சம்பந்தனும், சுமந்திரனும் காரணமின்றி உள்ளே இருக்க மாட்டார்கள்!

அரசியலமைப்பைத் தயாரிக்கும் விடயத்தில் குறைபாடுகள் உருவாகும் பட்சத்தில் அவற்றை உள்ளிருந்து பேச்சுக்களைத் தொடர்வதன் மூலமும், கலந்துரையாடுவதன் மூலமுமே தீர்த்துக் கொள்ள முனைய வேண்டும். அதனை விடுத்து ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்ற விதத்தில் செயற்பட முனைவதால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது எட்டாக்கனியாகவே தொடரும்.

(“சம்பந்தனும், சுமந்திரனும் காரணமின்றி உள்ளே இருக்க மாட்டார்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி

இப்படியும் ஒரு IAS அதிகாரி …!!! இந்தியனே மோடியின் நர பலி முகத்தை மறந்துவிடாதே மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன – ஹர்ஷ் மந்தேர் IAS

(“மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் – பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி” தொடர்ந்து வாசிக்க…)

சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போராளிகள் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்து அல்லது அரசாங்கம் பெருமிதமாகச் சொல்வதைப்போல புனர்வாழ்வு பெற்று வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. ஆனால், வேலை வாய்ப்பில்லாமல் தங்களுடைய வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபையோ தமிழ்த்தேசிய அரசியலாளர்களோ அரசாங்கமோ இவர்களுக்கு உதவவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

(“சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுந்தரம் 35வது நினைவுதினம்!

“புதியபாதை “ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 35வது நினைவுதினம் இன்றாகும். 1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிள்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும். தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் “புதியபாதை” ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.

(“தோழர் சுந்தரம் 35வது நினைவுதினம்!” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்போம்!

(சாகரன்)

மதம், இனம், மொழி, தேசங்களைக் கடந்து உள்ளத்தால் இணையும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மனிதனுக்கு இருக்கும் சிறப்பியல்பான கடந்தகால நினைவுகளை மீட்டுப்பார்பதும், எதிர்காலம் பற்றி நம்பிக்கையும் தொடர்ந்தும் நடைபெறட்டும். நம்பிக்கையும், திட்டமிடலும், சகேதரத்துவமும், மனித நேயமும், சமூக நலன்சார்ச்த செயற்பாடும் எம்மை சமூகத்தில் நல்ல மனிதர்களாக தொடர்ந்தும் நிலைநிறுத்தும் . எமது வாழ்க்கை அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு இதனை மேலும் செழுமைப்படுத்தி செயற்பட முற்படுவோம் இதுவே எம்மை முன்னேற்றகரமா பாதையில் பயணிக்க ஆவன செய்யும். ஒரு நிறைவான வாழ்வை எமக்கு பெற்றுத் தரும்.

(“நம்பிக்கைகளுடன் புதிய வருடத்தை வரவேற்போம்!” தொடர்ந்து வாசிக்க…)

மறைக்கப்பட்ட வரலாறுகள்

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…
நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

(“மறைக்கப்பட்ட வரலாறுகள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)

(அக்கினி ஞானாஸ்ஞானம்)

“அடோ கொட்டியா கவத ஆவே இ போம்ப மொனவத் கெனாவத’( அடோ புலி எப்ப வந்தனி குண்டு ஏதாவது கொண்டு வந்தியா) என்று கொழும்பிலுள்ள எங்கள் தலைமையகத்தில் பணிபுரியும் சிங்கள நண்பர் சிரித்தபடியே என்னைக்கேட்டுக்கொண்டு கட்டித்தளுவினார்.
“ போம்ப நவே அம்ப கெனாவ” ( குண்டு அல்ல மாம்பழம் கொண்டு வந்தனான்) என்று நான் கூறி முடிக்கும் முன்னரே சமயலறையை நோக்கிப்பறந்தார் என் நண்பர். அங்கு பணிபுரியும் பலரும் என்னைக்கண்டவுடன் சுகதுக்கங்களை விசாரித்து வன்னி நிலவரங்களை கேட்டறிந்தனர்.

(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 4)” தொடர்ந்து வாசிக்க…)

தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..

7௦ களின் ஆரம்பத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கால் பதித்த பல ஆரம்பகால தமிழர் உரிமைப்போராட்ட போராளிகளில் தங்க மகேந்திரன் அண்ணாவும் ஒருவர். அதிகமாக வேஷ்டியே கட்டியிருப்பார். Trouser எப்போவாவது அணிவார். எத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் தங்க மகேந்திரன் அண்ணாவின் குரலும் கம்பீர சிரிப்பொலியும் எல்லோரையும் விஞ்சி நிற்கும். ஆஜானுபாகுவான தோற்றமும் இவருக்கே உரித்தானது. அக்கால இளைஞர்கள் பலரில் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

(“தங்க மகேந்திரன் அண்ணாவின் நினைவுகள்..” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி

என் ஆரம்பகால இயக்கத்தோழர்கள் ஒவ்வொருவராக மறைவது பெரும் துன்பத்தை எனக்குத் தருகின்றது..கமிலஸ், பத்மநாபா, புஷ்பராஜா, பிரான்சிஸ் ,சந்திரமோகன் வரிசையில் இப்போது தங்கமகேந்திரன். தமிழ் இளைஞர்பேரவை, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் [TLO ..Tamil Liberation Organisation ]ஆகிய இயக்கங்கங்களில் இவரோடு இணைந்து முழுமூச்சாக இயங்கிய நாட்களை நினைத்துப்பார்க்கின்றேன்.

(“தோழர் தங்க மகேந்திரன் பற்றி போராட்ட அனுபவங்கள் – புஷ்பராணி” தொடர்ந்து வாசிக்க…)

திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்க ஆரம்ப தலைமைகளில் ஒருவரான தங்கமகேந்திரன் காலமானார் என்ற செய்தியை கேட்டதும் என் நினைவுகள் பின்நோக்கி சென்றது. கிழக்கு மாகாணத்தில் வீசிய சூறாவளி புனர்வாழ்வு பணிக்கு தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் சார்பாக நிவாரண பொருட்களை பொதி செய்யும் வேலைக்கு எம்மை அழைத்தார் கதிரவேலு தேவானந்தா. அதே வேளை புனர்வாழ்வு வேலையில் ஈடுபட விரும்புபவரை மட்டக்களப்பு அனுப்பும் முயற்சியும் எடுக்கப்பட்டது. அப்போது மட்டக்களப்பு பிராந்திய பெற்றோலிய கூட்டுஸ்தாபன தலைவராக இருந்தவர் தேவாவின் தந்தை. சேதாரங்கள் பற்றி அறிய அவர் மட்டக்களப்பு பயணிக்க முற்பட்ட வேளை அவரது வாகனத்தில் நானும் தொற்றிக்கொண்டேன். இரத்தினபுரி பதுளை செங்கலடி ஊடான பயணம் அது.

(“திருமலை மைந்தன் தங்கமகேந்திரன் மறைந்தார்.” தொடர்ந்து வாசிக்க…)