற்றி வருகின்றது. மருத்துவர் கிறீனுடன் சாப்மன்,டான்போர்த் முதலான மிஷனறிமாரும் தமிழ் கற்றுத் தமிழில் மருத்துவப் பணியாற்றினரென அறிய முடிகின்றது.அத்துடன் இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவது மாணவர் தொகுதியில் இரண்டு இலங்கையர்கள் மருத்துவக் கல்வி கற்றதுடன், அவர்கள் இருவரும் யாழப்பாணத் தமிழர்கள் எனவும் அறியப்படுகின்றது.

சிறுமியை தீயில் தள்ளிய கொடுங்கரங்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பிலுள்ள வீட்டில்  பணிபுரிந்த நுவரெலியா, டயகமவைச் சேர்ந்த சிறுமி  ஹிஸாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். 

வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்

சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அணை கட்டுவதே சிறந்த ‘விவசாயி’இன் பண்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண் ஹிஷாலினி ஜுட் குமார், டயகமவைச் சேர்ந்த சிறுமி, கடந்த மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு, 12 நாள்களின் பின்னர் மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன்னர், தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்ததாக சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்

அந்த மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் -பெயரைச் சொன்னால் கோவித்துக்கொள்வார்.தம்பட்டம் அடிக்கவேண்டுமா என்று சினப்பார்.

கோவையில் அவர் இளைஞனாய் உலவிய காலத்தே -கட்சி கட்சி என்று செங்கொடி பிடித்து அலைவதையும் -முழு நேர ஊழியராகி, கட்சிக்கு உழைக்கப்போகிறேனென்று ஒற்றைக்காலில் தவமிருந்ததையும் கண்ணுற்ற பெற்றோர் -அவரை திசை திருப்புவதற்காக எண்ணி மாய்ந்தனர்.

ஏதாகிலும் ஒரு வருவாயீட்டும் பணியில் இணைத்துக் கொண்டு விடுவானாயின், ‘திருந்தி விடுவான்’ என்று பகீரத முயற்சிகள் செய்ய -அந்தத் தோழர் என்ன செய்தார் தெரியுமா?தன் கையை எரியும் நெருப்பில் கருக்கிக் கொண்டார்!அதிர்ந்து போன பெற்றோர் வாயடைத்து நின்றனர்.அதுபோழ்தில் – ஒருநாள் – புலர்காலையொன்றில் அவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.