அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP

இலங்கையில் செய்யப்பட்ட முதல் தரப் போராட்டம்

இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் வெகு காலத்திற்குப் பிறகு இலங்கையின் தலை நகரில் நடந்த தூய எழுச்சியாகும்.

அரசியல் கட்சிகளின் பின்புலமில்லை, ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சார முறைமையில்லை, வாகனங்களில் மக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை, மது வழங்கி சனக்கூட்டம் திரட்டப்படவில்லை, உணவுப் பொதிகள் கைகளிலும்- “சந்தோசம்” சட்டைப் பைகளிலும் திணிக்கப்படவில்லை, கவர்ச்சிகரமான தலைவர்களில்லை, மேடையில்லை, அலறும் ஓலிபெருக்கியில்லை, ஆட்டமில்லை, பாட்டு இல்லை, நட்சத்திரப் பட்டாளத்தின் மேக்கப் முகங்களில்லை. கருப்புச் சட்டை எனும் முற்போக்கு அடையாளமும் , கனத்த மனங்களும் தைரியமான நெஞ்சுகளும் மட்டுமே இருந்தன. (“அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த

இலங்கையின் அடுத்த பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சற்று முன்னர் பதவியேற்றார். அவருக்கான பதவியேற்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேற்கொண்டார். இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை, ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எடுத்து, அது தொடர்பான அறிவிப்பை, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியுள்ளது என்ற தகவலை, அமைச்சர் மஹிந்த அமரவீர வெளிப்படுத்திய பின்னர், இப்பதவியேற்புத் தொடர்பான தகவலும் வெளியானது. எனினும், இப்பதவியேற்பு, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டதா என்பது தொடர்பில், தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

(“பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திருகோணமலை தமிழர் சமூக ஐனநாயக்கட்சி செயற்குழு உறுப்பினர் செபஸ்தியன்(ரவி) மற்றும், காலம் சென்ற கிருபா ஆகியவர்களின் தாயார் காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார் சி.வி

அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகவும் அரசியலில் தொடரப் போவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் ஆலய வடக்கு வீதியின் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை
ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மக்கள் ஒன்றுகூடலிலேயே மேற்படி கருத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான சி.வி விக்னேஸ்வரன் வெளிப்படுத்தினார். அந்தவகையில், தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரிலேயே தனது கட்சியை விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து

இப்போதுள்ளசூழலில்காங்கிரஸ்கட்சியால்பொதுத்தேர்தலில்சுயமாகவென்று, ஆட்சிக்குவருவதுகடினம், பாஜகவைவீழ்த்தக்கூட்டணிஎன்பதுஅவசியமானதுஎன்றுகாங்கிரஸ்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பகீர்பேட்டிஅளித்துள்ளார்.
காங்கிரஸ்கட்சியின்மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்பிடிஐநிறுவனத்துக்குபிரத்தியேகபேட்டிஅளித்துள்ளார். அவர்கூறியிருப்பதாவது:
இன்றுள்ளசூழலில்அனைத்துஎதிர்க்கட்சித்தலைவர்களும்மத்தியில்ஆட்சிமாற்றம்தேவை, பாஜவைகண்டிப்பாகத்துரத்தவேண்டும்என்றவிஷயத்தில்தெளிவாகஇருக்கிறார்கள். தியாகம், ஒத்துழைப்பு, கூட்டணிஉருவாகவிட்டுக்கொடுத்தல்என்றுநீங்கள்இதைஎப்படிவேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளலாம்காங்கிரஸ்கட்சிதயாராகஇருக்கிறது.
எதிர்க்கட்சிகள்அமைக்கும்கூட்டணிகாங்கிரஸ்கட்சிக்காககண்டிப்பாகஇல்லாமல், மத்தியில்பாஜகஆட்சியைஅகற்றவேண்டும்என்றவிருப்பத்தின்அடிப்படையில்இருக்கவேண்டும்.

