இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!

மற்றையவர்களின் செயற்பாட்டுச் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பிரபாகரன் தடுத்து கைகோர்த்து நின்ற மற்றத் தலைவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றதன் விளைவு தான் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலின் அழிவுக்கு இட்டுச்சென்றது. 30 வருடங்கள் புலிகள் மட்டும் செயற்படலாம் என்ற செயற்பாட்டுச் சுதந்திரத்தின் விளைவுகள் தான் இவை. ஏதோ செயல் வீரர்கள் வெட்டிப் புடுங்குகிறோம் என்று சொந்த மக்களையே பலி கொடுத்தும் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது இந்தப் புலியிசத்தால்.

(“இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

(Kiri shanth)

( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.)

(“யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?” தொடர்ந்து வாசிக்க…)

சாவினை அடுத்த சாணக்கியம் என்ன?

(ப.தெய்வீகன்)

அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது.

(“சாவினை அடுத்த சாணக்கியம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)

சங்க காலமும் கீழடி புதை நகரமும்

சங்க இலக்கியங்கள் கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட கால தமிழர் வாழ்வியலையும் அவர் தம் பண்பாட்டு கூறுகளையும், நாகரிக செழுமையயையும் எடுத்தியம்புகின்றன். ஆனால் அவற்றுக்கான தொல்லிதல் சான்றுகள் மிகக் குறைவாகவே கிடைத்தன . உலகின் பல நாகரிகங்களின் செழுமையயை எகிப்தும், மொசப்பட்டோமியாவும், மொகஞ்சதாரோவும், கிரெக்கமும், ஏதன்சும் பறை சாற்றி நிற்கின்றன. தமிழர்களின் பண்டை நாகரிகத்தின் அழிந்து போன பல நகரங்களை நாம் கற்பனையிலேயே காணவேண்டியிருந்தது.

(“சங்க காலமும் கீழடி புதை நகரமும்” தொடர்ந்து வாசிக்க…)

கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம்……?

கோவில் தேரிழுக்க இராணுவத்தை அழைக்கும்போது வராத இனவாதம் மாணவர்களை சுட்டதால் எப்படி வந்தது.இப்படி எத்தனை சம்பவங்கள் தமிழ்ப் பொலிசாரினால் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டன என்பது தெரியாமல் உளறுகிறார்கள்.தமிழன் சுட்டால் இனவாதம் இல்ல.சிங்களம் பேசுபவர் சுட்டால் இனவாதம்.புலிகள் தெருத்தெருவாகச் சுட்டபோது கொந்தளிக்காத சமூகம் இப்போது கொந்தளிப்பது ஏன்.அரசியல் பிழைப்பு.சமூகத்தை சீரழிப்பது,சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது.என்ன மலிவான அரசியல் சிந்தனை.சட்டத்தை மதிக்காத பல்கலைக் கழக மாணவர்கள் நாளை எப்படி சமூகத்தை கட்டி எழுப்புவார்கள். பொலிசாரின் நடவடிக்கை தவறானது.கண்டுக்க வேண்டியது.சட்டம் நிர்வாகத்துக்கு உட்பட்ட தவறு. மன்னிக்க முடியாதது.ஆனால் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது இனவெறியை ஊக்குவிப்பதும் மன்னிக்க முடியாது.

(Vijaya Baskaran)

ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!

பாராளுமன்றில் அனுர குமார அவர்கள் மலையக மக்கள் தொடர்பாக நிகழ்த்திய உரை என்னை நெகிழச் செய்தது. உணர்ச்சி பூர்வமான, நியாயமான உரைக்காக தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை பகிர்கிறேன்.

(“ஒரு சிங்கள தலைவனுக்கு சிரம் தாழ்த்துகிறேன்..!” தொடர்ந்து வாசிக்க…)

கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்

யாழ்ப்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கற்கும் இரண்டு மாணவர்கள் இலங்கைப் பொலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பான அதிர்வலைகள் மக்கள் மத்தியிலும், தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் அதன் எதிர்த் தரப்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கைப் பொலிஸ் படை இரண்டு மாணவர்களை அதிகாலை வேளையில் கொன்று போட்டுவிட்டு அதற்கான தடயங்களை அழித்துவிட்ட சம்பவம் ஒரு வகையான அச்ச உணர்வைச் சமூக மட்டத்தில் தோற்றுவித்துள்ளது. இரண்டு கொலைகளின் பின்புலத்திலுள்ள அரசியல் காரணங்கள் எதுவாயினும், அவற்றை முன்வைத்து நடத்தப்படும் பிழைப்புவாத அரசியல் ஆபத்தானது. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலின் குறுக்குவெட்டு முகம் கொலைகளின் பின்னே தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.

(“கொல்லப்பட்ட மாணவர்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் பிழைப்பும் பேரினவாதிகளும்” தொடர்ந்து வாசிக்க…)

மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?

(சாகரன்)

மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் இதற்கு நீதிகோரியும் பிரதேசம் தாண்டி இன மத மொழி வேறுபாடுகள் இன்றி மக்கள் இயல்பாக வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த ஐக்கியமான போராட்டத்தை ஏனைய விடயங்களிலும் விஸ்தரிப்பதற்குரிய தலமையை… செயற்பாட்டை… நாம் இனம் மொழி சமய வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கியிருக்கு வேண்டும் அவ்வாறு நாம் செய்வில்லை.

(“மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?” தொடர்ந்து வாசிக்க…)

பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?

முள்ளிவாய்க்கால்வரை நீடித்த எமது ஆயுத போராட்டம் அரச பயங்கரவாதத்தால் ஆரம்பித்து, சகோதர படுகொலை வரை தொடந்து பின்னர், ஒரு மொழி பேசும் சகோதர இனத்தின் மீதான வன்மமாக மாறியது மட்டுமன்றி, அப்பாவி சிங்கள பொதுமக்களையும் பலிகொண்டு இறுதியில் தானும் பலியாகிப் போனது. கல்வியில் பண்பாட்டில் விருந்தோம்பலில் ஒழுக்கத்தில் அன்னியரும் மெச்சத்தகு இனமாக இருந்த எம்மவர் வாழ்வில், பதவி அரசியல் எனும் புயல் வீசி அனைத்தையும் கபளீகரம் செய்தது.

(“பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?” தொடர்ந்து வாசிக்க…)

The Building Storm Against the TPP

The Trans-Pacific Partnership (TPP) is the one of the most recent of the neoliberal trade agreements being proposed. The final proposal was signed off in February 2016 in Auckland, New Zealand by 12 countries – Australia, Brunei, Canada, Chile, Japan, Malaysia, Mexico, New Zealand, Peru, Singapore, the USA, and Vietnam, after 7 years of negotiation. It awaits ratification in each country. It is a companion agreement to the existing NAFTA agreement, and the CETA and TTIP agreements that Canada and the U.S. are respectively negotiating with the EU.

(“The Building Storm Against the TPP” தொடர்ந்து வாசிக்க…)