பற்குணம் (பதிவு 4)

வரணி மகாவித்தியாலயம் அவருக்கு ஓரளவு நிம்மதி கொடுத்தது.எமது பெரிய அண்ணன் பத்தாவது ஒருவாறாக சித்தியடைந்தார்.அம்மாவும் திரும்பி வந்துவிட்டார்.வீட்டு நிலைமைகள் ஓரளவு வழமைக்குத் திரும்பின. அம்மா இரண்டரை வருடம் காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருக்க வேண்டிய பிரதான காரணம் அங்கே கச நோய் பற்றிய விபரமான டாக்ட்ரை இல்லாமல் போனதே.பின்னாளில் லண்டனில் படித்து வந்த டாக்டர் ஒருவரே பல நோயாளிகளைப் பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பினார்.அதுவரை காலமும் அந்த நோயாளிகள் சீமந்து ஆலையின் புகையை சுவாசித்ததே மிச்சம்.ஆயினும் அம்மாவை பூரண குணப்படுத்தியது தியாகேசர் என்கிற நாட்டு வைத்தியர்தான்.

(“பற்குணம் (பதிவு 4)” தொடர்ந்து வாசிக்க…)

கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ….

 

12 பேரை மட்டுமே ஏற்றிச்செல்ல வடிவமைக்கப்பட்ட படகு அது , அளவுக்கு அதிகமான பாரங்களுடன் 81 பேர் பயணம் செய்தாக வேண்டும். படகில் ஆட்களை ஏற்றும் பொறுப்பில் இருந்தவர் தலைவரிடம் வந்து அனுமதிகேட்டார் “இன்னுமொரு நண்பர் நம்மோடு பயணம் செய்ய விரும்புகிறார்”. தலைவர் அந்த புதிய நபரை பார்த்தார் ஏற்கனவே அவருக்கு அறிமுகமான மனிதர்தான். மெலிந்த தோற்றம், சற்று குட்டையான உருவம், ஆள் கணக்கிற்கு வரட்டும் என்று நினைத்திருப்பார் போல, அந்த தலைவர் ஒப்புக்கொண்டார்.

(“கமிலோ சியன்பியுகோஸ். சரியான் ஆயுத பயிற்சி பெறாததால் தலைவர் பிடல் காஸ்ட்ரோ….” தொடர்ந்து வாசிக்க…)

சிலோன் விஜயேந்திரன்

திருவல்லிகேணியில் கெல்லட் ஸ்கூல் எதிரில் என் அறைக் கதவு தட்டிவிட்டு அமைதியாக நின்றிருந்த அந்த மனிதரை பார்த்ததும் துக்கி்வாரிப் போட்டது எனக்கு. தோள்பட்டையில் புரளும் ப்ரவுன் கலர் முடி, ஆஜானுபாகு தோற்றம், முரட்டு ஷூக்கள் என்று திகில் கிளப்பினார். அவர் நடிகர் சிலோன் விஜயேந்திரன்.
’வணக்கம் தோழரே .உள்ள வரலாமா’ கனிவான அவரது குரல் அவரை பற்றிய என் எண்ணத்தை மாற வைத்தது. ‘வாங்க தோழர்’ நிங்க மு.மேத்தாகிட்ட இருகறதா நண்பர்கள் சொன்னாங்க அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.’ என்று எனக்கு அறிமுகமானார். பேச்சில் ஈழத்தின் வாசம் அதிகமிருக்கும். அப்போதிருந்து நல்ல நண்பரானார்.

(“சிலோன் விஜயேந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ( பதிவு 3)

அண்ணன் பற்குணம் நாங்கள் அறிந்தவரையில் மிகவும் துணிச்சலான மனிதர்.ஆனால் அவர் சிறு பராயம் அப்படி அல்ல.குழந்தையில் இளம் பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டு தப்பியவர்.15 வயது வரையில் மிகவும் பயந்த ஒருவராகவே வாழ்ந்தவர். அம்மா காங்கேசன்துறை வைத்தியசாலையில் இருந்த காலத்தில் இவர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில் பெரிய அண்ணனைத் தொடர்ந்து படிக்க சேர்ந்தார்.இவர் சேர்ந்த காலத்தில் நடராசாவும் மற்றும் இருவரும் படிப்பை முடித்துவிட்டனர்.எனவே பெரிய அண்ணன் துணையோடு பள்ளிக்குப் போய் வந்தார்.இவர் சேர்ந்த பின் ஒரு உண்மை அய்யாவுக்கு தெரியவந்தது.பெரிய அண்ணன் பாடசாலைக்கு ஒழுங்காக போவதில்லை .கண்டித்துப் பார்த்தார்.அப்பவும் ஏமாற்றமே.எனவே அவரை வரணி மகாவித்தியாலயத்துக்கு மாற்றிவிட்டார்.

(“பற்குணம் ( பதிவு 3)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்

தமிழ்ச்செல்வன் கொலையில் வெளியாகும் ‘CIA’ இரகசியம்..! பின்னணியில் அமெரிக்கா..?

விடுதலைப் புலிகளின் அழிவில் தமிழ் இனப்படுகொலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வகித்த பாத்திரம் பற்றி ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. அது குறித்து ஏராளமான ஆதாரங்கள் வெளியான போதிலும் வலதுசாரி போலித் தமிழ்தேசியவாதிகளான அமெரிக்க அடிவருடிக் கும்பல் அவற்றை எல்லாம் வேண்டுமென்றே மறைத்து வந்துள்ளது. உலகில் பல கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை தீர்த்துக் கட்டியது போன்று புலிகளின் தலைவர்களையும் அழிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. அதனை இரகசிய CIA ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது.

