1961 இல் எங்கள் பெரிய அண்ணன் திருமணம் நடந்தது. அம்மா காட்டிய ஆர்வமும் பெரிய அண்ணன் திருமணம் உடனே நடக்க காரணமானது.இதனால் கொஞ்சம் கடன் வந்தது.அதே வருடம் சிறுபான்மைத் தமிழர் மகாசபை மூலமான ஆசிரியர் நியமனம் சரசாலைப் பாடசாலையில் கிடைத்தது.இது எங்கள் அய்யாவின் முயற்சிக்குக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது.மேலும் அவருக்கு விரைவிலேயே நிரந்தர நியமனமும் கிடைத்துவிட்டது.நடராசாவின் பின்னால் சென்றோர் நியமனம் கிடைத்தாலும் நிரந்தரமாக பல வருடங்கள் காத்திருந்தனர்.எமது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் படித்த முதல் தலைமுறை ஆசிரியர்களை உருவாக்கிய பெருமை சிறுபான்மை தமிழர் மகா சபைக்கும் எம்.சி. சுப்பிரமணித்தையும் சாரும்.இதற்கு பாதை வகுத்துக் கொடுத்த பெருமை முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களுக்கு இந்த சமூகம் கடமைப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து முன்னெடுத்த சிறிமா அம்மையாரும் போற்றப்பட வேண்டியவர்.
Category: கட்டுரைகள்
Articles
பற்குணம் (பதிவு 7)
இடைச் செருகலாக
பண்டாரநாயக்க இறந்தாலும் அவரின் திட்டங்களை அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதன் பிரகாரம் வடபகுதியில் பல பாடசாலைகளை சிறுபான்மை தமிழர்களுக்காக மகாசபை மூலமாக நிறுவியது. இதன் மூலம் படித்த சிறுபான்மை தமிழ் இளைஞர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதாக அறிவித்தது. இதனால் எம்.சி. சுப்பிரமணியம் தலைமையிலான மகாசபை தீவிரமாக இயங்கியது. 1960 இல் தனியார் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்டன. எமது கிராமப் பாடசாலையும் அரசு மயமானது. நடராசா அங்கு கற்பித்த போதும் நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை.
தவிர்க்க முடியாத பிளவு
(மப்றூக்)
எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரஸ§க்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் தொடங்கி விட்டது. மு.காங்கிரஸின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
பொட்டம்மான் மீது சீறிப் பாயும் தமிழினி
புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’ தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்டகுறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.0 மணியளவில் கவிஞர் பொன். காந்தன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
(“பொட்டம்மான் மீது சீறிப் பாயும் தமிழினி” தொடர்ந்து வாசிக்க…)
அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”
(பனிமலரோன் )
பணம், செல்வாக்கு இருந்தாலும் இங்கிதமாகப் பழகுபவர்களை டவுன் டு எர்த் பெர்சனாலிட்டி என்பார்கள். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் கலாபவன் மணி. பழசை மறக்காத பக்குவம் அவரிடம் கடைசிவரையில் இருந்தது என்பதற்கு அவர் இறந்ததும் சாலக்குடியில் திரண்ட மக்கள் கூட்டமே சான்று. கலாபவன் மணி இருநூறு தென்னிந்தியப் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் தாண்டி, மதுரையில், கலாபவன் மணி ரசிகர்கள் மன்றம் இருக்கிறது. மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் போன்ற நகரங்களிலிருந்து ரசிகர்கள் கலாபவன் மணிக்கு இறுதி மரியாதை செய்வதற்காக சாலக்குடி வந்திருந்தது சாலக்குடி மக்களையும் மலையாளப் பட உலகையும் ஒருசேர நெகிழச் செய்தது.
(“அஞ்சலி: கலாபவன் மணி – “அங்கீகாரம் கிடைக்க மரணம் அவசியம்!”” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம் (பதிவு 6)
அண்ணன் பற்குணம் இறுதியாக படிக்க சம்மதித்தார்.ஆனால் பாடசாலையில் வகுப்புகள் தொடங்கிய சில மாதங்களின் பின்பே சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் சேர்ந்தார்.
படிக்க சேரும் முன்பு கஷ்டம் என்ற வார்த்தை எனக்கு சொல்ல வேண்டாம் என்பதையும் முன்னெச்சரிக்கையாக சொன்னார்.ஆனாலும் அவருக்கு வீட்டின் சூழல் தெரியும்.
