தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது

 

இலங்கை மார்க்சிய – லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யின் முக்கிய செயற்பட்டாளரும், ‘தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி’ (NLFT) ‘தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி’ (PLFT) என்ற அமைப்புகளை ஸ்தாபித்து வழிநடாத்தியவருமான தோழர் வி.விசுவானந்ததேவன் மறைந்து இவ்வருடம் (15.10.2016) முப்பது ஆண்டுகளாகின்றன.

(“தோழர் விசுவானந்ததேவன் நினைவு நூல் வெளிவந்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

சம உரிமை இயக்கம் நடாத்தும் கலாச்சார விழா

 

சம உரிமை இயக்கம் நடாத்தும். எனினும் நாம் பறப்போம் கலாச்சார விழா, நாளை தொடக்கம் மூன்று நாட்கள் தொடர்ந்து யாழில் நடைபெறவுள்ளது அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வடக்கும் கிழக்கும் இணைவது

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிமன்றத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும்.

(“வடக்கும் கிழக்கும் இணைவது” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் : ராஜன் ஹூல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எழுக தமிழ் போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவதனை அல்லது மாணவர்கள் பங்கேற்பதனை துணை வேந்தர் தடுத்திருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாக உள்ளன.

‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு

“எழுக தமிழ்” பேரணியில் முன்வைக்கப்பட்ட விடயங்களையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் நியாய பூர்வமான கருத்துகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரவு அளிக்கிறது என, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

(“‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு ‘நாம் ஆதரவு’: இ.தொ.கா தெரிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சி.வியை கைது செய் – உதய கம்மன்பில

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

(“சி.வியை கைது செய் – உதய கம்மன்பில” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜெருசசேலத்தை, இஸ்ரேலின் தலைநகரமாக, ஐக்கிய அமெரிக்கா அங்கிகரிக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன்’தெரிவித்ததாக, அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு நடைபெருமானால், ஐக்கிய அமெரிக்க கொள்கையின் பாரிய மாற்றமாக இது அமையும்.

(“இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!

எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் நடத்துவோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

(“தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!” தொடர்ந்து வாசிக்க…)

மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்

 

தேனீருக்கும் நமக்குமான இந்த ஆத்மார்த்தமான உறவின் அடிநாதமான தேயிலை தோட்டங்கள் எப்படி உருவாகின ??  தினம் தினம் குழவி கொட்டுக்கும் அட்டை கடிக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்கும் இறையாகி கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் யார் ??? எமது வரலாற்றின் பக்கங்கள் துயர் நிறைந்த சிவப்புத் தேயிலைச் சாயத்தில் எழுதப்பட்டவை.

(“மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்” தொடர்ந்து வாசிக்க…)