இந்தோனேசியாவில் இனப்படுகொலை

இந்தோனேசியாவில், பல இலட்சம் கம்யூனிச சந்தேகநபர்கள் அழிக்கப் பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணப்படும் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இனப்படுகொலையில் பங்கெடுப்பதற்காக, கத்தோலிக்க இளைஞர்களை அணிதிரட்டிய, டச்சு – கத்தோலிக்க பாதிரியார் பற்றி அதிலே அதிக கவனம் செலுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த எசுயிஸ்ட் பாதிரியார் யோப் பேக் (Joop Beek) சர்வாதிகாரி சுகார்த்டோவுக்கு நெருக்கமானவராக இருந்தார். கத்தோலிக்க மாணவர்களை அணிதிரட்டி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இனப்படுகொலையில் பங்கெடுக்கச் செய்தார்.

(“இந்தோனேசியாவில் இனப்படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளை நம்பியோர் கொல்லப்படுவார்…….?

சமாதான காலத்தில் சரிக்கப்பட்ட தோழர் சுபத்திரன்.(றொபேட்) சுபத்திரனின் தந்தையார் தம்பிராஜா இலங்கைப் பொலிசில் கடமையாற்றியவர். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுபத்திரன் ஈ பி ஆர் எல் எஃப் என்ற காரணத்தால் அவரது குடும்பம் புலிகளால் நாடு கடத்தப்பட்டது. சுபத்திரனின் தாயார் கனடாவில் காலமானார். சமாதான காலத்தில் சுபத்திரன் புலிகளின் தளபதியான இளம்பரிதியுடன் உறவாக இருந்தார். இளம்பரிதி(முன்னாள் ஆஞ்சினேயர்) தனது ஊரை சேர்ந்தவர் என்பதால் தன்னை கொல்லமாட்டார்கள் என்று தோழர் சுபத்திரன் நம்பி விட்டார். ஆனால் புலியை நம்பியது சுபத்திரனின் தவறு. யாழ் வேம்படி மகளிரி கல்லூரிக்கு அருகாமையில் வசித்த சுபத்திரன் தந்து வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேம்படி மகளிர் கல்லூரி மாடியிலிருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை நிகழ்த்தியவன் புலிகளின் யாழ் பொறுப்பாளர் ஈஸ்வரன்.

(Rahu Rahu Kathiravelu)

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 06 பேர் மயக்கம்

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக மூன்றம்சக் கோரிக்கையை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகளில் 06 பேர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, திருகோணமலை தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையில்லா தமிழ்ப் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் பி.தட்சாயன் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (02) 04 பேரும் சனிக்கிழமை (03) 02 பேரும் மயக்கமடைந்ததாகவும் அவர் கூறினார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வேலை வழங்கவேண்டும், அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பட்டதாரிகள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண் கொள்ளை ஒரு தொடர் கதை

இயக்கத் தேவைகளுக்காக புளொட் அமைபின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் மண் வியாபாரம் செய்து கொண்டிருந்தனா. புலிகளும் மண் வியாபாரம் செய்தனர். புளொட் அமைப்பின் யாழ்.மாவட்ட முக்கியஸ்தர் ரவிமூர்த்தியும், இன்னொரு உறுப்பினரும் அரியாலைக்கு மண் அள்ளச் சென்றனர். அப்போது அங்கு அங்கு வந்தார் ரிச்சார்ட். “நாம் மட்டுமே இதனை எடுக்கமுடியும்” நீங்கள் வேறெங்காவது சென்று பாருங்கள்” என்றார் ரிசார்ட். ரவிமூர்த்தி கேட்கவில்லை. பிரச்சனைப்பட்டார். ரிச்சார்ட்டுக்கு பொறுக்கவில்லை. பிஸ்டலை எடுத்து ரவிமூர்த்தியை சுட்டு விட்டார்.மற்றொரு புளொட் உறுப்பினரையும் சுட்டார். இருவரும் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டனர். பின்பு 2009 மே மாதத்தின்பின்பு மண் கொள்ளையில் புலிகளின் விண்ணன் என்பவர் ஈபிடிபி இன் மகேஸ்வரி நிதியத்திற்காக மண் கொள்ளையில் ஈடுபட்டார். இலங்கைத் தமிழ் மக்களின் மண்ணைக் கொள்ளை செய்வதில் பேரினவாத அரசுகள் தொடர்ந்தும் ஈடுபட்டும் வருகின்றனர். இதனை எதிர்த்து மூர்கத்தனமாக போராடிய விடுதலை அமைப்புக்களே பின்பு மண் கொள்ளையிலும் ஈடுபட்டனர்.எனவே மண் கொள்ளை என்பது ஒரு தொடர் கதை.