(“‘பாஜகவைவீழத்துவதுஇலக்கு; காங்கிரஸ்கட்சியால்சுயமாகஆட்சிக்குவருவதுகடினம்’: மூத்ததலைவர்சல்மான்குர்ஷித்கருத்து” தொடர்ந்து வாசிக்க…)

யெச்சூரியுடன் டீஸ்டாசெதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய்பிரச்சாரம்

பொய் பிரச்சாரத்தைகை விடாத சங்பரிவார் அமைப்பினர், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியுடன் நியூயார்க்டைம்ஸ் தில்லி செய்தியாளர் சுகாசினி இருப்பது போன்ற படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர். உண்மையில்அந்த படம் சமூகசெயற்பாட்டாளர் டீஸ்டாசெதல்வாத்-சீத்தாராம் யெச்சூரியுடன் இருக்கும் படமாகும். சபரிமலைக்கு ‘நியூயார்க்டைம்ஸ்’ செய்தியாளர் சுகாசினி சென்றது. சிபிஎம் ஏற்பாடு என்பதாகவும், பக்தர்களின் உணர்வை மதிக்காமல் அவர்கள் வேண்டுமென்றே சபரிமலையில் இளம்பெண்களை நுழைக்க முயற்சிப்பதாகவும் இந்த படத்துடன் பொய்பிரச்சாரத்தை பல்வேறு குழுக்களில் நடத்தி வருகின்றனர். (“யெச்சூரியுடன் டீஸ்டாசெதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய்பிரச்சாரம்” தொடர்ந்து வாசிக்க…)

‘புலிகளை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பு அச்சுறுத்துகிறது’

ஜனாதிபதித் தேர்தலையும் காலம் தாழ்த்துவதற்கே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் ​கொண்டுவரப்பட்டதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தது.

(“‘புலிகளை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பு அச்சுறுத்துகிறது’” தொடர்ந்து வாசிக்க…)

‘தனி ஈழம் வேண்டாம்; ரூ. 1,000 சம்பளமே வேண்டும்’

பெருந்தோட்ட மக்கள் தனி ஈழக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் ​சுரேஷ், அடிப்படைச் சம்பளத்தை ஆயிரமாக அதிகரிக்க, அரசாங்கத்தின் ​அழுத்தங்கள் தேவை எனவும் தெரிவித்துள்ளார். ராஜகிரியவில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்துடனான கலந்துரரையாடலின் பின்னர், அதில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

(“‘தனி ஈழம் வேண்டாம்; ரூ. 1,000 சம்பளமே வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!

முன்னாள் போராளியொருவரது குழந்தையின் பிறந்த நாள்(05/03/2018) விழாவிற்கு முன்னாள் ஆயுதக்குழுக்களது தலைவர்கள் ஒன்று திரண்டு பங்கெடுத்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான குறித்த நபர் தற்போது புளொட் அமைப்பின் முக்கியஸ்தராகியுள்ளார்.அவ்வகையில் ஒட்டுக்குழு புளொட் தலைவர் த.சித்தார்த்தன், மத்திய குழு உறுப்பினரும், மாமனிதர் சிவராம் கொலை முக்கிய சூத்திரதாரியுமான ஆர்.ஆர் எனப்படும் இராகவன் அவ்வமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டோர் விழாவில் பங்கெடுத்திருந்தனர்.இதேவேளை பிளவுண்ட ஈபிஆர்எல்எவ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நீண்ட இடைவெளியின் பின்னர் ஒரே வைபவத்தில் பங்கெடுத்துள்ளனர். சுரேஸ்பிறேமசந்திரன், வரதராஜாப்பெருமாள்சுகு மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய ஈ.பி.டி.பி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா,அதிலிருந்து வெளியேறிய வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா என அனைவரும் வருகை தந்திருந்தனர்.இதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான பசீர் காக்கா போன்றவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

(“ஒன்று கூடிய முன்னாள் ஆயுதக் குழுக்களின் தலைவர்கள்!! யாழ் நகரில் கோலாகல விருந்து!!” தொடர்ந்து வாசிக்க…)

துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், அதனை நிறைவேற்றுமாறு இன்று (11), உத்தரவிட்டுள்ளது.

(“துமிந்தவின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது” தொடர்ந்து வாசிக்க…)