பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

பிரபல மக்கள் தொடர்பாளரும், தமிழ் சினிமாவின் நடமாடும் என்சைக்ளோபீடியாவாக திகழ்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88 அவரின் மரணம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த பிலிம் நியூஸ் ஆனந்தன், 1928ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது இயர் பெயர் மணி. பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது, கதை வசனம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதுவே அவரது கலை ஆர்வத்திற்கு வித்தாக அமைந்தது.

(“பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்சில் தமிழர் நாசகார சக்திகளால் வன்முறை

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(“பிரான்சில் தமிழர் நாசகார சக்திகளால் வன்முறை” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்றை பொய்யாக்கும் பொன்காந்தன்.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்கள் வரலாற்றின் புதல்வர்கள்!- பொன்காந்தன்
2009ம் ஆண்டு கொடூரமான இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் வரை பயணித்த அனைத்து தமிழ் மக்களும் வரலாற்றின் புதல்வர்கள் என கவிஞர் பொன்கந்தன் குறிப்பிட்டுள்ளார்.

(“வரலாற்றை பொய்யாக்கும் பொன்காந்தன்.” தொடர்ந்து வாசிக்க…)

தெறி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததா? ஒரு பார்வை

தெறி படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியாகியுள்ளது. விஜய்-அட்லீ முதன் முறையாக இணையும் படம் என்பதை தாண்டி ஜி.வி.பிரகாஷிற்கு இது 50வது படமும் கூட. இதனாலேயே இப்படத்தின் பாடல்கள் மீது எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.

(“தெறி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்ததா? ஒரு பார்வை” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரிய உதவியாளர்கள் தமது உரிமைகளுக்காய் அணித்திரள வேண்டும்

(மக்கள் ஆசிரியர் சங்கம்)

 

ஆசிரிய உதவியாளர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற போதும் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்கள் அணித்திரள வேண்டும் என மக்கள் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு எஸ்.மோஹன் அச் சங்கம் 12.03.2016 அன்று கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். சுமார் 250ற்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆசிரியர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கவும் மாணவர்களின் கல்வி உரிமையையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனினும் ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை சட்டரீதியாக பெற்றக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

(“ஆசிரிய உதவியாளர்கள் தமது உரிமைகளுக்காய் அணித்திரள வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை

2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை மேல் மாகாணம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் 6 இடங்களை கொழும்பு மாவட்டம் பெற்றுள்ளது. முதலாம் இடத்தை விசாகா வித்தியாலய மாணவியும் இரண்டாமிடத்தை நாலந்தா கல்லூரியும் மூன்றாமிடத்தை தேவி பாலிகா வித்தியாலயமும் கைப்பற்றியுள்ளன.மூன்றாமிடத்தை இரு மாணவர்களும் 7 ஆம் இடத்தை இரு மாணவர்களும் 8 ஆமிடத்தை மூன்று மாணவர்களும் பெற்றுள்ளனர்.

(“முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை” தொடர்ந்து வாசிக்க…)

இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தாதியொருவரை, யாழ்.பொலிஸார் விசாரணைக்கு என அழைத்து பின் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். போதனா வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களாலும் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்று சனிக்கிழமை (19) தொடர்ந்து இடம்பெறுகிறது.

(“இன்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வானவில் 63 வெளிவந்துவிட்டது

இந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவாத நாடா?

இந்தியாவின் இந்துத்துவ வலதுசாரி அரசாங்கமும், இலங்கையின் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கமும் இரு நாடுகளுக்கிடையிலும் செய்து கொள்ள  உத்தேசித்துள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (Economic and Technical Cooperation Agreement – ECTA) என்ற பெயரிலான உடன்படிக்கைக்கு  இலங்கையின் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகள் மத்தியிலும், மக்களிடத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையின் தொழில்நுட்ப, விஞ்ஞானத்துறையில் ஆதிக்கம் செலுத்தவும், நமது பொருளாதாரத்தை இந்தியா கட்டுப்படுத்தவுமான சூழல் நிச்சயம்ஏற்படும் என்ற காரணத்தாலேயே, இலங்கையர்களில் கணிசமானோர் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர்.

(https://manikkural.files.wordpress.com/2016/03/vaanavil-63_2016.pdf)

 

ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தால், விடுக்கப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு, கலைப்பீடத்திலுள்ள மாணவிகள், எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடப் பீடாதிபதியால் கொண்டுவரப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு, கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அதற்குச் சில நாட்களின் பின்னர் கூடிய கலைப்பீட மாணவர் ஒன்றியம், குறித்த ஆடைக்கட்டுப்பாட்டைப் தொடர்வதற்கு முடிவெடுத்தது.

(“ஆடைக்கட்டுப்பாடுக்கு மாணவிகள் எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு

பிரபல நடிகர் கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து கலாபவன் மணி இறந்த அன்று அவரின் பண்ணை வீட்டில் இருந்த வேலைக்காரர்கள் 3 பேரைக் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த கலாபவன் மணி கடந்த 6ம் தேதி திடீர் என்று இறந்தார்.இது தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

(“கலாபவன் மணி வயிற்றில் பூச்சி மருந்து இருந்தது கண்டுபிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)