சிறுவர் மனத் துஷ்பிரயோகம்

யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணியாற்றிய மன நல வைத்தியரான கலாநிதி.தயா சோமசுந்தரம் புலிகள் அதிகமாக விடலைப் பருவத்தினரை தமது இயக்கத்தில் சேர்த்ததை குறிப்பிட்டு ; 11 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து 15 வயதில் நான்கு வருடங்களாக புலிகளிலிருந்து “போராடிய” ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் பற்றி ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையாளருக்கு (The Independent) குறிப்பிட்டதை சாதாரணமான உதாரண சம்பவமாக கொள்ளமுடியாது.

(“சிறுவர் மனத் துஷ்பிரயோகம்” தொடர்ந்து வாசிக்க…)

மரண தண்டனை கூடாது

இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குல்பூஷணை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விசாரித்தது, தண்டனை வழங்கியது என்று எல்லோமே பரம ரகசியமாக வைக்கப்பட்டது. ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், அத்துடன் அவருக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், ஜாதவ் தொடர்பான புலன் விசாரணையிலும் வழக்கு விசாரணையிலும் அப்பட்டமாக வெளியே தெரியும் வகையில் பல குறைபாடுகள் இருக்கின்றன. 2016 மார்ச்சில் அவரைக் கைது செய்த உடனேயே அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அறிவுப்புடன் பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில் ஒலிபரப்பப்பட்ட தகவல்கள் முரண்பட்டி ருந்தன. அந்த ஒப்புதல் வாக்குமூலம் சட்டப்படி நீதிமன்றத் தால் ஏற்கப்படக் கூடியது என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு சாட்சியத்தையும் பாகிஸ்தானால் முன்வைக்க முடியவில்லை.

(“மரண தண்டனை கூடாது” தொடர்ந்து வாசிக்க…)

Response to Commentary by Mayor Tory – April 4th 2017, Toronto Star

Dear Mayor Tory,

I am writing in regards to your commentary of your trip to the Northern Province of Sri Lanka, published on the Toronto Star dated April 4th 2017.

I was born and raised in Sri Lanka and lived in the country until I migrated to Canada with my family in 2008.  Being a Tamil citizen myself, I had been exposed to hardships of the 30-year civil war. Since migrating to Canada, I have visited Sri Lanka several times and in turn have made multiple trips to Jaffna, amongst other cities in the Northern Province.

(“Response to Commentary by Mayor Tory – April 4th 2017, Toronto Star” தொடர்ந்து வாசிக்க…)

எனக்கு வேண்டாம் இந்த புத்தாண்டு….?

தொலைத்த உறவுகளைத் தேடும் இடையறாத போராட்டம்… தமது வாழ்விடங்களை விடுவிக்க மழை வெயில் பாராது போராட்டம்…. கற்ற படிப்பிற்கும், பெற்ற பட்டத்திற்கு வேலை வேண்டிப் போராட்டம்….. தனியார் கல்விநிறுவனங்களை உருவாக்காதே என்ற கோரிக்கைப் போராட்டம்…. மலையகத்தில் வாழ்வாதாரத்தை வேண்டி மௌனப் போராட்டம்….. வரட்சிக்கு நிவாரணம் கோரி டெல்லி வரை சென்று இடுப்பின் உடைகளை களைந்து போராட்டம்….. இதில் எதிலும் ஆளும் வர்க்கங்கள் அதிகம் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. போர் முரசு கொட்டும் வளைகுடாவும் போர் ஒத்திகை பார்க்கும் கிழக்கு கடலோரமும்….. சர்வதேச போர் நகர்வுகள்…. மனிதம் செத்துப் போகின்றதா..? என்ற அச்சநிலை ஆனால் இன்று பிறக்கும் தமிழ் சிங்கள வருடப் பிறப்பிற்கு மட்டும் மொழி மதம் இனம் கடந்து வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஆரவாரத்திற்கு குறைவுகள் இருக்காது…? இந்த வாழ்த்துக்களிலும் உண்மை இல்லை…. வாழ்த்தை ஏற்கும் மகிழ்வு நிலையிலும் மக்கள் இல்லை யாருக்கு வேண்டும் இந்த புதுவருடம்…? எனக்கும் வேண்டாம் இந்தக் கொண்டாட்டம்…? இது விரக்தியின் வெளிப்பாடு அல்ல விழிப்புணர்விற்கான அறைகூவல். போராடும் சக்திகளுக்கு ஆதரவழிப்போம் போராடுவதற்கான நிர்பந்தம் நாளை எங்கள் வீட்டுக்கதவையும் தட்டும் அதுவரை காத்திருந்தால் எமக்காகவும் போராட அன்று யாரும் வரப்போவது இல்லை.

மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள்

(என்.சரவணன்)

(இன்று ஜே.வி.பி. ஏப்ரல் கிளர்ச்சியின் 40வது வருட நினைவுநாள்…)

இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் 40 வது வருட நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருகின்ற இந்த வேளை அதன்போது கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. 1996ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் 25வது வருட நிகழ்வை நினைவை முன்னிட்டு சரிநிகரில் எழுதிய சிறப்புக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை எழுதுவதற்காக கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டாருடனும் பெற்றோருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வையிட்டேன். ஜே.வி.பி தோழர்கள் என்னுடைய இந்த பயணத்தில் உதவினார்கள். குறிப்பாக முற்றிலும் சிங்களப் பிரதேசமான அங்கு அன்றைய சமயத்தில் தமிழர்கள் அச்சமின்றி போய் வரும் நிலை இருக்கவில்லை. என்னோடு வந்த என் சக ஜே.வி.பி. தோழர்கள் என்னுடைய பாதுகாப்பில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டனர்.

மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் (*1) எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 – மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து சில நாட்களாக திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது.
(“மனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

வெருகல் படுகொலை

இன்று வெருகல் படுகொலை நினைவு நாள். கடந்த மாதம் 30ந் திகதி நாம் கந்தன் கருணைப் படுகொலை நினைவு நாளை நினைவு கொண்டு கடந்திருந்தோம். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பெயரில் விடுதலை இயக்கங்களால் செய்யப்பட்ட கூட்டுப் படுகொலைகளை கணக்கெடுக்க வேண்டிய காலம் இது. இந்தப் படுகொலைகளில்கொ ல்லப்பட்டவர்களது பெயர் விபரங்களை முழுவதுமாகத் திரட்டியே ஆக வேண்டும். இந்தச் சம்பவங்களில் பங்கு பற்றியவர்கள் மற்றும் சம்பவங்களிலிருந்து தப்பியவர்கள் என்று தற்போது எஞ்சியிருப்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்களிடமிருந்து கேட்டறிவதற்கும் அவற்றைத் தகுந்த முறையில் பதிவு செய்வதற்கும் இருக்கின்ற நாட்கள் மிக மிகக் குறைவே.

(“வெருகல் படுகொலை” தொடர்ந்து வாசிக்க…)

Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces

(By Carla Stea, Global Research, April 08, 2017)

There is no basis to the Trump Administration’s accusations that the government of Bashar al Assad was involved in deliberately triggering a chemical weapons attack with a view to killing Syrian civilians. This December 2013 article by Global Research’s Correspondent Carla Stea at UN Headquarters confirms that the “Opposition” rebels were in possession of chemical weapons. According to the UN mission report, Syrian soldiers as well as civilians were the target of chemical weapons attacks led by opposition rebels.

(“Syria: UN Mission Report Confirms that “Opposition” Rebels Used Chemical Weapons against Civilians and Government Forces” தொடர்ந்து வாசிக்க…)

ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத்தின் பாதையைச் செதுக்க வல்லவர்கள்.

(“ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை” தொடர்ந்து வாசிக்க…)

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக பதிவேறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தம்மோடு வாழ்ந்து மறைந்தவரை  நினைவு கூரல் மனித பண்புமட்டுமல்ல, அது நாலுகால் நன்றி உள்ள பிராணிக்கும் பொருந்தியதால் தான், ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் HMV (His Masters Voice) என்ற இசைத்தட்டு குறியீடே உருவானது.

(“மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.?” தொடர்ந்து வாசிக்க…)

வளைகுடாவில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிட்டது

(சாகரன்)
 
தந்தை அல் அசாத்தின்(Hafez al-Assad) ஆட்சியில் சமாதான பூங்காகவும் தனது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள் பலதும் இலவசமாகவும் வழங்கி நல்லாட்சி நடந்து வந்ததே சிரிய வரலாறு. கூடவே உலகெங்கும் விடுதலை வேண்டி நிற்கும் ஒடுகப்பட்ட மக்களின் விடுதலைக்கான தார்மீக ஆதரவை வழங்கி வந்ததும் இதே சிரியா. குறிப்பாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கும் அகதி வாழ்விற்கும் பக்கபலமாக நின்று உலகில் இன்றுவரை பாலதீனம் என்ற நாட்டையும் பாலஸ்தீன மக்களின் இருப்பை உறுதி செய்வதில் சிரியாவின் பங்கு மகத்தானது. சோவியத் யூனியனின் உடைவிற்கு 6 மாத காலத்தின் பின்பு தந்தையின் பொறுப்பை தனையன் ஏற்றுக்கொண்டு தந்தை வழியில் தனது ஆட்சிப் பயணத்தை தொடர்ந்தார்.

(“வளைகுடாவில் மீண்டும் ஆட்டம் தொடங்கிவிட்டது” தொடர்ந்து வாசிக்க…)