ரஷ்யப் புரட்சியாளரும், அறிவியல் எழுத்தாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் இவரே.
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
இந்நிலை தொடர வேண்டுமா?
(Janaki Karthigesan Balakrishnan)
இலங்கையில் இனத்தால், மொழியால் மனிதர் பலியாகி, மதங்களால் மனிதர் பலியாகும் படலம் ஆரம்பித்துள்ளது. அவற்றை செய்திகளாகவும், வதந்திகளாகவும், ஊகங்களாகவும் பரப்பி, பின் அவற்றின் தாக்கங்களை கவிதைகளில் வடித்தெடுத்தும், இலக்கியங்களில் படைத்தும், வரலாற்றுக் காவியங்களுமாக்கிச் செல்கின்றோமே தவிர, இவற்றை எப்படித் தவிர்ப்பது, அறவே ஒழிப்பது என்பதற்கான செயற்பாடுகள் ஏதுமின்றி, தொடர்ந்தும் அல்லலுறுகின்றோம், தவிக்கின்றோம்.
இலங்கை குண்டு வெடிப்பும் அதன் தொடர்ச்சியும்
(சாகரன்)
யேசு உதிர் எழுந்தார் என்று நம்பப்படும் ஈஸ்ரர் ஞாயிறு அன்று இலங்கையில் 9 இடங்களில் கத்தோலிக்க தேவாலயம் உல்லாசப் பயணிகள் தங்கும் இடம் உல்லாசப்பயணிகள் அதிகம் பார்வையிடும் இடங்களில் குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு நீர்கொழும்பு மட்டக்களப்பு என மக்கள் அதிகம் கூடுவார்கள் என்று எதிர்பார்கப்பட்ட இடங்களில் நேரங்களில் இந்த பலமிக்க குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுவரை இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்ததாகவும் ஐநூறிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அறிய முடிகின்றது. பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவர். சந்தேகத்தின் பெயரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதான செய்திகளும் வருகின்றன.
India குடியரசுத்தலைவர் பார்வைக்கு
வேண்டாம் சாதி மத இன பேதங்கள்
பாரிஸ் Notre Dame எரிகிற செய்தி கேள்விப்பட்டபோது நினைவுக்கு வந்தது
நீர்வேலி வாழை
(வேதநாயகம் தபேந்திரன்)
நீர்வேலி என்றவுடன் கண்ணுக்கு முன்னால் வருவது வாழை. வாழைச் செய்கைக்கு மிகவும் பிரபலமான கிராமம். வேறு பல விவசாயக் கிராமங்களிலும் வாழைச் செய்கை உள்ளது. அதிலும் மண் விழும் நிலை வந்து விட்டது. மரபணு மாற்றப்பட்ட ஹவந்தீஸ் எனும் இன வாழை விவசாயிகளுக்கு தற்போது இலவசமாக வழங்கப்படுகின்றது.
பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி வன்முறை. தமிழ்த் தேசியவாதிகள் கள்ள மௌனம்.
(Kalai Marx)
ஒரு காலத்தில் நக்சலைட்டுகளுடன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் தனித் தமிழ் நாடு காண்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்திய பொன் பரப்பி கிராமத்தில், இந்த சாதிவெறிக் கலவரம் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்த சம்பவமானது, ஆளும் வர்க்கம் மக்களை பிரிப்பதற்கு, ஓட்டரசியல் எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
லிபியாவின் கடாபி
வரலாற்றுச் சூழல் அழைக்கிறது மாற்று அரசியல் தலைமைக்காக ஒருங்கிணைவோம்
நேர்காணல்
– முருகேசு சந்திரகுமார்
நேர் கண்டவர் – வாசுகி சிவகுமார்
தமிழரின் அரசியல் நகரமுடியாத நிலையில் மாற்றுத்தலைமையையும், மாற்று அரசியலையும் எதிர்பார்த்து நிற்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதைக்குறித்துப் பேசுகிறார் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார்.
தமிழ் மிதவாத அரசியல் சக்திகளிடத்திலே இருக்கின்ற எதிர்மறையான அம்சங்களைக் கணக்கில் கொள்ளாமல், ஊடகங்களும் மக்களும் பொது நிறுவனங்களைச் சேர்ந்தோரும் இனவாத அரசியலின் பின்னே கண்ணை மூடிச்செல்லும் அபாயத்தை இந்த நேர்காணலில் அவர் விளக்குகிறார்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்ட அரசியல் உரையும் வாழ்க்கை மேம்பாடும் சமூக சமத்துவமுமே தமிழ் மக்களுடைய அரசியல் தேவையாகும். இதையே தாம் முன்னெடுப்பதாக வலியுறுத்தும் முருகேசு சந்திரகுமார், மாற்று அணிக்கான கருக்கட்டலை இங்கே கோடி காட்ட முற்படுகிறார்.