இலங்கையில் செய்யப்பட்ட முதல் தரப் போராட்டம்
இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் வெகு காலத்திற்குப் பிறகு இலங்கையின் தலை நகரில் நடந்த தூய எழுச்சியாகும்.
அரசியல் கட்சிகளின் பின்புலமில்லை, ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சார முறைமையில்லை, வாகனங்களில் மக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை, மது வழங்கி சனக்கூட்டம் திரட்டப்படவில்லை, உணவுப் பொதிகள் கைகளிலும்- “சந்தோசம்” சட்டைப் பைகளிலும் திணிக்கப்படவில்லை, கவர்ச்சிகரமான தலைவர்களில்லை, மேடையில்லை, அலறும் ஓலிபெருக்கியில்லை, ஆட்டமில்லை, பாட்டு இல்லை, நட்சத்திரப் பட்டாளத்தின் மேக்கப் முகங்களில்லை. கருப்புச் சட்டை எனும் முற்போக்கு அடையாளமும் , கனத்த மனங்களும் தைரியமான நெஞ்சுகளும் மட்டுமே இருந்தன. (“அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP” தொடர்ந்து வாசிக்க…)