(“தமிழ்ச்செல்வனை காட்டிக் கொடுத்த நடேசன்” தொடர்ந்து வாசிக்க…)

சங்கரின் கொலைக்கு யார் காரணம்….?

பேருந்திலோ, தொடர்வண்டியிலோ அதிகபட்சம் அரைமணி நேரம் யாருடனாவது புதிதாக பேசிக்கொண்டு வந்தால் போதும், அடுத்த நிமிடம் “நீங்க எந்த ஆளுங்க…?” என்று கேட்டுவிடுவதுதான் பெரும்பாலான தமிழர்களின் வழக்கம். தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை போடும் வழக்கம் தமிழ்நாட்டில் தற்போது குறைந்துவிட்டதால் இப்படி சாதியை நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ளும் தவறான பழக்கம் நம் மக்களிடையே தோன்றியிருக்கலாம். இதோ இப்போது சங்கர் என்ற தலித் இளைஞரை சாதிக்கு பலி கொடுத்துவிட்டது தமிழ்நாடு. அண்மைக்காலங்களில் தமிழகத்தை உலுக்கிய “தலித் இளைஞர்களின்” கொலைகளில் இது மூன்றாவது கொலை.

(“சங்கரின் கொலைக்கு யார் காரணம்….?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் -(பதிவு-2)

எங்கள் அம்மாவின் பெயர் வள்ளிப்பிள்ளை.மூன்று ஆண்களுக்கு ஒரு பெண் பிள்ளை.சிறுவயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் அண்ணன்கள் அரவணைப்பில் வாழ்ந்தவர்.அய்யாவும் அம்மாவும் காதல் திருமணம்தான்.அம்மா மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். யாழ் குடாநாட்டின் பெரும் வயல்நிலப்பரப்பான தனங்கிளப்பு வயல்களில் அம்மாவின் காலடிகள் பதித்தவர்.எனது கிராமத்தில் இருந்து கேரதீவுப் -சங்குப்பிட்டி பால எல்லைவரை சென்று கூலிவேலை செய்து உழைத்தவர்.

(“பற்குணம் -(பதிவு-2)” தொடர்ந்து வாசிக்க…)

எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி – ஆனந்தசங்கரி

இலங்கை தமிழர் வரலாற்றில் தமிழ் மக்களின் பிரச்சனையில் தீவிரமாக செயற்பட்டு பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள், அவமானங்களையும் பட்டு நியாயமற்ற முறையில் உயிர் பறிக்கப்பட்ட ஒரு உத்தம தலைவன் எம்மை விட்டு பிரிந்து 27 வருடங்களுக்குள் அமிர்தலிங்கம் யார் என்று கேட்கின்ற இளைய தலைமுறையினருக்கு திருமதி மங்கையற்கரசி யாரென்று விளங்கப்படுத்துவது சுலபமான காரியமல்ல.

(“எமது அரசியல் போராட்டத்தில் திருமதி மங்கையற்கரசி ஓர் விடிவெள்ளி – ஆனந்தசங்கரி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் (பதிவு 1)

(இது ஒரு தனி நபர் பற்றிய பதிவாக பலராலும் பார்க்கப்படலாம். ஆனால் என்பார்வையில் ‘பற்குணம்’ என்பது ஒரு சமூகத்தின் குறியீடாகவே நான் பார்கின்றேன். இந்தப்பதிவு தமிழ் சமூகத்திற்குள் நிலவி வந்த வருகின்ற ‘சிறுபான்மை’ என்ற கருத்தியலின் உள் கட்டமைப்பை தெளிவுபடுத்த உதவும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனவே இதனைப் இங்கு தொடரந்தும் பிரசுரிக்கின்றேன் – ஆசிரியர்)

எங்கள் பிறப்புக்கும் அறிவுக்கும் மூலகாரணமான அய்யாவில் இருந்து ஆரம்பிக்கின்றேன். அய்யா மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர்.ஒரே சகோதரி.சிறுவயதில் தாயை இழந்து தனிமையில் துன்பப்பட்டவர்.அவருக்கு கல்விமீது தீராத ஆசை.எமது கிராமத்தில் அந்தக் காலத்தில் சிறுபாடசாலை இயங்கியது.அதில் உயர் சாதிமாணவரகளுக்கே கற்பித்தனர்.அதில் அய்யாவின் வயதை ஒத்த சிலர் படிக்க விரும்ப அவர்களும் அனுமதித்தார்கள்.ஆனால் வெளியே நின்றுதான் படிக்க வேண்டும்.கோடை காலம் வெயில்.மழைகாலம் வெள்ளம்.இதைச் சகித்தே படிக்கவேண்டும்.

(“பற்குணம் (பதிவு 1)” தொடர்ந்து வாசிக்க…)

புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……

ஆரம்பத்தில் மிதவாத அரசியல் ஈழ தலைவர்களை துரோகி என்றீர்கள் அதற்க்கும் தலையாட்டினோம். பின் மாற்று போராட்ட தலைவர்களையும் போராளிகளையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். எல்லா சிங்கள அரசையும் சிங்கள தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். முஸ்லிம்களை ஒதுக்கினீர்கள் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம். இந்திய தலைவர்களையும் இந்தியாவையும் அவர்களோடு உறவு வைத்திருந்த தலைவர்களையும் துரோகி என்றீர்கள் அதற்கும் தலையாட்டினோம்.

(“புலம் பெயர் தேசங்களில் மக்களை ஏமாற்றி பிழைக்கும் புலி பினாமிகளே……” தொடர்ந்து வாசிக்க…)