முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை. (“புலிகளின் மனமாற்றமும் மதமாற்றமும்” தொடர்ந்து வாசிக்க…)
Category: அரசியல் சமூக ஆய்வு
Political & Sociology Research
புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் – சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய புத்தகம்
புலிகள் அமெரிக்காவுக்கு கடன்பட்டுள்ளனர் என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு முற்றாக அழிக்கப்பட்டதால், அமெரிக்காவின் எதிர்பார்ப்பு முற்றாக சிதைந்து போனதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற அரசியல் ஆலோசகரான தயா கமகே என்ற முன்னாள் சிங்கள அதிகாரி இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
“பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை
மோடி அரசின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் நான் ஒன்றைச் சொல்லி வருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். அது:
“அரசு மக்கள் மீது தன் இருப்பை மேலும் மேலும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.”
அரசு ஒரு மிகப்பெரிய சுமையாக நம் மீது அமர்ந்திருப்பது மட்டுமல்ல, அரசை மறந்து நீங்கள் ஒரு கணமும் இருக்க இயலாது எனும் நிலையை மோடியின் ஆளுகை உச்சபட்சமாக நிலை நிறுத்துகிறது.
(““பணிவு” : உலகின் ஆகப் பெரிய கெட்டவார்த்தை” தொடர்ந்து வாசிக்க…)
பற்குணம் A.F.C (பகுதி 90)
இந்திய இராணுவ வருகையின் பின்பு மக்களின் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பியது.பல கிழக்குமாகாண மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள்.இவர்களில் சிலர் திரும்பி போவதற்கு பணமின்றி பற்குணத்திடம் உதவி கோரினார்கள்.தன்னால் முடிந்தவரை உதவினார்.
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)
(அக்கினி ஞானாஸ்ஞானம்)
வலிகாமத்திலிருந்து வந்த மக்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க எமது நிறுவனமும் தனது பணியாட்களின் தொகையை உயர்த்த வேண்டியிருந்தது. பதவி வெற்றிடங்களை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விண்ணப்பதாரிகளின் சுயவிபரக் கோவைகளைப் பரிசிலீத்து நேர்முகப்பரீட்சை நடாத்தி பணியாட்களை தெரிவு செய்ய நீண்ட நாட்கள் எடுக்கும். எனவே எனக்கு தெரிந்தவர்கள் மூலம் சிலரை நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருந்தேன். 8 வெற்றிடங்கட்கு 20 பேர் நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் அளித்திருந்தனர்.
(“முள்ளுள்ள புதர்களின் மத்தியில் (அத்தியாயம் 3)” தொடர்ந்து வாசிக்க…)
ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன. (“ஜெயலலிதா இல்லாத தமிழகமும் இலங்கையும்” தொடர்ந்து வாசிக்க…)
மோடியும், டாக்ஸி ட்ரைவரும்
நேற்று உயிர்மை பதிப்பக விழாவிற்காகச் சென்னைக்குப் போயிருந்தேன். மதிய நேரம் என் மகள் வீட்டுக்குப் போய்விட்டு, மாம்பலத்தில் உள்ள லாட்ஜுக்குத் திரும்பிட, ஊபர் கேப்ஸ் மூலம் கார் பதிவு செய்தேன். வந்த காரில் ஏறினேன். 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் என்னிடம் சொன்னார். ‘’ சார் தயவுசெய்து Paytime-இல் புக் பண்ணாதீங்க. எல்லாரும் அப்படித்தான் செய்யுறாங்க. வண்டிக்குப் பெட்ரோல் போடணும் . தயவுசெய்து பணமாகத் தாங்க” என்று கெஞ்சினார்.
இரு ஆளுமைகள்… சில நினைவலைகள்!
(சசிகுமார்)
தமிழ்நாட்டின் வடக்குக் கடலோரப் பகுதியில் சமீபத்தில் வீசிய ‘வார்தா’ புயல், ‘எனக்குப் பிறகு பெரிய பிரளயம்தான்’ என்ற பழமொழியை நினைவுபடுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுடன் அதை ஒப்பிடத் தோன்றியது. தமிழக அரசியல் இப்போது புதிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.
தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்
இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்;டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது. சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் மேய்ப்பர்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கிபிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது.
(“தோழர் சுபத்திரன் – றொபேட் இன்று அவரது 59 வது பிறந்த தினம்” தொடர்ந்து வாசிக்க…)
அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஊடகங்கள் எதைச் சொல்லுகின்றன என்பதை விட எதைச் சொல்லாமல் தவிர்க்கின்றன என்பது முக்கியமானது. சொல்லாமல் தவிர்க்கப்படுகிற விடயங்களின் அரசியல் முக்கியத்துவம் பெரிது. எமக்குச் சொல்லப்படுபவை உண்மைகளா என்பதைத் தேடியறிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறோம் என்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டுமொருமுறை நினைவூட்டியுள்ளன.
(“அலெப்போ: சிரிய யுத்தத்தின் திருப்புமுனை” தொடர்ந்து வாசிக்க…)