மதுவரி திணைக்களத்தின் சாதனை

இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் ரூ120.5 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும். இதேபோல், இலங்கை மதுவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாவையும், 2022 ஆம் ஆண்டு 170.3 பில்லியன் ரூபாவையும் வருவாயாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வீதியில் கண்டெடுத்த மணி பேர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

தன்னால் கண்டெடுக்கப்பட்ட மணி பேர்ஸ் ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார். 

வெடி ஹிட்டி மலையில் வழிபடும் பக்தர்கள்

கதிர்காம பருவகாலத்தில் பக்தர்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக  வெடி ஹிட்டி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவர்.  கதிர்காமம் ஆலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பாறையில்தான் இந்த கோவில் உள்ளது.

பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மாமுனை பகுதியில் நேற்றிரவு (03) பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.  கடற்படையினருக்கும் மருதங்கேணி பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு மாமுனை பகுதி முழுவதும் ஒரு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

செம்மணியில் தோண்டத் தோண்ட வருவது சிறுவர்களின் எலும்புக்கூடுகள்

 செம்மணி மனித புதைகுழியில் வியாழக்கிழமையும் (03)  சில மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

இந்த கத்தியை வைத்திருந்தவர் கைது

கூரான கத்தியின் உடமையில் வைத்திருந்த சந்தேக நபரும் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த மேலும் ஒரு சந்தேக நபருமாக இருவர் கோப்பாய் பொலுசாரினாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி திடீர் விஜயம்

தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ அவர்கள் 2025 ஜூலை 04,ம் திகதி அன்று காலை இலங்கை விமானப்படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு  இலங்கை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை சந்தித்தார்.

முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல் விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை ஜூலை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்

அநாகரீகமாக நடந்து கொண்ட பொலிஸாருக்கு இடமாற்றம்

ஹட்டன், பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய ஒரு சார்ஜன்ட் உட்பட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆறுவர் , ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிற பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

சிறந்த உணவு பட்டியலில் இலங்கைக்கு 69வது இடம்

உலகில் சிறந்த உணவு, சிறந்த உணவு கொண்ட நாடுகள் மற்றும் நகரங்களின் பட்டியலை, தனியார் பயண வழிகாட்டி நிறுவனமான ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்டுள்ளது. 100 நாடுகள் உள்ளடங்கிய இந்த பட்டியலில், 4.6 புள்ளிகளுடன் கிரீஸ் முதலிடத்தில் உள்ளது. இலங்கைக்கு 69வது இடத்தில் உள்ளது.