புலிகளை நம்பியோர் கொல்லப்படுவார்…….?

சமாதான காலத்தில் சரிக்கப்பட்ட தோழர் சுபத்திரன்.(றொபேட்) சுபத்திரனின் தந்தையார் தம்பிராஜா இலங்கைப் பொலிசில் கடமையாற்றியவர். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுபத்திரன் ஈ பி ஆர் எல் எஃப் என்ற காரணத்தால் அவரது குடும்பம் புலிகளால் நாடு கடத்தப்பட்டது. சுபத்திரனின் தாயார் கனடாவில் காலமானார். சமாதான காலத்தில் சுபத்திரன் புலிகளின் தளபதியான இளம்பரிதியுடன் உறவாக இருந்தார். இளம்பரிதி(முன்னாள் ஆஞ்சினேயர்) தனது ஊரை சேர்ந்தவர் என்பதால் தன்னை கொல்லமாட்டார்கள் என்று தோழர் சுபத்திரன் நம்பி விட்டார். ஆனால் புலியை நம்பியது சுபத்திரனின் தவறு. யாழ் வேம்படி மகளிரி கல்லூரிக்கு அருகாமையில் வசித்த சுபத்திரன் தந்து வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வேம்படி மகளிர் கல்லூரி மாடியிலிருந்து சினைப்பர் தாக்குதல் மூலம் புலிகளால் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை நிகழ்த்தியவன் புலிகளின் யாழ் பொறுப்பாளர் ஈஸ்வரன்.

(Rahu Rahu Kathiravelu)