Sun Sea கப்பலில் போர்க் குற்றவாளிகள்

எம்.வீ.சன்.சீ.கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் வரையில் இந்த கப்பலில் கனடாவைச் சென்றடைந்தனர். இந்த கப்பலில் உள்ள அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடினமான விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். தற்போது இரண்டு பேர் யுத்தக்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

ஆனந்த ராஜா, யாழ் மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை. சுட்டுக்கொன்ற புலிகள்

ஆனந்த ராஜாவை சுடுமாறு கட்டளையிட்டவர் கிட்டு. யாழ்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் சுட்டவர் ரிச்சார்ட். ரிச்சார்ட் அரியாலையை சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர். இப்போது ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார். யாழ்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத்தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் வாசியாகிவிட்டார்.ரணில் புலிகள் சமாதான காலத்தில் புலிகளால் சுட்டுக்கொல்லப்ப்ட்ட யாழ் மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை. சுட்டுக்கொன்ற புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் இப்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறான், எனது தம்பிதான் இராசதுரையைக் கொன்றதென்று சொன்னவன் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறான்.

சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி யாழ்பாண கல்விமான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவாகள் உடனடியாக உரிமை கோரவேண்டும் என்று குரல் எழுப்பினார்கள் யாழ்-பல்கலைகழக மாணவர்கள். யாழ்.மாவட்ட அதிபர்கள் சங்கம், யாழ்-பிரஜைகள் குழு, சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை கொலைக்கு கண்டனம் தெரிவித்து 28.06. 85 அன்று ஒருநாள் பாடசாலை அடைப்புக்கும், கடையடைப்புக்கும் அழைப்பு விடுத்தன.

யாழ்.நகரின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்பு பட்டிகளோடு காணப்பட்டனர். இயக்கம் ஒன்றுதான் கொலைக்கு காரணம் என்று மெல்லக் கசியத் தொடங்கியது. ஆனாலும் ஆனந்தராஜா கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சலான நடவடிக்கைகள் தெடரவே செய்தன. இதற்கிடையே யாழ்பாண பொலிஸ் தலைமைக் காரியாலயம் ஒரு அறிவித்தலை வெளியிட்டது. “ஆனந்தராஜா கொலை பற்றிய தகவல் தருவோருக்கு 5 இலச்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று அந்த அறிவித்தல் தெரிவிக்கப்பட்டது.

அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச்சடங்கில் பெருமளவில் மாணவாகளும், பொதுமக்களும் திரண்டால் தமது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் போகும், அதனால் அவரது சடலத்தை யாழ்.பொது மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்ல அவரை சுட்ட இயக்கம் முயற்சித்தது. ஆனால் குறிப்பிட்ட இயக்க உறுப்பினர்கள் மருத்துவ மனைக்கு சென்ற போது மாணவர்கள் கூடி நின்றமையால் கடத்தல் முயற்சி கைவிடப்பட்டது.

அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர். சென்-ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள சவச்சாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் கொலைக்கு யார் காரணம் என்பதும், சம்பந்தபட்ட இயக்கம் மூலமாக வெளியே வந்தது.

கொலைக்கு உரிமை கோரியவர்கள் புலிகள். யாழ.நகரமெங்கும் உரிமை கோரும் சுவரரெட்டிகள் புலிகள் அமைப்பினரால் ஒட்டப்பட்டிருந்தன. ஆனந்தராஜாவின் படையினரோடு உறவுகளை வைத்திருந்தார். எச்சரித்தும் கேட்கவில்லை என்று புலிகள் காரணம் சொல்லியிருந்தார்கள். புலிகளே ஆனந்தராஜாவைச் சுட்டார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி, மாணவாகள் மத்தியில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்ட நிலையில்- தவிர்க்க முடியாமல் புலிகள் உரிமைகோர வேண்டியேற்பட்டது.