சொத்துக்குவிப்பு வழக்கும்… பன்னீரின் செழிப்பும்! ( பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை- பாகம் 2 )
பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி எப்பொழுதும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்திருக்கிறது. அதனால் சசிகலாவின் அக்கா மகன் தினகரனை கட்சிக்கு கொண்டு வந்து 1999 ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வைத்தார் சசிகலா. முதலில் தினகரனை எதிர்த்து திமுக சார்பில் கம்பம் செல்வேந்திரன் போட்டியிட்டார். அப்போது பன்னீர் பெரியகுளம் நகராட்சி சேர்மன். அவர் செல்வேந்திரனின் மூலம் கட்சிக்கு வந்தவர் என்பதால் அவருக்கு சாதகமாக நடந்து கொள்வார் என்று பயந்த சசிகலா முதலில் தேர்தல் வேலைகளை பன்னீருக்கு கொடுக்க தயங்கினார்.
பற்குணம் (பதிவு 5)
1956 ம் ஆண்டு பண்டாரநாயக்காவின் அரசு பதவி ஏற்றது.அரசு நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. பாடசாலைகள் அரசாங்க மயமாக்கப்பட்டன. தாய் மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் எங்களைத் போன்ற ஏழைக்குடும்பங்கள் வாழ்வுக்கு நம்பிக்கை வளர்ந்தது. இதே பண்டாரநாயக்கா எம்.சி. சுப்பிரமணியம் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபையின் கோரிக்கையை ஏற்று பல சட்டங்கள் இயற்றினார். ஆலயங்கள்,பொது இடங்களில் தீண்டாமை தடை செய்யப்பட்டது. சிறுபான்மைத் தமிழர்களுக்கு பாடசாலைகள் கட்டிக் கொடுக்கவும் வேலை வாய்ப்புகள் வழங்கவும் உறுதியளித்தார். ஆனால் பண்டாரநாக்கா வைத்த கோரிக்கை ஒன்றை செயற்படுத்த எம்.சி.சுப்பிரமணியம் தயங்கிவிட்டார்.
ஈழ தமிழர் உரிமை போராட்ட ஆரம்ப அரசியல் பெண் போராளி அக்கினியில் சங்கமம்!
ஈழ தமிழர் உரிமை போராட்ட வரலாற்றை எழுதும் எவராலும் தவிர்க்க முடியாத முதல் பெண் அரசியல் போராளி ஞாயிறு [20-03-2016} தன் சொந்த மண்ணை விட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தீயில் சங்கமமானார். திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கம் இன்று எம்மிடையே இல்லை. விழியோரம் நீர் கசிய அந்த அன்னைக்கு, அக்காவுக்கு, தங்கைக்கு, தோழிக்கு விடைகொடுக்க கூடியிருந்த அனைவரும் அவர் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் கடைசிவரை அவரின் கேள்விக்கு எவராலும் பதில் கூற முடியவில்லை. தன்னை சந்திக்கும் எவரிடமும் அண்ணன் அமிர் பற்றி பேசும் போது அவரின் கேள்வி, ஏன் அவரை சுட்டவங்கள்? என்பதே. இறுதிவரை எம் இன உரிமைக்கு குரல் கொடுத்தவரை ஏன் சுட்டவங்கள் என்ற அந்த கேள்வி என்னை கடந்த காலத்துக்கு அழைத்து செல்கிறது.
(“ஈழ தமிழர் உரிமை போராட்ட ஆரம்ப அரசியல் பெண் போராளி அக்கினியில் சங்கமம்!” தொடர்ந்து வாசிக்க…)
அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )
மிஸ்டர் பணிவு ஓபிஎஸ், சிக்கலில் உள்ளார் என்பதுதான் இன்றைய அரசியலில் அனல் செய்தி. வேட்பாளர் தேர்வு, ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றிருந்த ஐவரணியில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிக்கை, கூட்டணி… என தேர்தல் வேலைகளை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இவர்களைப் பற்றிய அப்டேட்டில்தான் ஜெயலலிதா பரபரப்பாக இருப்பதாக பரபரக்கிறது கார்டன் வட்டாரம். அதுவும் தலைமைக்கு எதிராக தனி அணி திரட்டினார், ஜெயலலிதாவுக்கு எதிராக அசுவமேத யாகம் நடத்தினார், அமெரிக்க கம்பெனியை வளைத்தார்… என பணிவு பன்னீரைப் பற்றி வரும் செய்திகள் ஒவ்வொன்றும் பகீர் திகீர் ரகம்.
(“அம்பி டு அந்நியன்…! (பணிவு பன்னீர் ‘செல்வம்’ சேர்த்த கதை! மினி தொடர்- 1 )” தொடர்ந்து வாசிக்க…)