“ஆனந்தராஜாவை ஏன் சுட்டீர்கள்?”என்று கிட்டுவின் நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு கிட்டு சொன்னார் : “அப்படி ஒருவரை போட்டால்தான் மற்றவர்கள் பயப்பிடுவார்கள். இத்தனைக்கும் ஆனந்தராஜா ஈழமாணவர் பொது மன்றத்தோடு(G:U:E:S)தொடர்பாக இருந்தவர். “பாடசாலை நேரம் தவிர ஏனைய நேரங்களில் மாணவர்களை அழைத்து போராட்ட பிரசார வகுப்பு நடத்தலாம் தனது ஒத்துழைப்பு இருக்கும்” என்று (G:U:E:S) அமைப்பிடம் கூறியிருந்தவர்.

யாழ்-பிரஜைகள் குழுவில் ஒருவராக இருந்தமையால், யாழ்பாணத்தில் கைது செய்யப்படும் இளைஞர்களது பெற்றோர்கள் ஆனந்தராஜாவிடம் ஓடுவார்கள். படை அதிகாரிகளை சந்தித்து கைதானவர்களின் விடுதலை தொடர்பாக பேசுவார் ஆனந்தராஜா. ஆனால், ஆனந்தராஜாவுக்கு புலிகளைப் பிடிக்காது. இராணுவத்தினருடன் சினேகபூர்வ கிரிகெட் ஆட்டத்திற்கு ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன.

“கிரிகெட் போட்டி நடத்தவேண்டாம்” என்று ஆனந்தராஜாவிடம் புலிகள் சொன்னார்கள். “நீங்கள் படைகளோடு போர் நிறுத்தம் செய்திருக்கிறீர்கள். நாங்கள் கிரிகெட் போட்டி நடத்துவது மட்டும் எப்படி தவறாகும்?” என்று சொல்லிவிட்டார் ஆனந்தராஜா. அதுதான் கிட்டுவுக்குக் கோபம்.“மண்டையில் போடு”என்று சொல்லிவிட்டார். அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்ட ரிச்சார்ட் இயக்கத்தைவிட்டு விலகும் முன்னர் மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையையும் இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன். பலியானார்கள். இதுவும் 1985 ல் தான் நடந்தது.

மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை – ஜனாதிபதி

யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை – ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார்.

(“மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை – ஜனாதிபதி” தொடர்ந்து வாசிக்க…)

வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்

  • இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை
  • 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு இலங்கை உட்பட 13 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்கப் படுத்தும் நோக்கில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையொன்றை முன்வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது. இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட நகல் வரைபு உத்தியோகபூர்வமற்ற சந்திப்புக்களில் விவாதிக்கப்பட்டு மாற்றங்களுடன் கடந்த 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நகல் பிரேரணைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, வடஅயர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.

(“வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய சில மாதங்களுக்கு முன்னர் இப்பனிப் போர் ஆரம்பம் ஆகி உள்ளது. உண்மையில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டில் தலைவர் ரவூப் ஹக்கீம் காணப்பட்டார், இதற்கு சுய நல காரணங்கள் இருந்து இருக்க வேண்டும்.

(“மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்!” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்

  • குழப்பத்தை தவிர்க்க ரஷ்ய-அமெரிக்க இராணுவம் அவசர சந்திப்பு

சிரியாவில் இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா மற்றும் ரஷ்ய இராணுவங்கள் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த விருப்பதாக இரு நாடுகளினதும் இராஜதந் திரிகள் குறிப்பிட்டுள்ளனர். இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்று அழைக்கப்படும் குழு மீது கடந்த புதனன்று சுமார் 20 ஏவுகணை தாக்குதல்களை நடத்தி யதாக ரஷ்ய பாதுகாப்பு அதிகரிகள் அறிவித்தனர். எனினும் ரஷ்யாவின் இலக்குகள் ஐ.எஸ்ஸை தவிர்த்து சிரிய ஜனாதிபதி அஸாத்தின் எதிர்த்தரப்பினராக இருக்கக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் வெளி யிட்டுள்ளது. அமெரிக்காவும் ஐ.எஸ். மீது ஈராக் மற்றும் சிரியாவில் வான் தாக்குதல் களை நடத்தி வருகிறது.

(“ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்” தொடர்ந்து வாசிக்க…)